முதல் பரிசை வென்றும் கொண்டாட முடியாமல் தவிக்கும் மகா.. ஆச்சரியப்பட்ட சூர்யா – பரபரப்பான கட்டத்தில் ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha kalyanam today episode november 15 : இன்றைய எபிசோடில் மகா சூர்யாவிடம் பிரண்டோட வளைகாப்பு என்று பொய் சொல்லிவிட்டு ஜுவல்லரி டிசைன் காம்படீஷனுக்கு வந்து கலந்து கொண்டிருக்கிறார்.. அங்கு போட்டி தொடங்கி விட்டது மகா டிசைன் வரைந்து கொண்டிருக்கிறார் அப்போது இந்த போட்டிக்கு ஜட்ஜ் ஆக சூர்யா தான்.

அங்கு வந்திருக்கிறார் பிறகு அந்தப் போட்டியின் உரிமையாளர் இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் வி பி ஜூவல்லர்ஸ் எம்டி சூர்யாவை வரவேற்கிறேன் என்று சொல்ல மகா ஐயோ போச்சி நம்ப மாட்டினோம் என்று பயப்படுகிறார்.. பிறகு சூர்யா போட்டியாளர்கள் வரைந்த டிசைனை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

லியோ, ஜெயிலர்.. 500 கோடி, 600 கோடின்னு சொல்றாங்க இதெல்லாம் உண்மையா.? கொளுத்தி போட்ட பிரபல நடிகர்

அதில் மகா வரைந்த டிசைனை பார்க்கும் போது இது நம்ம கம்பெனிக்கு டிசைன் பண்ணி தர அந்த பொண்ணோட டிசைன் மாதிரி இருக்கு என்று யோசிக்கிறார்.. பிறகு சூர்யா போட்டியில் ஜெயித்த மூன்றாவது மற்றும் இரண்டாவது இடத்தை சொல்லிவிட்டு இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்தவர்.

மகாலட்சுமி என்று சொல்லும் போது மகா முக்காடு போட்டுக்கொண்டு ஒளிந்து கொள்கிறார் பிறகு பக்கத்தில் இருந்த பாட்டி உன்ன தான் சொல்றாங்க எழுந்து போ என்று சொல்வதும் மகா தலையில் முக்காடு போட்டுக் கொண்டு மேடைக்கு போகிறார் அப்போது சூர்யா பிரண்டோட வளைகாப்புக்கு போறேன்னு சொல்லிட்டு இங்க வந்து இருக்குற நீ தானா..

வில்லங்கமான கதாபாத்திரத்தில் நடித்து பெயரைக் கெடுத்துக் கொண்ட 5 முன்னணி நடிகைகள்.! திருந்தா விவாகரத்து நடிகை

அதான் முழுசா நினைச்சுட்டியே அப்புறம் எதுக்கு முக்காடு முக்காடை எடு என்று சொல்லிவிட்டு பிறகு சூர்யா மகாவிற்கு பரிசை கொடுக்கிறார்.. அடுத்து மேடையில் பேசிய மகா என்னோட அப்பா ஒரு பொம்மை செய்றவரு அதனால அந்த கலைய நானும் ரொம்ப நேசிச்சேன் பிறகு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டவரோ எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருப்பாரு..

நான் எது சொன்னாலும் சரின்னு சொல்வாரு என்னோட இந்த வெற்றிக்கு காரணம் என்னோட புருஷன் தான் என்று சொல்கிறார். பிறகு சூர்யா மகா இருவரும் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது ஏன் மேடையில் என்ன பத்தி இப்படி சொன்ன என்று சூர்யா கேட்க நீங்க வேணுன்னா எங்க வேணாலும் என்னை விட்டு தரலாம் நான் உங்களை எங்கேயும் விட்டு தர மாட்டேன் என்று மகா சொல்கிறார்.

பிறகு வீட்டில் இந்த போட்டிக்கு நான் வந்து ஜெயிச்சேன் என்கிற விஷயத்தை நீங்கள் சொல்ல வேண்டாம் என்று மகா கேட்டுக்கொள்கிறார்.. பிறகு சூர்யா நீ இப்பதான் முதல் தடவை இந்த மாதிரி டிசைன் வரைந்து இருக்கியா இதுக்கு முன்னாடி வரைந்து இருக்கியா என்று கேட்க இதுதான் முதல் தடவை என மகா சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.