THAMIZHUM-SARASWATHIYUM

வசுந்தரா மற்றும் குழந்தையை காப்பாற்றிய சரஸ்வதி.! கையெழுத்து கும்பிட்டு நன்றி கூறும் கார்த்தி.. கையில் குழந்தையை கொடுத்து கண் கலங்கும் சந்திரகலா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இதனை தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது மேலும் முக்கியமாக பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலும் டிஆர்பியில் டிரெண்டிங்காக இருந்து வருகிறது.

அப்படி குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தற்பொழுது தமிழ் சரஸ்வதி இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் புதிய கம்பெனி திறந்து உள்ளனர்.

தமிழின் அம்மா சரஸ்வதியிடம் பேசவில்லை என்றாலும் கார்த்தியின் மனைவி வசுந்தரா மிகவும் அன்பாக பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தமிழ் சரஸ்வதி இருவரும் அவர்களுடைய குடும்பத்தை விட்டு பிரிவதற்கு முக்கிய காரணம் வசுந்தராவின் அம்மா சந்திரகலா ஆவார்.

அவரும் இவர்களை எப்படியாவது குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என பல திட்டங்களை செய்து வந்த நிலையில் பிறகு ஒரு கட்டத்தில் தமிழ் சரஸ்வதி இருவரும் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து தனியாக வாழ ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் வசுந்தரா நிறைமாத கற்பனையாக இருக்கும் நிலையில் போன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து விடுகிறார்.

எனவே அப்பொழுது சரஸ்வதியிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு வசந்தரா கத்தும் சத்தம் கேட்கிறது. உடனே அவர் வீட்டிற்கு வந்து வசுந்தராவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அங்கு மருத்துவர்கள் ரத்தம் வேண்டும் என கூறுகின்றனர் சரஸ்வதி உடனே நான் ரத்தம் தருவதாக கூற இதனால் வசந்த்ரா மற்றும் அவருடைய குழந்தை இருவரும் உயிர் பிழைத்து விடுகிறார்கள்.

எனவே மருத்துவர் இவர்களிடம் நேரத்திற்கு வந்து சேர்த்து ரத்தம் கொடுத்த அவருக்கு நன்றி கூறுங்கள் என சந்திரகலாவிடம் கூற அவரும் நன்றி சொல்லிவிட்டு குழந்தையை சரஸ்வதியிடம் கொடுக்கிறார் இதனை பார்த்த கோதை கண்கலங்க பிறகு கார்த்தி கையெழுத்து கும்பிட்டு நன்றி கூறுகிறார்.

தமிழ் கம்பேனியை திறக்க விடக்கூடாது என அர்ஜுன் செய்த சம்பவம்.! கடைசியில் உதவிய நபர்.. கடை திறப்பு விழாவிற்கு வந்த சரஸ்வதி.. பெயர் என்னவா இருக்கும்.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் ஒளிபரப்பாகி வரும் சீரியலும் மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் இருந்து வரும் நிலையில் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும்.

பல பிரச்சினைகளுக்குப் பிறகு குடும்பத்தை பிரிந்த தமிழ் எப்படியாவது சொந்தமாக தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என முடிவு செய்கிறார். எனவே சாப்பிடுவதற்கு கூட தமிழும் சரஸ்வதியும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் சரஸ்வதி தான் வேலைக்கு போவதாக கூறுகிறார் ஆனால் தமிழ் சரஸ்வதி கஷ்டப்படக் கூடாது என்பதற்காக வேலைக்கு அனுப்பாமல் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் வெற்றிகரமாக புதிய கம்பெனியை தமிழ் நாளைக்கு ஓபன் செய்ய முடிவெடுத்து இருக்கும் நிலையில் அர்ஜுன் வழக்கம் போல் ஆபிஸருக்கு லஞ்சம் கொடுத்து அந்த கம்பெனியை திறக்க விடக்கூடாது என கூறுகிறார். அதேபோல் அந்த ஆபீஸ் வரும் நாளைக்கு கம்பெனி திறக்க முடியாது அப்படி திறந்தால் சீல் வைத்து விடுவதாக மிரட்ட இந்த நேரத்தில் மினிஸ்டர் தமிழை பார்த்து விடுகிறார்.

பிறகு அவர் ஆஃபீஸரை சந்தித்து இவர் நமக்கு வேண்டிய தம்பி எந்த பிரச்சனையும் வரக்கூடாது எனக் கூற உடனே அந்த ஆபிசர் சைன் போட்டு சொல்ல இதனால் அர்ஜுன் அவரிடம் சண்டை போடுகிறார். மேலும் கம்பெனி திறப்பு விழாவை பற்றி மினிஸ்டரிடம் கூற என்னலாம் கூப்பிட மாட்டியா என கேட்க அதற்கு கண்டிப்பாக வாங்க சார் நாளைக்கு நீங்கதான் திறந்து வைக்கிறீங்க என கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் அந்த மினிஸ்டர் வரும்போது சரஸ்வதியையும் தன்னுடன் அழைத்து வரும் நிலையில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். மேலும் அந்த கம்பெனிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் என தெரியாமல் இருந்து வரும் நிலையில் அவர் தனது அம்மா மேல் கோபமாக இருந்தாலும் சரஸ்வதி என்ற பெயரை வைப்பாரா? என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Exit mobile version