ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா இவர் நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் இருக்கிறார். மேலும் ஸ்ரீபிரியா முன்னணி நடிகர்களுடன் இணைந்து 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்தநிலையில் ஸ்ரீ பிரியா 1988ஆம் ஆண்டு மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஸ்ரீ ப்ரியா அவர்களுக்கு நாகார்ஜுனா என்ற மகனும் சினேகா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமாவில் திருமணத்துக்கு பிறகு விலகியிருந்த ஸ்ரீபிரியா தற்பொழுது சீரியலில் தலைகாட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் மேலும் ஸ்ரீபிரியா உலகநாயகன் கமலஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து அக்கட்சியின் சார்பாக ஊடகங்களில் அரசியல் விவாதங்களில் பங்கேற்று வருகிறார்.
இவரின் மகள் சினேகாவின் சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் அம்மாவை அப்படியே உரித்து வைத்திருக்கிறார் ஸ்ரீபிரியாவின் மகள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வருவார் என பலரும் கூறி வருகிறார்கள்.
இவரைப் பார்த்த பல இயக்குனர்கள் எப்படியாவது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஸ்ரீபிரியா சினிமாத்துறையில் கேமரா வெளிச்சத்தில் இருந்தவர் என்றாலும் இவர் மகளை இதுவரை கேமரா முன்பு காட்டியதே கிடையாதாம் இந்த நிலையில் 22 பிமேல் கோட்டயம் என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக்கான மாலினி 22 பாளையங்கோட்டை என்ற பிரஸ்மீட்டில் பொழுது தனது மகள் சினேகாவை வெளியுலகத்திற்கு காட்டினார்.
மேலும் சினேகா வெளி நாட்டிற்கு சென்று லா படிப்பை படித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் அங்கு வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். இவரின் அழகைப் பார்த்து பல இயக்குனர்கள் இவரை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள் ஆனால் என்னுடைய லட்சியம் வழக்கறிஞராக வேலை செய்வது என கூறிவிட்டாராம்.
இதொ அவரின் புகைப்படம்.