கோபியை மிரட்டும் ராதிகா.! மொத்த குடும்பத்தையும் உள்ள தூக்கி வச்சிருவேன் என ஈஸ்வரியை மிரட்டும் ராதிகாவின் அம்மா.! பரபரப்பாகும் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் சுவாரசியங்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோபி குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதற்கு தடுமாறி வந்ததால் செழியன் கோபியை அழைத்துக்கொண்டு ராதிகா வீட்டிற்கு செல்லாமல் தன்னுடைய வீட்டிற்கு கூட்டி வந்து விட்டான். அங்கு ஈஸ்வரி கோபி இனிமே இங்கதான் இருப்பான் அவன் இங்க இருந்தா தான் இனி ஒழுங்கா இருப்பான் என பாக்யாவின் குடும்பத்தாரிடம் வாக்குவாதம் செய்கிறார்  ஈஸ்வரி.

ஆனால் மற்ற அனைவரும் கோபியை அங்கு கொண்டு விடுமாறு கூறுகிறார்கள் பிடிவாதமாக இருக்கும் ஈஸ்வரிக்கு அடுத்த அதிர்ச்சி தான் ஏனென்றால் ராதிகா பாக்கியாவின் வீட்டிற்கு பேக் உடன் வருகிறார். நான் இனிமேல் இங்கே தான் இருக்க போகிறேன் என கூறுகிறார். கணவன் எங்கே இருக்கிறாரோ அங்க தான் மனைவி இருக்க வேண்டும் என கூறுகிறார்.

பாக்கியா நீங்க சொல்லுங்க அத்த நான் என்ன செய்யணும் என ஈஸ்வரியை பார்த்து கேட்டுக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் நீ வெளியே போ என ஈஸ்வரி கூறியவுடன் ராதிகா எங்கேயும் போக முடியாது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் போய் கொள்ளலாம். சட்டப்படி கோபி எனக்கு தாலி கட்டியுள்ளார் நான் இந்த வீட்டில் இருக்கிறதா இல்ல சம்பந்தமே இல்லாமல் இருக்கும் பாக்கியா இந்த வீட்டில் இருக்க முடியுமா.? என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

உடனே ஈஸ்வரி நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணா இப்படி பண்ணுவா என கூறிக் கொண்டிருக்க அதற்கு ராதிகா நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணுங்க புருஷன் கூட தான் இருப்பாங்க புருஷன் எங்கேயாவது போயிட்டு வரட்டும்ன்னு விட்டுட்டு இருக்க மாட்டாங்க. புருஷன் கூட தான் இருக்கிறேன் என்று சொன்ன நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள இல்ல டிவோர்ஸ் ஆகிய பிறகும் இவர் கூட இருப்பேன்னு கூறுகிறவ நல்லவளா என ஈஸ்வரியை பார்த்து கேட்க குடும்பமே அதிர்ச்சி அடைகிறது.

உடனே பாக்யா இனிமே ஒரு வார்த்தை பேசினா அவ்வளவுதான் ஒழுங்கா பார்த்து பேசு என கூறி விடுகிறார். இந்த நிலையில் ராதிகா வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் பொழுது ராதிகாவின் அம்மா வந்து விடுகிறார் அங்கு வந்து என் பொண்ணுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா உங்க மொத்த குடும்பத்தையும் சின்னவங்க பெரியவங்கன்னு பாக்காம போலீஸில் சொல்லி தூக்கி உள்ள வச்சுருவேன் என மிரட்டுகிறார்.

உடனே இதெல்லாம் என்னப்பா என எழிலும் கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் ராமமூர்த்தியும் நீ முதலில் வெளியே போ என கோபியை பார்த்து கூறுகிறார். உடனே ராதிகா, கோபி உங்க ரூம் எங்க இருக்கு என கேட்டு கொண்டு மேலே சென்று விடுகிறார் பின்பு கோபி அனைவரும் அமைதியாக இருங்க உங்களுடைய சிச்சுவேஷன் எனக்கு புரியுது என கூறிவிட்டு நான் அவளை அழைத்துக் கொண்டு போகிறேன் என ராதிகா இருக்கும் அறைக்கு செல்கிறார்.

அங்கு ராதிகாவிடம் எவ்வளவோ கெஞ்சியும் பார்க்கிறார் ஆனால் ராதிகா வருவது போல் தெரியவில்லை கடைசியில் ராதிகா இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா நான் சூசைட் பண்ணிப்பேன் என மிரட்டுகிறார் இத்துடன் இன்று எபிசோட் முடிகிறது.

Leave a Comment

Exit mobile version