எங்கள விட்டுட்டு போயிட்டியே அண்ணா.. விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுத சத்யராஜ்.!

Vijayakanth : பிரபல நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நேற்று உடல் நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார். விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் போன்றவரையும் தாண்டி தொண்டர்களும் சாதாரண எளிய மக்களும் விஜயகாந்த் உடலை பார்த்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் முதலில் தான் சொத்து சேர்த்துக் கொள்ள வேண்டுமென ஆசைப்படுவார்கள் ஆனால் விஜயகாந்திற்கு அந்த எண்ணமே கிடையாது தன்னை சுற்றி இருப்பவர்களையும், இல்லாதவர்களையும் வளர்த்து விடுவதிலேயே அதிகம் நோக்கம் கொண்டார் அதனாலயே காசை வாரி இறைத்தார்.

கரிகாலனை கூர் செத்தி விடும் ஜான்சி ராணி.. ஜனனி கம்பெனியில் பூஜை போடும் வில்லன்…

தன்னுடைய படத்தின் சூட்டிங் அனைவருக்கும் கறி விருந்து சாப்பாடு போட்டு அழகு பார்த்தார். இப்படி நேர்மையாக இருந்த விஜயகாந்தை கருப்பு எம்.ஜி.ஆர், கேப்டன் என செல்லமாக அழைத்து வந்தனர். இப்படிப்பட்டவர் இன்று இல்லாதது பலருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது.

விஜயகாந்தின் உடல் அதிகாலை 4 மணியளவில்  கோயம்பேட்டிலிருந்து தீவு திடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 : 45 மணியளவில் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்துக்கு “கேப்டன் பெயர்” வந்தது எப்படி தெரியுமா.? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..

இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் அப்பொழுது அவர் அண்ணே என்று கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது எந்த நடிகராக இருந்தாலும் அவர்களின் குறையை கேட்டு உதவி செய்த கேப்டன் விஜயகாந்த் அவரது மறைவு தமிழகம் மக்களுக்கும் தமிழகத்திற்கும் பேரிழப்பு அவரது இன்னுயிர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.