ராஜ ராஜ சோழனின் சகோதரி குந்தவையாக சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்த த்ரிஷா.! வைரல் வீடியோ..

நடிகை திரிஷா மகா சிவராத்திரியை முன்னிட்டு காஷ்மீரில் உள்ள சிவாலயம் ஒன்றிற்கு சென்று அங்கு பூஜை செய்திருக்கும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷா சமீப காலங்களாக அடுத்தடுத்து திரைப்படங்களின் நடித்துவரும் நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பிரியா ஆனந்த், கௌதமேனன், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு உலகெங்கும் மகா சிவராத்திரி பூஜை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

எனவே பொதுமக்கள், திரைப்பட பிரபலங்கள் என அனைவரும் சிவாலயங்களுக்கு சென்று கண்விழித்து காத்திருந்தனர். அந்த வகையில் பல நடிகைகள் சிவராத்திரியில் கலந்துக் கொண்டு பூஜையை மேற்கொண்ட நிலையில் திரிஷாவும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு காஷ்மீரில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்திய வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

trisha
trisha

திரிஷா ஆண்டு தோறும் சிவராத்திரி அன்று சிவன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் இவ்வாறு இந்த வருடமும் லியோ படபிடிப்பிலிருந்து கொண்டே இவ்வாறு அங்கு இருக்கும் சிவலிங்கத்திற்கு வழிபட்டது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திரிஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த நிலையில் இந்த படத்தில் திரிஷா தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவையாக நடித்திருந்தார். எனவே இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் திரிஷா குத்தவையாக இப்படி சிவனுக்கு பூஜை செய்வதை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருப்பதாக கமாண்டுகள் செய்து வருகின்றனர்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

trisha

பொம்பளைய கதற விட ஆம்பளையா இருந்தா மட்டும் முடியாது அதுக்கு மேலையும் வேணும் கீழையும் வேணும் வைரலாகும் த்ரிஷாவின் ராங்கி பட ட்ரைலர்.!

நடிகை திரிஷா தற்பொழுது ராங்கி என்ற ஆக்சன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் அந்த பட டிரைலர் தற்பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் கடைசியாக நடித்திருந்த நிலையில் இந்த படத்தின் மூலம் வெற்றியினை கண்டார்.

மேலும் இவருடைய கதாபாத்திரம் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார். மேலும் இவர் இதன் மூலம் தன்னுடைய இழந்த மார்க்கெட் மீண்டும் அடைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் ராங்கி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த படத்தினை எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் இயக்கிய இயக்குனர் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ளது மேலும் லைக்கா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்திற்காக நடிகை திரிஷா மிகவும் கடினமாக உழைத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அதாவது இந்த படத்தில் பல ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில் அதற்கு நடிகை திரிஷா டூப் போடாமல் நடித்துள்ளாராம். எனவே இவருக்கு வாழ்த்துக்கள் கிடைக்க வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ராங்கி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் நடிகை திரிஷாவை தொடர்ந்து மலையாள நடிகரான அனஸ்வர ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் ஸ்ரீ சத்யா படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.