மறைந்த பவதாரணி பாடிய பாடல்களில் இன்று வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அழியாத பாடல்கள்.!

bavatharani : இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி பவதாரணி 47 வயது யுவர் திடீரென உடல் நலக்குறைவால் காலமானார் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவருக்கு திடீர் என சிகிச்சை பலனின்றி உயிர் இறந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் அதேபோல் தமிழ் சினிமாவில் சங்கீத திருநாளோ காற்றில் வரும் கீதமே,ஒளியிலே தெரிவது தேவதையா என பல பாடல்களையும் பாடியுள்ளார்.

சூர்யா சார் கூடிய சீக்கியம் மகாகிட்ட முரத்தாலையே மொத்து வாங்கபோரிங்க.! ஆஹா கல்யாணம் ப்ரோமோ

மேலும் இவர் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடலை பாடியதற்காக தேசிய விருதையும் தட்டிச் சென்றவர் அந்த வகையில் மறைந்த பவதாரணி பாடிய பாடல்களில் மக்களால் மறக்க முடியாத சில பாடல்களை இங்கே காணலாம்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியாகிய காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் என்னை தாலாட்ட வருவாளோ என்ற பாடல் பட்டித் தொட்டு எங்கும் பிரபலம் ஆகி மாபெரும் ஹிட் அடித்தது.

ரவுடிகளிடம் மாட்டிக் கொண்ட தர்ஷினி.. கல்லுக்குள் ஈரம் என்பதை நிரூபித்த கதிர்.. கண்ணீரில் மிதக்கும் நந்தினி.

இதனை தொடர்ந்து அழகி திரைப்படத்தில் ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் மாபெரும் வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் தென்றல் வரும் என்ற பாடலும் தாமிரபரணி திரைப்படத்தில் தாலியே தேவையில்லை நீ தான் என் பொண்டாட்டி என்ற பாடலும் ஒரு நாள் ஒரு கனவு திரைப்படத்தில் காற்றில் வரும் கீதமே என்ற பாடலும் அனேகன் திரைப்படத்தில் ஆத்தாடி ஆத்தாடி என்ற பாடலும் மக்கள் மத்தியில் மறையாமல் நிலைத்து நிற்கும் பாடல்கள் மேலும் பல திரைப்படங்களுக்கு பாடலை பாடியுள்ளார் மறைந்த பவதாரணி.