காட்டுப் பசியில் இருக்கும் சிம்பு ரசிகர்கள்.. எஸ்டிஆர் 48ல் வில்லனா? ஹீரோவா.? பிரபலம் சொன்ன மாஸ் தகவல்..

Simbu 48: உலகநாயகன் ராஜ்குமார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இது குறித்த அப்டேட் வலைப்பேச்சு அண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக வெற்றி திரைப்படங்களை தந்து வரும் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார்.

இந்த படத்தினை தொடர்ந்து கௌதம் மேனன் உடன் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார் கேங்ஸ்டர் ஆக அசைத்திருந்த இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. கடைசியாக சிம்பு நடிப்பில் பத்து தல வெளியானதை தொடர்ந்து உலகநாயகன் தயாரிப்பில் தனது 48வது பாடத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக இப்படத்திற்கு சிம்பு 48 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எந்த வயதிலும் சாதிக்கலாம்.. 58 வயதில் இமாலய சாதனை படைத்த முத்துக்காளை வாழ்த்தும் ரசிகர்கள்..

விரைவில் படத்தின் படப்பிடி துவங்க இருக்கும் நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்கவுள்ளார். தேசிங்கு பெரியசாமி ரஜினியிடம் இந்த கதையினை கூற ஆனால் ரஜினியால் நடிக்க முடியாமல் போனதால் தற்பொழுது சிம்பு அந்த கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் சமீப யூடியூப் சேனல் ஒன்றில் சிம்புவின் 48வது படம் குறித்து பேசி உள்ளார். அதில் இப்படம் பாகுபலி படம் போல முழுக்க முழுக்க ஒரு ஹிஸ்டாரிக்கல் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார் ஒரு கதாபாத்திரம் முரட்டுத்தனமான வில்லன் மற்றொரு கதாபாத்திரம் சூப்பர் ஹீரோ என இரண்டு கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

கொட்டும் மழையில் மகாவை வீட்டை விட்டு வெளியே தள்ளிய சூர்யா.. விஷயம் தெரிந்து பதறி அடித்து ஓடி வந்த கோடீஸ்வரி.. பரபரப்பான கட்டத்தில் ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்..

இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒன்று உடல் எடை கூட்டி இருப்பது போலவும் மற்றொரு கேரக்டரில் உடல் எடையை குறைத்திருக்க வேண்டும் என்பதால் முதலில் ஒல்லியான கதாபாத்திரத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். சில மாதங்களுக்கு பிறகு குண்டான கேரக்டருக்கான படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்ட இருப்பதாக கூறியுள்ளார்.