என் புள்ளைய பார்த்துக்க துப்பு இல்ல உனக்கு புடவையா.. விஜயாவை வெளுத்து விட்ட பாட்டி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode December 30 : இன்றைய எபிசோடில் பாட்டி ஸ்ருதிக்கு புடவை கொடுக்கிறார்.. உடனே விஜயாவை பார்த்து உனக்கெல்லாம் ஒன்னும் வாங்கிட்டு வரல நீ என் பையனை ஒழுங்கா பார்த்து இருந்தா உனக்கு பட்டு புடவை வாங்கிட்டு வந்து இருப்பேன், ஆனா நீ என் பையன ஒழுங்கா பாத்துக்கல..

அதனால தான் அவனுக்கு நெஞ்சுவலி வந்தது நீ ஒரு நல்ல மருமகளா இருந்திருந்தால் என்கிட்ட இந்த உண்மையை சொல்லி இருந்திருக்கணும், மீனா தான் என்கிட்ட சொன்னா வேற யாருக்கும் சொல்லணும்னு தோணவில்லை என்று சொல்கிறார் அடுத்து பாட்டி மீனாவிடம் முத்து எங்கே என்று கேட்க அவரை நீங்க அடிச்சிட்டதால கோவத்துல..

ஈ அடிச்சான் காப்பி என்பது இதுதானா.? அச்சு அசல் சினிமா பிரபலங்களை போலவே இருக்கும் நபர்கள்

உங்க கிட்ட பேச மாட்டேன்னு உக்காந்து இருக்காரு என சொல்வதும் பாட்டி சரி அவனை எப்படி இங்க கொண்டு வருதுன்னு எனக்கு தெரியும் நீ ரூம் கதவை திற என்று சொல்ல மீனாவும் கதவை திறந்து வைக்கிறார்.. பிறகு பாட்டி அண்ணாமலையிடம் சீம்பால் சாப்பிடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதைக்கேட்டு முத்து ஓடி வந்த சீம்பால் எனக்கு கொடுங்க என்று பாட்டியிடம் வாங்கி சாப்பிடுகிறார். அடுத்து எல்லோரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம் வாங்க என்ற பாட்டி சொல்கிறார் அப்பொழுது விஜயா எல்லோரும் சாப்பிடுவதற்கு சேர் இல்ல என்று சொல்ல பிறகு பாட்டி முத்துவை இன்னும் கொஞ்சம் சேர் வந்து போட சொல்கிறார் எல்லோரும் சாப்பிடுகின்றனர் மீனா பரிமாறுகிறார்.

கோதை செய்த செயலால் குடும்பத்தை கல்லாசில்லியாக ஆக்கபோகும் அர்ஜுன்.! தமிழ் எடுக்கபோகும் முடிவு..

அப்பொழுது பாட்டி மீனா நீயும் வந்து உட்கார்ந்து சாப்பிடு என்று சொல்ல விஜயா அவளும் சாப்பிட உட்கார்ந்தால் யாரு பரிமாறது அவ அப்புறம் சாப்பிட்டுப்பா என சொல்வதற்கு பாட்டி அவங்க அவங்க பரிமாறிப்பாங்க நீயும் வந்து உக்காந்து சாப்பிடுமா என்று சொல்ல மீனாவும் முத்து பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்..

பிறகு பாட்டி அண்ணாமலையிடம் எனக்கு மூணு பேரப்பிள்ளைகளை கொடுத்த இப்ப மூணு பேத்திகளும் வந்துட்டாங்க இப்படி குடும்பமா ஒண்ணா உக்காந்து சாப்பிடுவது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்கிறார் பிறகு பாட்டி பொங்கலுக்கு எல்லோரும் ஊருக்கு வரணும் அங்க தான் பொங்கலை கொண்டாடணும் என்று சொல்கிறார்.

அதற்கு முத்துவும் சரி என்று சொல்கிறார் பிறகு ரோகினியிடம் கடை இருக்குன்னு வரமாட்டேன்னு சொல்லாத என்று கேட்க கடைக்கு லீவு விட்டுட்டு வந்துடறேன் பாட்டி என்று சொல்கிறார் ஸ்ருதியும் நானும் வரேன் என்று சொல்கிறார்.. அடுத்து பாட்டி கிராமத்துல உங்களுக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன் என்று சொல்ல எல்லோரும் என்னவென கேட்கின்றனர் அதற்கு முதல்ல யாரு கொள்ளு பேரக் குழந்தைகளை பெற்று தராங்களோ..

அவங்களுக்கு என்னோட நிலம் ஒன்னு இருக்கு அத நான் தரப்போறேன் என்று சொல்கிறார்.. இதை கேட்டு எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர் பிறகு பாட்டி அங்க நெல்லு எல்லாம் அறுவடை பண்ணனும் எனக்கு வேலை இருக்கு நான் சாயங்காலம் ஊருக்கு கிளம்பறேன் என்று சொல்கிறார் இதோட இந்த எபிசோட் முடிந்துள்ளது…