கார் துடைக்க போன இடத்தில் முத்து மேல் திருட்டுப் பழியை போட்ட ஓனர்.. கடைசியில் தெரிந்த உண்மை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode november 15 : இன்றைய எபிசோடில் வீட்டிற்கான மளிகை ஜாமம் எல்லாம் வந்து விட்டது. விஜயா மீனாவிடம் இந்த மாசம் பணம் தர மாட்டீங்களா ஓசியிலே தான் சாப்பிட போறீங்களா என்று ரொம்ப நக்கல் பண்ண பிறகு மீனா அவரது வலையலை அடமானம் வைத்து பத்தாயிரம் பணம் வாங்கிட்டு வந்து விஜயாவிடம் கொடுத்துள்ளார்..

முத்து உன்கிட்ட பணம் தரல இந்த பணம் உனக்கு ஏது திருடுனியா என்று விஜயா கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது முத்து வீட்டுக்கு வந்து நான் தான் மீனா கையில கொடுத்து வைத்திருந்தேன் அந்த பணத்தை தான் கொடுத்திருப்பாள் என்று வெளியே சமாளித்து பொய் சொல்லிவிட்டு பிறகு ரூமுக்குள்ள போய் மீனாக்கிட்ட உனக்கு ஏது பணம் நீ எப்படி பத்தாயிரம் கொடுத்த என்று கேட்டுவிட்டு..

முதல் பரிசை வென்றும் கொண்டாட முடியாமல் தவிக்கும் மகா.. ஆச்சரியப்பட்ட சூர்யா – பரபரப்பான கட்டத்தில் ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

கைல இருந்த வளையல் எங்கே என்று கேட்க அப்ப வலையல் அடமானம் வச்சு தான் இந்த பணத்தை கொடுத்தியா என முத்து கேட்பதும் ஆமா அத்தை பணம் தர மாட்டீங்களான்னு கேட்டுட்டே இருந்தாங்க அதனாலதான் இப்படி பண்ணுனேன் என சொல்கிறார்.. அடுத்து ரோகிணி மனோஜ்க்காக காஸ்லியான பெர்ஃப்யூம் ஒன்றை கிப்டாக வாங்கி கொடுக்கிறார்.

அடுத்த நாள் காலையில் முத்து சீக்கிரம் எழுந்திருச்சு நான் வேலைக்கு போகணும் என்று கிளம்பிவிட்டார்.. பிறகு மீனாவுடைய தோழி தேவி என்பவர் வீட்டிற்கு வந்து என்னோட மாமா செக்யூரிட்டியா வேலை பாக்குற அப்பார்ட்மெண்ட்ல உங்க புருஷன் கார் துடைக்கிற வேலைக்கு போய் இருக்காரு என சொல்வதும் பிறகு மீனாவும் அந்த அப்பார்ட்மெண்டுக்கு வந்து முத்துவை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

லியோ, ஜெயிலர்.. 500 கோடி, 600 கோடின்னு சொல்றாங்க இதெல்லாம் உண்மையா.? கொளுத்தி போட்ட பிரபல நடிகர்

அப்பொழுது முத்துவை கார் துடைக்க சொன்னவர்.. கார் உள்ளே பார்த்து இதுல இருந்த போன காணோம் நீ தான் திருடியிருப்ப, ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லு என்று முத்துவிடம் அப்பார்ட்மெண்டில் இருந்த  எல்லோரும் சேர்ந்து சண்டை போடுகின்றனர் அப்பொழுது முத்து நான் உழைத்து சம்பாதிக்கிறவன் திருடுற பழக்கம் எனக்கு கிடையாது.

ஏழை என்றால் திருடுவாங்களா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒருவர் டூவீலரில் வந்து உங்க போனை அங்கேயே மறந்து வச்சுட்டு வந்துட்டீங்க என்று அவரிடம் கொடுக்கும் பொழுது பிறகு முத்து என் மேல பழிய போட்டீங்க இல்ல இப்ப இதுக்கு என்ன சொல்ல போறீங்க ஏழை என்றால் உங்க இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பேசுவீங்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.