அமிர்தாவை தொடாத அவ என் பொண்டாட்டி.. எழிலுக்கு அதிர்ச்சி கொடுத்த கணேஷ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode december 28 : இன்றைய எபிசோடில் கோவிலில் அமிர்தாவை பார்த்து கணேஷ் அமிர்தா என கூப்பிடும் பொழுது அமிர்தா கணேஷை பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறார் பிறகு அமிர்தா எழிலிடம் ஓடிப் போய் சொல்ல வரும்பொழுது மயங்கி விழுந்து விட்டார். பிறகு எழில் அமுதாவை எழுப்பிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது கணேஷ் வந்து நான்தான் அமிர்தவோட கணவர் நீங்க அமிர்தவ தொடக்கூடாது என்று எழிலோட கையை எடுத்து விடுகிறார். பிறகு எழில் மற்றும் கணேஷ் இரண்டு பேரும் அமிர்தாவை எழுப்பி விடுகின்றனர். கண் முழித்த அமிர்தா கணேஷை பார்த்து பயப்படுகிறார் அந்த நேரத்தில் கணேஷ் உடைய அப்பா அம்மாவும் அங்கு வருகின்றனர் என்னமா இதெல்லாம் என்று அமிர்தா கேட்க அவர்கள் ஒன்னும் சொல்ல முடியாமல் இருக்கின்றனர்.

2023 : தியேட்டரில் அதிக கலெக்ஷன் அள்ளிய 5 படங்கள்.. திரையரங்க உரிமையாளர்கள் சொன்ன உண்மை

பிறகு கணேஷ் நீ நான் நிலா பாப்பா நம்ம அப்பா அம்மா இதுதான் நம்ம குடும்பம் வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார்.. பிறகு எழிலும் அவங்க அப்பா அம்மாவிடம் என்ன நடந்தது என்று கேட்க நாங்க செத்துப் போனதா நினைச்சுகிட்டு இருந்த கணேஷ் உயிரோட ஒரு நாள் திரும்பி வந்தார் அதை நினைச்சு எங்களுக்கு சந்தோஷமா தான் இருந்தது.

ஆனா அவன் வந்த உடனே அமிர்தா எங்கன்னு கேட்டான், அமிர்தா இப்ப வேறொரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கா அமிர்தாவுக்கு கணேஷ் வந்தது தெரிஞ்சா எப்படியும் கஷ்டம் தான் படுவா என்று சொல்கின்றனர் பிறகு அவங்க கிட்ட என்ன பேசிட்டு இருக்கீங்க என்று கணேஷ் சொல்கிறார். இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டில் இதனை சொல்வதும் எல்லோரும் நம்ப முடியாமல் இருக்கின்றனர் பிறகு ஈஸ்வரி இப்பொழுது எழிலுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் நம்மளே ஏதாவது செய்யலாமா என்று சொல்ல ராமமூர்த்தி இவ்வளவு தூரம் வந்திருக்கான்..

ஆறு ஏழு பேர் ரூமில் விட்டு அடிச்சு துவைச்சாங்க.. வடிவேலுவும் மிரட்டி எழுதி வாங்கினார்.. பக்கீர் கிளப்பிய காதல் பட சுகுமார்..

அவன் அமிர்தாவை பார்த்து பேச எவ்வளவு நேரம் ஆகிட போகுது அவர்களுக்கு சொல்லியே ஆகணும் என்று சொல்கின்றனர்.. அடுத்து அமிர்தா கணேஷ் உடன் போக பயப்பட்டு கொண்டு எழில் பின்னாடி ஒளிகிறார். கணேஷ் உடைய அப்பா அம்மா உன்ன பார்த்த அதிர்ச்சியில அமிர்தா இருக்கா கொஞ்ச நேரம் போகட்டும் என்று சொல்கின்றனர். இப்பொழுது அமிர்தா என்ன செய்வது என்ற குழப்பத்தில் நிற்கிறார் இதோடு இந்த எபிசோடு முடிந்துள்ளது.