முத்துவை குடிக்க வைத்து காரியத்தை சாதிக்க பார்க்கும் ரோகிணி.. அண்ணாமலையை காலால் உதைக்கும் நபர். ஸ்ருதியின் அம்மா ஆசை நிறைவேறுமா..

siragadikka aasai march 25 episode : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி பார்லருக்கு ரோகிணி அம்மா வந்துள்ளார் ஆனால் அந்த சமயத்தில் விஜயாவும் அங்கு வந்ததால் ரோகிணி அம்மா முகத்தில் எதையோ பூசி உட்கார வைத்து விடுகிறார், விஜயா பிறகு உள்ளே வரும் பொழுது இவர் ரெகுலர் கஸ்டமர் என சொல்லி விடுகிறார் அதுமட்டுமில்லாமல் உங்க அப்பா எப்பொழுது வருவார் என பேசிக் கொண்டிருக்கிறார் மேலும் உங்க அம்மா இருந்திருந்தால் அவங்களும் வந்து இருப்பாங்க அவங்கதான் அல்பாய்ஸ்ல போய்ட்டாங்களே என பேசுகிறார்.

ரோகினியின் ஒரிஜினல் அம்மாவிடம் இவளுக்கு அம்மா கிடையாது நான்தான் அம்மா மாதிரி நல்லா பாத்துக்கிறேன் என கூறுகிறார் அதற்கு நல்ல விஷயம் என ரோகிணியின் அம்மா கூறுகிறார் இப்படி பேசி கொண்டிருக்கும் பொழுது ரோகினி அம்மா கண்ணில் தண்ணீர் வர உடனே விஜயா அதனை கவனித்துக் கூறுகிறார் அதற்கு ரோகிணி ஏதோ சொல்லி சமாளிக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அர்ஜுன் சொன்னவாக்குமூலம்.. நீயெல்லாம் ஒரு அண்ணனா தமிழை திட்டி தீர்த்த ராகினி..! மாப்ள இந்த ரிவிட் போதுமா..

அடுத்த காட்சியில் ரோகிணி ரோகிணி அம்மாவிடம் விஜயா பற்றி பேசுவதற்கு முன்பே நான் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார் அடுத்த நாள் காலையில் மண்டபத்திற்கு அனைத்து வித ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார் ஸ்ருதியின் அம்மா மற்றும் அப்பா அப்பொழுது அண்ணாமலை குடும்பம் மண்டபத்திற்கு வருகிறது உடனே ஸ்ருதியின் அப்பா கோபப்பட்டு கிளம்ப பார்க்கிறார் அவரை தடுத்து நிறுத்தி சுருதியின் அம்மா அனைவரையும் வரவேற்கிறார்கள்.

விஜயா ஸ்ருதியின் அம்மாவிடம் ரோகிணிக்கு எங்க ரூம் இருக்கிறது என கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் மிகப்பெரிய விழாவாக ஏற்பாடு செய்ததற்கு என் மருமகள் கொடுத்து வச்சிருக்கணும் என பேசுகிறார்கள். ரோகினியை அழைத்துக்கொண்டு ரூமுக்கு செல்கிறார் அதேபோல் அண்ணாமலை ஸ்ருதியின் அப்பாவுக்கு வணக்கம் சொல்கிறார் அடுத்ததாக முத்து வருகிறார் நக்கலாக பரபரப்பாக கும்பிடு போடுகிறார் இதனைப் பார்த்த ஸ்ருதியின் அப்பா பதட்டம் அடைகிறார்.

மேலும் ரோகிணி ரூமுக்கு வந்தவுடன் ரோகிணியின் தோழி வருகிறார் அவரிடம் இந்த விஜயா தொல்லை தாங்க முடியல எப்ப பாரு நிமிஷத்துக்கு ஒரு தடவை உங்க அப்பா எங்க வந்து இருக்காருன்னு கேக்குறாங்க இதுக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்கணும் என பேசுகிறார் நல்லவேளை உன்ன வந்து தாலி பிரிச்சு கோக்குற பங்ஷனுக்கு ஏற்பாடு செய்ய சொல்லல நீ தப்பிச்சா என பேச இருந்தாலும் அவங்க என் பக்கமே வராத மாதிரி ஏதாவது செய்யணும் என பேசிக்கொள்கிறார்கள்.

தப்பித்து சென்று போலீஸிடம் தஞ்சம் அடைந்த அர்ஜுன்… வசமாக சிக்க போகும் தமிழ்..

அதற்கு முத்து தான் நம்மளுடைய டார்கெட் முத்துவ எப்படியாவது குடிக்க வச்சாச்சுன்னா முத்து குள்ள இருக்கிற ஒரிஜினல் முத்து வெளியில் வருவான் அதனால செம பிரச்சனை நடக்கும் என பேசுகிறார் அதேபோல் மற்றொரு பக்கம் சுருதியின் அம்மாவும் எப்படியாவது முத்துவை கோபப்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் நாம் நினைத்தது நடக்கும் என பேசுகிறார்.

இப்படி ஆளாளுக்கு முத்துவை டார்கெட் செய்கிறார்கள்  அதேபோல் முத்து அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அண்ணாமலை தன்னுடைய நண்பரை அழைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது அண்ணாமலையை ஒருவர் காலால் சீண்டுகிறார் ஆனால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என அண்ணாமலை எழுந்து தன்னுடைய நண்பரை அழைத்துக் கொண்டு வேறு இடத்திற்கு உட்காரு செல்கிறார்கள்.

முத்துவை வைத்து குடும்பத்தில் சண்டையை மூட்ட பிளான் பண்ணும் ரோகினி மற்றும் சுருதியின் அம்மா! சிறகடிக்க ஆசை

இந்த நிலையில் ரோகிணியின் தோழி விஜயா முத்துவை குடிக்க வைத்து ஆர்பாட்டம் செய்ய வைக்க ஒரு ஆளை செட் பண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் விஜயா வந்து நீ இன்னும் கிளம்பலையா இவ உன்கிட்ட பேசிட்டு இருக்காளா என ரோகினி இடம் கேட்க நான் கிளம்பிட்டேன் மேக்கப் போட்டுட்டேன் புடவை கட்டிட்டு வர்றது தான் என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் வித்யாவும் ரோகிணியும் பேசிக்கொண்டே இருக்கும் பொழுது மனோஜ் உள்ளே வருகிறார் என்ன யார் வருவார் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார் அதற்கு ரோகிணி ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Exit mobile version