சாப்பிட போன இடத்தில் ரவி, ஸ்ருதியை பார்த்துக் கோபப்பட்ட முத்து.. அண்ணாமலை மனசை மாற்றிய மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today epdisode November 23 : இன்றைய எபிசோடில் கோவிலுக்கு போய்விட்டு முத்துவும் மீனாவும் திரும்ப காரில் வீட்டிற்கு போகின்றனர்.. அப்பொழுது முத்து உன்ன தூக்கிட்டு போனது கை எல்லாம் ரொம்ப வலிக்குது பசிக்குது வேற என்று சொல்ல பிறகு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு சாப்பிட போகின்றனர் அங்கு ரவி, ஸ்ருதியும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதை பார்த்த முத்து இங்க வேணாம் வேற ரெஸ்டாரண்டுக்கு போகலாம் என கிளம்பும்போது ரவி முத்துவை பார்த்து முத்து எப்படி இருக்க உன்ன இங்க பார்ப்பேன் என்று நினைக்கவே இல்ல என்று பேச வரும்போது நீ யாருடா என்கிட்ட பேச என முத்து கேட்பதற்கு நான் உன் தம்பி என ரவி சொல்கிறார்.

ஒரு நாளைக்கு பிக் பாஸ் வீட்டில் இத்தனை சிகரெட் தான் கொடுப்பாங்க.! ஆனால் நான் மிரட்டி கேட்பேன்.. பிக் பாஸ் பிரபலம் பகீர் பேட்டி

நீ என் தம்பியா நீ பண்ண காரியத்துக்கு என் தம்பின்னு சொல்லிக்காத என்று ரவியை திட்டுகிறார் அப்பொழுது ஸ்ருதி என்ன நீங்க ஓவரா பண்றீங்க அன்னைக்கு ஸ்டேஷன்ல அந்த மாதிரி தான் ரவிய அடிச்சீங்க சரி கோவத்துல பண்ணீங்கன்னு பாத்தா எப்ப பார்த்தாலும் ரவிய திட்டிக்கிட்டே இருக்கீங்க நாங்க என்ன தப்பு பண்ணோம் என்று கேட்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணது தப்பு இல்லையா என்று ஸ்ருதியிடமும் முத்து சண்டை போடுகிறார்.

பிறகு ஸ்ருதி உங்க அண்ணன் என்ன இப்படி இருக்காரு அவர் இருக்கிற வீட்டுக்கு தான் என்னை கூப்பிட்டியா என்று ரவியிடம் சண்டை போடுகிறார்.. பிறகு முத்துவும் மீனாவும் நம்ம வீட்டுக்கு போய் சாப்ட்டுகளாம் என்று வீட்டிற்கு வருகின்றனர்.. அடுத்து பார்வதி விஜயா வீட்டிற்கு வந்து என்ன ரவியை வீட்டுக்கு கூப்பிடுறத பத்தி அண்ணாமலை அண்ணன் கிட்ட பேசினியா என்று கேட்க..

வசூல் மழையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. இதுவரை அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

ரவி பேச்சை எடுத்தாலே அவர் கோவப்படுறாரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை அவன பத்தின பேச்சை பேச வேண்டாம் என சொல்லும்போது முத்து வீட்டிற்கு வந்து அவன் எல்லாம் இந்த வீட்டுக்கு வரக்கூடாதுன்னு நான் சொல்லிட்டேன் என சொல்கிறார் உடனே எப்ப சொன்ன என்று கேட்க மீனா வரும் பொழுது ரெஸ்டாரன்டில் ரவியையும் ஸ்ருதியும் பார்த்தோம் அவங்கள பார்த்ததும் முத்து கோபப்பட்டு கத்துனாரு என்று மீனா சொல்கிறார்.

பிறகு மீனா மாமா நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க என்று ரவி அவருக்கு பிடிச்ச பொண்ண நம்ம கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிட்டாரு ஆனா இப்ப அவர் நம்ம கூட சேர்ந்து இருக்கணும்னு நினைக்கிறாரு அவங்களை வீட்டுக்கு கூப்பிடலாமே என்று சொல்லுகிறார் இதைக் கேட்டு விஜயா ஆமாம் மீனா கரெக்டா தான் சொல்றா என்று இப்ப மட்டும் மீனாவுக்கு சப்போர்ட் பண்ணுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.