சிவகார்த்திகேயன், மோனிகா விஷயம்.. நான் அதை நம்புகிறேன்.. ஒரேடியாக முற்றுப்புள்ளி வைத்த இமான்..

imman : ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது இந்த படத்திற்கு இமான் இசையமைக்க இருக்கிறார் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் அறிமுக இயக்குனர் சபரி முத்து இயக்குகிறார், இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இமான் கலந்து கொண்டார்.

சபரி முத்து ஏற்கனவே விசுவாசம் திரைப்படத்தில் பணியாற்றி இருந்தார் மேலும் இந்த திரைப்படம் குறித்து பேசிய இமான் படத்தின் ஸ்கிரிப்ட் நன்றாக இருக்கிறது பாடலுக்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ளது என கூறினார். மேலும் இமானிடம் பத்திரிகையாளர்கள் உங்களை சுற்றி பல சர்ச்சைகள் வலம் வந்து கொண்டிருக்கிறது அதற்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறீர்களா என கேட்டுள்ளார்கள்.

புதிய காதலருடன் குளியல் உடையில் அமலாபால்.! கருமம் கருமம் இப்படியெல்லாமா புகைப்படத்தை வெளியிடுவீங்க…

அதற்கு பதில் அளித்த இமான் முற்றுப்புள்ளி வைக்க ஒன்றுமே கிடையாது அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொள்வார். மனிதனைத் தாண்டி எது நல்லது எது கெட்டது என்பது இறைவனுக்கு தெரியும், அதை நான் நம்புகிறேன். எல்லாத்தையும் இறைவன் பார்த்துக்கொள்வார், கண்டிப்பாக எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என தெரிவித்தார்.

சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இமான் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் எனவும், இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் எனவும் கூறி இருந்தார். ஆனால் அதற்கான காரணம் எதையும் அவர் கூறாமல் மறைமுகமாக கூறியிருந்தார்.

பாக்கியா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வீட்டிற்கு வந்த மாலினி.! வசமாக சிக்கிய செழியன்.. வெடித்தது புதிய பிரச்சனை

இந்த நிலையில் இது குறித்துஇமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் இருவரின் பிரிவுக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று பலரும் பதிவிட்டு வந்தார்கள். இது தொடர்பாக இமானின் முன்னாள் மனைவி மோனிகா எனக்கும் இமானுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட பொழுது நாங்கள் பிரிந்து விடக்கூடாது என சிவகார்த்திகேயன் நினைத்தார் அதனால் இமான் விவாகரத்து செய்ய முடிவெடுத்த பொழுது அவருக்கு சிவகார்த்திகேயன் ஆதரவு தரவில்லை அதனால் தான் சிவகார்த்திகேயன் மீது அபாண்ட பழி சுமத்துகிறார்.

இதை தான் இமான் சிவகார்த்திகேயன் செய்த துரோகம் என கூறுகிறார் ஆனால் வெளி உலகத்தில் இதனை வேறு விதமாக புரிந்து கொள்ளப்படுகிறது என கூறினார் இமானின் முன்னாள் மனைவி.