அண்ணாமலையின் பிடிவாதத்தால் மீனாவை வீட்டுக்கு அழைத்து வரும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode november 03 : இன்றைய எபிசோடில் அண்ணாமலைக்கு ஆபரேஷன் முடிந்து குணமாகிவிட்டார்.. அவரைப் பார்த்து விஜயா உங்களுக்கு ஏதாவது ஆயிடுமோனு ரொம்ப பயந்துட்டேன் இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கிறார் பிறகு அண்ணாமலை மனோஜ் ரோகிணி எங்கே என்று கேட்க அவர்கள் சாப்பிட போயிருக்கிறார்கள் என விஜயா சொல்கிறார்.

பிறகு முத்து அம்மாவிற்கு டிபன் வாங்கிட்டு வந்து கொடுக்கிறார் அதற்கு விஜயா வேண்டாம் என்று சொல்ல முத்து நேற்றில் இருந்து சாப்பிடாமல் இருக்கீங்க உடம்பு என்னத்துக்கு ஆகுறது சாப்பிடுங்க என்று சொல்ல பிறகு விஜயா சாப்பிடுகிறார்.. அடுத்து அண்ணாமலை மீனா எங்கே என்று கேட்க அவ எங்க போனான்னு தெரியல அவளை பத்தி எதுக்கு இப்ப கேக்குறீங்க விடுங்க என்ற முத்து சொல்கிறார்.

என் வாழ்க்கையை சீரழித்தது அஜித் விஜய் பட இயக்குனரின் தம்பி தான்.! விரலை நீட்டி மாட்டி விட்ட நடிகை.!

பிறகு அண்ணாமலையை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டிற்கு முத்து உடைய வாடகை காரில் அழைத்து வருகின்றனர்.. அப்பொழுது அண்ணாமலை முத்து விடம் உன்னோட கார் எங்க இன்னுமா சர்வீஸ்ல இருக்கு, எவ்வளவு நாள் வாடகை கார் ஓட்டுவ இதுக்கு தனியா வாடகை கட்டணம் என்று கேட்க அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் உள்ள வாங்கப்பா என்று அண்ணாமலை வீட்டிற்குள் ஆரத்தி எடுத்து அழைத்துக்கொண்டு போகின்றனர்..

பிறகு அண்ணாமலை ஹாஸ்பிடல் செலவுக்கு என்ன பண்ணிங்க என்று கேட்க விஜயா முத்து அவனோட காரை வித்து என்னோட நகை செயின் எல்லாத்தையும் வச்சு தான் ஹாஸ்பிடல் செலவை பார்த்தோம் என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை கார் ஏன் விக்கணும் வீட்டு பத்திரத்தை வைத்து இருக்கலாமே என்று கேட்க விஜயா அதான் பத்திரத்தை எடுத்துக்கிட்டு மீனா எங்கேயோ ஓடிட்டா என்று சொல்ல அண்ணாமலை பத்திரம் என் கையில தான் இருக்கு..

பொதக்குழியில் விழுந்த எதிர்நீச்சல்.. முந்திகிட்டு முன்னாடி வந்த சிறகடிக்க ஆசை.. இந்த வார டிஆர்பி ரேட்டிங்..

நான் மீனா கிட்ட கொடுத்த மறுநாளே இந்த பத்திரம் என்கிட்ட இருக்க கூடாது உங்ககிட்டயோ இல்ல அத்தைகிட்டோ தான் இருக்கனும் என்று மீனா என்கிட்ட பத்திரத்தை கொடுத்துட்டா அது நம்ம ரூம்ல தான் இருக்கு என சொல்கிறார். மேலும் மீனா என்ன பாக்க ஹாஸ்பிடலுக்கு வந்து என்கிட்ட பேசிட்டு இந்த கயிற என் கையில் கட்டி விட்டுட்டு போனதா பரசு என்கிட்ட சொன்னார் என அண்ணாமலை சொல்கிறார்.

பிறகு அண்ணாமலை மீனா இப்ப வீட்டுக்கு வரணும் மீனா வராமல் நான் மாத்திரையோ சாப்பாடோ சாப்பிட மாட்டேன் மீனாவ பார்த்தால் தான் நான் சாப்பிடுவேன் என்று சொல்ல வேற வழி இல்லாமல் முத்துவும், மீனாவை கூப்பிட போகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.