அஜித்தின் செயலால் தர்ம சங்கடத்திற்கு ஆளான சினேகாவின் அக்கா.. வைரலாகும் செய்தி

Ajith : தன்னுடைய நடத்தை மற்றும் நடிப்பின் மூலம் கோடான கோடி ரசிகர்களை கவர்ந்து உள்ளவர் நடிகர் அஜித் குமார் இவர் ஆரம்பத்தில் காதல், ஆக்க்ஷன் படங்களை கொடுத்து வந்தாலும் சமீப காலமாக சமூக கருத்துக்கள் நிறைந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அப்படி கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் கடந்த பொங்கலுக்கு  வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்ததை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

அமிர்தாவை தொடாத அவ என் பொண்டாட்டி.. எழிலுக்கு அதிர்ச்சி கொடுத்த கணேஷ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிநிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளி வருகின்றன அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க அவருடன் இணைந்து திரிஷா ரெஜினா அர்ஜுன் ஆரவ்  பவானி சங்கர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சினேகாவின் அக்கா சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..ஜனா படத்தின் சூட்டிங் போது நாங்கள் அஜித் சாரை பார்த்தோம் எங்களை அவர் நல்லபடியாக பார்த்துக் கொண்டார்  அதன் பிறகு பல வருடங்கள் கழித்து அஜித் சாரை ஒரு மாலில் பார்த்தேன்.

2023 : தியேட்டரில் அதிக கலெக்ஷன் அள்ளிய 5 படங்கள்.. திரையரங்க உரிமையாளர்கள் சொன்ன உண்மை

அப்பொழுது அவர் மிகப்பெரிய ஒரு டாப் ஹீரோவாக இருந்ததால் அவரை நாங்கள் பார்த்து பேசவில்லை ஆனால் அஜித் சார் எங்களை பார்த்து வந்து பேசினார்.  மேலும் குடும்பத்தை பற்றி அவர் விசாரித்தார் எங்களுக்கு ஒரே தர்ம சங்கடமாக போனது. அஜித் ஒரு ஜென்டில்மேன், அவர் எதையும் மறக்கவில்லை என கூறினார்.