siragadikka aasai

சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறித்த பாட்டி.. பயந்து ஓடும் முத்து.. சிறகடிக்க ஆசை இன்றைய ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் எப்படியாவது முத்து மீனாவை சேர்த்து வைத்து விட வேண்டும் என பாட்டி போராடி வருகிறார். அண்ணாமலை முத்து மீனாவிடம் தொடர்ந்து சண்டை போட்டு வருவதனால் தனது அம்மாவின் மூலம் சேர்த்து வைத்து விடலாம் என்பதற்காக கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார்.

பாட்டியும் இவர்களை கோவிலுக்கு அனுப்புகிறார் மேலும் பல முயற்சிகளை செய்து வரும் நிலையில் இருந்தாலும் பெரிதாக மாற்றமில்லை. இவ்வாறு மீனாவும் பாட்டியிடம் நான் என்னதான் செய்தாலும் அவருடைய மனம் மாறவே மாட்டேங்குது எனக் கூறி வருத்தப்பட இந்த ஊரில் இருந்து கிளம்புவதற்குள் நான் அவனை மாற்றுகிறேன் என பாட்டி சொல்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் முத்துவின் அம்மா தனது பெரிய மகனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்காக நகைகள் மற்றும் பணத்தை வாங்குவதற்காக கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு தனது மாமியாரின் மனதில் இடம் பிடிப்பதற்காக தொடர்ந்து அனைவர் மேலும் பாசமாக இருப்பது போலும் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தும் வருகிறார்.

இதனை எல்லாம் பார்த்த முத்துவுக்கு அதிர்ச்சி ஆகிறது அம்மா இப்படிப்பட்ட ஆளே கிடையாது ஏன் இப்படி செய்கிறார்கள்? கண்டுபிடிக்க வேண்டும் என புலம்புகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் பாட்டி கோவிலுக்கு சென்று ஜோசியர் ஒருவரிடம் அவங்களுக்குள் நடக்கிற எதுவுமே நடக்கவில்லை எனவே நல்ல நாளா பார்த்து சொல்லுங்க என கூற அதற்கு அவரும் இன்றைய நாளை அமோகமா இருக்கு இன்னைக்கு சாந்தி முகூர்த்தத்தை வச்சுக்கலாம் என பாட்டி சந்தோஷப்படுகிறார்.

இதனைப் பற்றி முத்து மீனாவிடம் கூற முத்து ஆள விடுங்க என ஊருக்கு கிளம்புகிறார். அப்பொழுது பாட்டி, பாட்டி ஒருத்தி இருக்கிறதே மறந்திடு என கூறி மிரட்ட பிறகு வேறு வழி இல்லாமல் முத்து இப்ப என்னதான் செய்ய சொல்றீங்க என கேட்கிறார். அதற்கு பாட்டி இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் நடந்தே ஆகணும் இல்லைனா இந்த ஊரு பக்கமே வராத என் முகத்திலேயே முழிக்காத என கூற முத்து மீனாவை பார்த்து யோசிக்கிறார்.

பிறகு முத்து நீங்க ஒரு முடிவு பண்ணிட்டீங்கன்னா அதுல இருந்து மாறப்போவதில்லை உங்க இஷ்டப்படி ஏதோ பண்ணுங்க என சொல்ல அதற்கு பாட்டி இப்பதாண்டா நீ என் பேரன் என கூறுகிறார் மீனாவும் சிரிக்க இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது

படையப்பா பாடலுடன் வெற்றி வாகை சூடும் தமிழ்.! கோதைக்கு இப்படி ஒரு நிலைமையா.! தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தொடர்ந்து பரபரப்பான எபிசோடுகளுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் அசோசியேஷன் எலக்சன் நடைபெற்ற நிலையில் அதில் தமிழும் கோதை எதிர எதிராக இன்றைய போட்டி போட்டுக் கொண்ட நிலையில் பரபரப்பான எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வந்தது.

இந்நிலையில் கோதை தமிழை எப்படியாவது தோற்கடித்து இந்த எலக்ஷனில் தான்தான் வெற்றி பெற வேண்டும் என தனது குடும்பத்தினர்களிடம் கூறிய நிலையில் இதற்காக அனைவரும் முயற்சி செய்து வந்தார்கள். மேலும் தமிழினை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அர்ஜுன், கார்த்தி இருவரும் குறுக்கு வழியில் பல கேவலமான வேலைகளை செய்தும் அனைத்து பிரச்சனைகளையும் உடைத்து தற்பொழுது தமிழ் எலக்ஷனில் வெற்றி பெற்று இருக்கிறார்.

இது மிகப்பெரிய மகிழ்ச்சியினை தந்துள்ளது. அர்ஜுன், கார்த்திக் இருவராலும் தமிழ் இந்த எலக்ஷனில் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதால் தொடர்ந்து பழிவாங்கும் எண்ணத்தில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் படையப்பா பாடலுடன் தமிழ் வர அங்கு இருக்கும் ஆபிஸர்கள் கையை கொடுத்த வாழ்த்துக்கள் கூறுகிறார்கள்.

அதற்கு தமிழும் தேங்க்ஸ் என கூறி வரும் நிலையில் இந்த நேரத்தில் கோதை, நடேசன், தமிழ், கார்த்தி நான்கு பெரும் வர அர்ஜூன் தமிழைப் பார்த்து முறைக்கிறான். அப்பொழுது கோதை தன்னிடம் இருந்த பூங்கொத்தை தமிழுக்கு கொடுத்து வாழ்த்துக்கள் என கை கொடுக்கிறார்.

அதற்கு நன்றி கூறுகிறார் தமிழ். இதனை அடுத்து ஆபிசர் ஒருவர் முன்னாள் தலைவர் என்ற முறையில் நீங்களே அழைச்சிட்டு போய் தலைவர அவருடைய சாரில் உட்கார வைங்க என கூற பிறகு கோதையும் தமிழைச் சேரில் உட்கார வைக்கிறார். இதனை அனைத்தையும் பார்த்து நடேசன், சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சி அடைய மற்ற கார்த்தி அர்ஜுனுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

குடும்பத்திற்காக பிரஸ்ட் கேன்சரை மறைக்கும் தனம்.! பரபரப்பாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒட்டுமொத்த குடும்பத்தினர்களுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மேலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு ஏற்பட இருக்கும் நிலையில் இதனை தனம், மீனா இருவரும் மறைக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் நெஞ்சுவளியால் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் இதனை வீட்டில் சில முறை சொல்லி இருந்தாலும் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் தற்பொழுது அது தனத்தின் உயிருக்கு ஆப்பு வைத்துள்ளது. அதாவது நெஞ்சு வலி நிக்காத காரணத்தினால் யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு பிரஸ் கேன்சர் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூற இதனால் அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறு தனம் நிற்பதை பார்த்துக் கொண்ட மீனா இங்கு எங்கக்கா வந்தீங்க எனக் கேட்க தனம் அதை இதையும் சொல்லியும் கிளம்பி விடுகிறார். எனவே தனத்தை நம்பாத மீனா டாக்டரை பார்த்து என்ன ஆச்சு அக்காவுக்கு எனக் கேட்க அவர் அனைத்து உண்மைகளையும் சொல்கிறார்.

எனவே வீட்டிற்கு வந்து தனத்தை அழைத்துக் கொண்டு டெஸ்ட் எடுப்பதற்காக மீனா மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு டெஸ்ட் எடுத்த பிறகு நாளைக்கு வந்தால் ரிசல்ட் கிடைக்கும் என கூறியிருக்கும் நிலையில் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என தனம் பயப்படுகிறார். அதேபோல் மீனாவும் அக்காவுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக இருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்.

இவ்வாறு இவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்து விட இவர்கள் கூறும் பதில் கூறத் தெரியாமல் உளறியதால் இவர்கள் இருவரும் பண்றது ஏதோ சரி இல்லை என ஐஸ்வர்யா, முல்லை மற்றும் மூர்த்தி நினைக்கிறார்கள். பிறகு மூர்த்தியும் உனக்கு நெஞ்சு வலி என்று சொன்னியே சரியாயிடுச்சு இல்ல எந்த பிரச்சினையும் இல்லை என கேட்க தனம் அப்படியெல்லாம் எதுவும் இல்லை மாமா என கூறிவிடுகின்றார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் தனம் மீனா இருவரும் மருத்துவமனைக்கு சென்று டாக்டரை பார்க்கிறார்களா அப்பொழுது அவர் பிரஸ் கேன்சர் செகண்ட் ஸ்டேஜ் எனக் கூற மீனா அதிர்ச்சி அடைய தனம் கதறி அழுகிறார். அப்பொழுது மீனா ஆறுதல் கூறுவதற்காக வர தனம் எனக்கு ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா மாமாவால எப்படி தாங்கிக்க முடியும் இதை வீட்டில் நான் எப்படி சொல்றது கூறிவிட்டு வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள் வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிடலாம் என மீனா சொல்ல ஆனால் தனம் வேண்டாம் என சொல்கிறார்.

Exit mobile version