ஸ்கூல் போக வேண்டிய வயதில் கல்யாணம்.. புருஷன் உறவுகாரருடன் இரண்டாவது திருமணம்.. பெத்த புள்ளைங்க கண்டுக்கல… வடிவேலு பட நடிகையின் மறுபக்கம்.?

Sumathi : நடிகை சுமதி தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்த பிரபலம் அடைந்தவர் இவர் முதன்முறையாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேட்டியில் கூறியுள்ளார் சமீப காலமாக பல நடிகைகளை பேட்டி எடுத்து வரும் சகிலா இவரையும் பேட்டி எடுத்துள்ளார்.

பொதுவாக திரையுலகில் பல வருடங்களாக நடித்து வந்தாலும் ஒரு சிலரால் ஒரு காலகட்டத்திற்கு மேல் அடுத்த லெவலுக்கு செல்ல முடிவதில்லை அந்த லிஸ்டில் பல நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள் அப்படித்தான் ஐயா, கருப்புசாமி குத்தகைக்காரர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகைகளில் சுமதி ஒருவர்.

தற்பொழுது வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார் இவர் வடிவேலுவுடன் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் சமீபத்தில் கூட வடிவேலுவை பார்த்து வாய்ப்பு கேட்கலாம் என வடிவேலு மேலாளர் அவர்களை அணுகியுள்ளார் அதற்கு வடிவேலுவை பார்ப்பதற்கு கூட விடவில்லை அந்த அளவு பிசியாக இருக்கிறார் என விரட்டி விட்டு விட்டார்களாம்.

அஜித் மச்சானுடன் நடிக்கும் யாஷிகா ஆனந்த்.! படத்தின் பெயர் என்ன தெரியுமா.? வைரலாகும் புதிய புகைப்படங்கள்

சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு தன்னை பார்த்தாலே மிகவும் நன்றாக பேசுவார் என சுமதி கூறியுள்ளார் பல நடிகைகள் வடிவேலு பற்றி மோசமாக பேசியிருந்தாலும் இவர் வடிவேல் பற்றி நல்லவிதமாக பேசியுள்ளார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய வாழ்க்கை குறித்தும் சுமதி பேசியுள்ளார் அப்பொழுது 16 வயதிலேயே அவருடைய மாமாவை திருமணம் செய்து கொண்டாராம்.

எந்த நேரமும் கூடியுடன் இருக்கும் அவருடைய மாமா மூன்று பிள்ளை பிறந்த பிறகும் கொடுமைப்படுத்தி உள்ளார் அது மட்டும் இல்லாமல் சுமதியின் கணவர் உறவினர் ஒருவருடன் இணைத்து பேசி அசிங்கப்படுத்தி உள்ளார். ஒரு காலகட்டத்தில் சுமதி என் கணவர் யாருடன் தொடர்பு படுத்தி பேசினாரோ அவரிடம் சென்று சுமதி என்னை கண்காணாத இடத்திற்கு கூட்டிட்டு போய்விடு என கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

உடனே சுமதி அவரின் மூன்று பிள்ளைகளுடன் சென்னைக்கு வந்தார் அங்கு வீடு எடுத்து இரண்டாவது கணவருடன் தன்னுடைய வாழ்க்கையை துவங்கினார் அதன் பிறகு தான் அக்கம் பக்கத்தில் இருக்கும் பலரை வைத்து சினிமாவில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதன் பிறகு முழுமையாக திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

பிள்ளைகள் வளர்ந்து இளம் வயதை அடைந்த பிறகு சுமதியை விட்டு பிரிந்து அனைவரும் சொந்த ஊருக்கே சென்று விட்டார்களாம் பெத்த தாய் என நினைத்து ஒரு போன் கூட பண்ணுவதே கிடையாதாம் ஆனால் ஏதாவது சம்பாதித்துக் கொடுத்தால் மட்டும் வாங்கிக் கொள்வார்களாம் என மிகவும் எமோஷனலாக சுமதி பேசியுள்ளார் தன்னுடைய இரண்டாவது கணவர் தான் என்னை தற்பொழுது வரை நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் சமீப காலமாக பட வாய்ப்பு பெரிதாக கிடைக்கவில்லை எனவும் சுமதி கூறியுள்ளார்.

நான் கஷ்டப்பட்ட காலத்தில் கொரோனா காலகட்டத்தில் யோகி பாபு, சூரி, நடிகர் நரேன் ஆகியோர்கள் தனக்கு பணம் கொடுத்து உதவியதாக கூறினார் அது மட்டும் இல்லாமல் யோகி பாபு எப்பொழுது என்னை பார்த்தாலும் பணம் கொடுத்து உதவுவார் எனவும் அந்த பேட்டியில் கூறினார்.