atk

போட்டியாளர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டும் ஏடிகே.! வைரலாகும் இன்றைய ப்ரோமோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இவனை தொடர்ந்து ஜி.பி முத்து தானாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார் மேலும் இவரை தொடர்ந்து அசல் கோளாறு வெளியேறி உள்ளார்.

இவ்வாறு தற்பொழுது 18 போட்டியாளர்களுடன் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஏடிக்கே இந்த வீட்டில் யார் யார் எப்படி மாறுவாங்கன்னு தெரியல சத்தியமா சொல்றேன் ஆயிஷா, ஷெரினா, மணி இந்த வெஸ்ட்ட கொடுக்குறதுல என்ன கஷ்டம்.

ஒரு அடி தான் இருக்கும் அந்த குப்பை தொட்டியில கொட்டி வைக்கிறதுல என்ன கஷ்டம் ஒரு பிளேட் கழுவ முடியாதவங்க எப்படி ஒரு விஷயத்தை முன்னோக்கி போவாங்க என்று ராமிடம் கூறுகிறார் அதோடு இந்த‌ ப்ரோமோ நிறைவடைகிறது மேலும் இதனை கமலஹாசன் அவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

பிறகு இதனைத் தொடர்ந்து இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் ஏராளமான டாஸ்க்கள் நடைபெற்று வருகிறது.  இதன் காரணத்தினால் அனைத்து போட்டியாளர்களும் டப் கொடுத்து வரும் நிலையில் ஏராளமான சண்டைகளும் ஏற்பட்டுள்ளது அந்த வகையில் முக்கியமாக தனலட்சுமி மற்றும் மகேஸ்வரி இருவரும் அசீமிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசி வருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் அசீமும் பேச தொடங்க இதனை பார்த்த ரசிகர்கள் பொறுத்தது போதும் பொங்கி எழு தலைவா என கூறி வருகிறார்கள் இந்த வாரம் கமலஹாசன் அவர் அவர்களின் அறிவுரையின்படி அசின் மிகவும் பொறுமையாக யோசித்து விளையாடி வருகிறார் ஆனால் அசீம்க்கு மரியாதை தராமல் தனலட்சுமி, மகேஸ்வரி இருவரும் பேசி வருகிறார்கள். இதனையும் கண்டிப்பாக கமலஹாசன் அவர்கள் கேட்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

bigg-b0ss-34

தகுதி இல்லாதவர் எனக் கூறிய மகேஸ்வரியை வெளுத்து வாங்கிய அசீம்.! பொறுத்தது போதும் பொங்கி எழுத் தலைவா என ஆதரவளிக்கும் ரசிகர்கள்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக டாஸ்க் மிகவும் கடுமையாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் மேலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக கமலஹாசன் அவர்களிடம் அசீம் மிகவும் கடுமையாக திட்டி வாங்கி வந்தார் மேலும் இதற்கு மேல் சரியாக இருக்க வேண்டும் என அசீம் மிகவும் பொறுமையாக இருந்து வரும் நிலையில் தற்போது மகேஸ்வரிவுடன் கடும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது தற்பொழுது பிக்பாஸ் வீடு இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறது.

அந்த டிவி, இந்த டிவி என டாஸ்க் நடைபெற்று வருகிறது இதில் நேற்று நடன நிகழ்ச்சி, டிராமா என பல டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்று மகேஸ்வரி மற்றும் அசீமுக்கு இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது மேலும் இருவரும் ஒரே அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அசீமுக்கு பிரேக்கிங் நியூஸ் பற்றி தெரியவில்லை என மகேஸ்வரி கூறியதை கேட்டு கடுப்பான அசீம் அவரிடம் நீங்கள் நடுவராக இருக்க தகுதி இல்லாதவர் என்றும் அதில் நீங்கள் ஜீரோ என்றும் பதிலடி கொடுத்திருக்கும் காட்சிகள் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இடம்பெற்று இருக்கிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பொறுத்தது போதும் பொங்கி எழுத் தலைவா என ஆதரவளித்து வருகிறார்கள். ஏனென்றால் அசீமை கமலஹாசன் அவர்கள் கடந்த வாரங்களாக திட்டியதால் சக போட்டியாளர்கள் பலரும் அசீமை மிகவும் கேவலமாக பேசி வருவது அவருக்கு மரியாதை கொடுக்காமலும் இருந்து வருகிறார்கள்.

அதில் முக்கியமாக மகேஸ்வரி ,தனலட்சுமி ஆகியோர்களை கூறலாம் இவர்கள் எப்பொழுதும் அசீமை அசிங்கப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எனவே இதற்கு மேல் ஆசீமை இந்த வாரம் போல் தொடர்ந்தால் கண்டிப்பாக அவர் இன்னும் நீண்ட நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

dhanalakshmi

பிக்பாஸ் கொடுத்த வாய்ப்பால் தனலட்சுமியை வச்சி செஞ்ச போட்டியாளர்கள்.! திமிரு கொஞ்சம் ஓவரா தான் இவருக்கு..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 6வது சீசனில் 21 போட்டியாளர்கள் அறிமுகமான நிலையில் தற்பொழுது 18 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. மேலும் வாராவாரம் தொடர்ந்து ஏராளமான டாஸ்க்களும் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஹவுஸ் மேட் அனைவரும் தனலட்சுமிக்கு அட்வைஸ் கொடுக்கும் படியான காட்சிகளிடம் பெற்றிருக்கிறது.

அதாவது இந்த சீசனில் பொதுமக்களில் இருந்து இரண்டு நபர்கள் கலந்து கொள்ளலாம் என்ற வாய்ப்பு கொடுக்கப்பட்டது அந்த வகையில் இந்த சீசனில் தனலட்சுமி அவர்கள் பங்கு பெற்றார். மேலும் இவருடைய போட்டித் திறமையை பார்த்து கடந்த வாரம் கமலஹாசன் அவர்கள் பாராட்டி இருந்தார்கள். மேலும  தொடர்ந்து போட்டியாளர்களும் இவருக்கு துணையாக இருந்து வந்த நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களிடம் சற்று கோபமாக பேசி வருவதை பார்க்க முடிகிறது.

மேலும் ரசிகர்கள் இதன் காரணத்தினால் இவர் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என விரும்பி வருகிறார்கள். அதாவது இந்த வாரம் நடைபெறும் டாஸ்க் தனலட்சுமி எந்த குணங்களை மாற்றிக் கொண்டால் மேம்பட முடியும் என்பது பற்றி சக போட்டியாளர்கள் அட்வைஸ் கொடுக்கும்படியான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் அதில் ஹவுஸ் மேட் ஒவ்வொருவர் அவருக்கு பல்வேறு அறிவுறுகளை வழங்க அதற்கு ஏற்றார் போல் தன்னுடைய ரியாக்ஷனை மாற்றுகிறார் தனலட்சுமி இதுதான் இன்றைய எபிசோடில் நடைபெற இருக்கிறது. மேலும் தனலக்ஷ்மி தனக்கு அனைவரையும் மரியாதை கொடுக்க வேண்டும் என பேசி வருகிறார் அந்த வகையில் ராபர்ட் மாஸ்டரிடம் சண்டை போட்டு வந்தார் பிறகு ராபர்ட் மாஸ்டர் இனிமேல் உன்கிட்ட எதுவும் பேச மாட்டேன் என கூறிவிட்டார்.

இவ்வாறு தனக்கு மட்டும் மரியாதை வேண்டும் என கூறி வந்த தனலட்சுமி நேற்று நிவாஷ்னிடம் அசிமை பற்றி அவன் இவன் பேசியிருக்கிறார்.இந்த ப்ரோமோ வெளியான நிலையில் ரசிகர்கள் இதனை விமர்சித்து வருகிறார்கள். மேலும் கண்டிப்பாக இதனை கமல் அவர்கள் கேட்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள.

bigg-boss-06

அசீமை அவன், இவன் எனக் கண்டபடி திட்டும் தனலட்சுமி.! இதனை கண்டிப்பாக கமல் கேட்க வேண்டும்.. ஆதங்கத்தில் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலைகள் கடந்த வாரம் நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் பெற்றுகரமாக நடந்து முடிந்தது இந்த டாஸ்கின் மூலம் பலருடைய உண்மையான முகமும் வெளிவந்தது மேலும் கமல் உட்பட போட்டியாளர்கள் வர அனைவரும் அசீமை விமர்சித்து இருந்தார்கள்.

எனவே அசீம் இந்த வாரம் தன்னுடைய வாயை கொஞ்சம் அடக்கிக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் தற்போது புதிய டாஸ்க்‌ ஒன்று நடைபெற்ற வருகிறது. இதுவும் மிகவும் சுவாரசியமாக இருந்து வரும் நிலையில் ஆரம்பமான முதல் கட்டமே சண்டை ஆரம்பித்து இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் நேற்று தனக்கு மரியாதை தர வேண்டும் என்றும் தன்னிடம் மரியாதையாக பேச வேண்டும் என தனலட்சுமி ராபர்ட் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் தற்பொழுது அசீமை அவன், இவன் என மரியாதை குறைவாக பேசி இருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது அசீமை குறித்து தனலட்சுமி பேசும் பொழுது ஒவ்வொரு வாரமும் ஒரு கண்டன்ட்டை எடுத்துக்கொண்டு அந்த வார இறுதியில் கமலஹாசனிடம் திட்டு வாங்குவது அசிங்கமாக இல்லையா என்று அசீமை கடுமையாக விமர்சனம் செய்கிறார்.

பிறகு இந்த போட்டியை பற்றிய பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவன், இவன் என்று அசீமை தனலட்சுமி பேசியதை நிவாஷினி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியின் போது தன்னை நாய் என்று மரியாதை குறைவாக பேசியதாக ராபர்ட் மாஸ்டர்யிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் தனலட்சுமி தன்னிடம் மரியாதையாக பேச வேண்டும் என்று அனைவரையும் வலியுறுத்தினார்.

ஆனால் அவரே இன்று அசீமை அவன் இவன் என்று பேசி இருப்பது மற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எவ்வளவு அவர் மரியாதை தருகிறார் என்பது இதிலேயே தெரிய வருகிறது. மேலும் தொடர்ந்து மிகவும் திமிராக பேசி வரும் தனலட்சுமியை கமலஹாசன் அவர்கள் இந்த வாரம் கண்டிப்பாக கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

bigg-boss-67

மறுபடியும் மாறி மாறி குறை சொல்லிக் கொள்ளும் தனலட்சுமி மற்றும் அசீம்.! கடுப்பான விக்ரமன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது எனவே விஜய் டிவியும் வருடம் வருடம் ஏதாவது ஒரு புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசன் மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் இந்த முறை கண்டன்டுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியேறினார் இவரைத் தொடர்ந்து ஜி.பி முத்து தானாக வெளியேறிய நிலையில் இந்த வாரம் அசல் கோளாறு வெளியேறினார். அந்த வகையில் தற்பொழுது 18 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக இந்த வாரம் நாமினேஷன் பிராசஸில் விக்ரமன், அசீம், ஆயிஷா, கதிர், ஷெரினா உள்ளிட்ட ஐந்து பெயர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

மற்ற போட்டியாளர்கள் இந்த லிஸ்டில் சிக்காத நிலையில் பலரும் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மிகவும் மகிழ்ச்சியாக அனைவரும் விளையாடி வந்த நிலையில் தற்போது விதவிதமான டாஸ்க்கள் நடைபெற்று வருகிறது. அதில் விவாத நிகழ்ச்சி, ராசிபலன், குக்கிங் ஷோ உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது.

அதில் விவாத நிகழ்ச்சிகள் விக்ரமன், அசீம், ஷெரினா, தனலட்சுமி உள்ளிட்ட நால்வரும் இடம்பெறுகின்றனர் தற்பொழுது வெளியாகி உள்ள ப்ரோமோவில் அசீம் தனலட்சுமியை குறை கூற மறுபுறம் அசீமிற்கு புகழாரம் சூட்டுகிறார் ஷெரினா தொடர்ந்து தனலட்சுமி விக்ரமும் அசிமுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

bigg-boss-06

அசீமோட திட்டத்தில் நீங்கள் பங்கெடுத்து கொண்டீர்கள் என ஆயிஷாவை வச்சி செஞ்ச கமல்.! வைரலாகும் ப்ரோமோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியை தொடர்ந்து ஏராளமான டாஸ்கர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் தொடர்ந்து ஏராளமான பிரச்சனைகள் நிகழ்ந்து வரும் நிலையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் ஒருவரையும் விடாமல் அனைவரிடமும் கேள்வி கேட்டு வச்சி செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் நேற்று டாஸ்கின் பொழுது ஷெரினாவை கீழே தள்ளி விட்டது தனலட்சுமி தான் என பலரும் கூறி வந்த நிலையில் குறும்படம் போட்டு அந்த குழப்பத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தினார். மேலும் அசீம் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டினார். அந்த வகையில் ஷெரினா ஓவர் ஆக்டிங் செய்திருப்பது பலருக்கும் தெரிய வருகிறது.

இந்நிலையில் இவரை தொடர்ந்து இன்று ஆயிஷாவை குறி வைத்து இருக்கிறார் கமல் அதாவது நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் ஆயிஷா வேண்டுமென்றே ரட்சிதாவின் பொம்மையை வெளியேற்றிவிட்டு தனக்கு எதுவும் தெரியாதது போல் நடித்து வந்தார் மேலும் அதனை கண்டினியூ செய்து வந்த நிலையில் தற்பொழுது உண்மையை கமல் அவர்கள் வெளிச்சம் போட்டு காமித்து இருக்கிறார்கள்.

அது ரக்ஷிதாவின் பொம்மை என்பதே எனக்கு தெரியாது என ஆயிஷா கூறுகிறார் அதற்கு ரக்ஷிதா விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த என்னை வெளியேற்றி விட்டார்கள் என்பது வருத்தமாக இருப்பதாக கூறிய நிலையில் பிறகு ஆயிஷா அசீம் சொன்னதால்தான் அப்படி செய்ததாக கூறுகிறார்.

அதற்கு கமல் அவர்கள் அசீம் திட்டத்தில் நீங்கள் பங்கெடுத்து கொண்டீர்கள் என கூற ஆயிஷாவின் முகம் மாறுகிறது இவ்வாறு நேற்று ஷெரினாவை தொடர்ந்து இன்று ஆயிஷாவை கமல் வறுத்தெடுத்து உள்ளார் இந்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.