முத்துவை தனியாக அழைத்து மிரட்டும் மீனா.. தங்கமான மருமகன் என வாழ்த்தும் ஊர்க்காரர்கள்..

Siragadikka aasai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் சில நாட்களுக்கு முன்பு வரையிலும் முத்து மீனாவின் ரொமான்ஸ் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்து வந்தது.ஆனால் எப்பொழுது மனோஜ் ரோகிணி திருமணம் செய்து கொண்டார்களோ அதிலிருந்து ஏராளமான சண்டை சச்சரவுகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

ரோகிணி தான் பணக்கார வீட்டுப் பெண் என பொய் சொல்லுவது கூட தெரியாமல் விஜயா சொம்பு தட்டி வருகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் பொழுது முத்துவின் தம்பி திடீரென காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பெண்ணுடைய அப்பா அண்ணாமலையின் மீது கேஸ் கொடுத்தார்.

எனவே இதனால் அந்த திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்ட மீனாவின் மீது கடும் கோபத்தில் முத்து இருந்து வருகிறார். தற்பொழுது வரையிலும் மீனாவை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் இதனை வைத்து விஜயா படாத பாடு படுத்தி வருகிறார்.

தோள் கொடுப்பான் தோழன்.. முதன்முறையாக பாக்கியாவிற்கு சப்போர்ட் பண்ணி கோபியவே எதிர்க்கும் ராதிகா…

விரைவில் மீனா வேண்டும் என்று அந்த தவறை செய்யவில்லை என்பதை தெரிந்து கொண்டு முத்து ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தல தீபாவளி என்பதால் மீனா முத்துவுடன் தன்  வீட்டிற்கு வருகின்றனர்.

அப்பொழுது மாப்பிள்ளை ஆரத்தி எடுக்கணும் வெளியிலேயே இருங்க என கூற நான் என்ன பெரிய சாதனை பண்ணிட்டா வந்திருக்கேன் என சொல்கிறார். பிறகு மீனாவின் தங்கச்சி ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்கிறார். அவ தான் பெரிய பெரிய சாதனை செஞ்சிட்டு வந்து இருக்கா என மீனாவை குத்தி காட்ட அதற்கு மீனா என்ன திட்டனும்னா நம்ம வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் திட்டுங்க அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாம் வருத்தப்படுவாங்க அப்புறம் இது விசேஷ நாளாவே இருக்காது என சொல்ல மீனாவின் தம்பி மோதிரம் எடுத்து வைக்க என்ன இது என முத்து கேட்கிறார்.

அசிங்கப்படும் மாயா.. இப்பதான் மனசே ஆறுதலா இருக்கு.! தெறிக்கவிடும் அர்ச்சனா, தினேஷ்

அதற்கு மோதிரம் மாமா என சொல்ல அதான் ஏற்கனவே ஒரு செயினை போட்டீங்களே அதுக்கு பட்ட பாடு எனக்கு தான் தெரியும். உங்களுக்கு நகை போடணும்னா இவளுக்கு போடுங்க என சொல்லிவிட்டு பிறகு அதான் பெரிய பெரிய வேலை எல்லாம் பாக்குறல அப்பனா இந்த வெடிய பாத்தவை என சொல்ல மீனா பட்டாசை வெடிக்கிறார். இந்த நேரத்தில் முத்து, மீனா இருவரும் மோதிக் கொள்கின்றனர். இதனை அடுத்து மீனா அம்மாவிடம் உனக்கு நல்ல மருமகன் கிடைச்சிருக்காரு எனக் கூற முத்து மகிழ்ச்சி அடைகிறார்.