கண்டுகொள்ளாமல் விட்ட பிரபல இயக்குனருக்கு சசிகுமார் கொடுத்த வாய்ப்பு.! கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா..

Sasikumar: சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் தொடர்ந்து தங்களது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வது குதிரை கொம்பாக உள்ளது. ஏராளமான பிரபலங்கள் தாங்கள் நடித்த சில படங்களிலேயே பிரபலமாகி இருந்தாலும் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் காணாமல் போய்விடுகின்றனர்.

அப்படி சினிமாவில் முட்டி மோதி தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் சசிகுமார். உதவி இயக்குனராக அறிமுகமான இவர் பிறகு ஹீரோவாக நடிக்கவும் மாறினார் அமீரின் உதவி இயக்குனராக இருந்து சுப்பிரமணியபுரம் என்ற படத்தை இயக்கி ஹீரோவாகவும் மாறினார்.

ராகினியை அடிமையாக்க பிளான் போடும் அர்ஜுன் குடும்பம்!! சரஸ்வதியின் நிலையை அறிந்து சந்தோஷப்படும் அர்ஜுன்..

சுப்பிரமணியபுரம் படத்தில் ஆரம்பித்த சசிகுமார் பொதுவாக தனது படங்களில் காதல் குறைவாகவும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற காட்சிகளும் தரமான வசனங்கள் வைப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பேட்ட படத்தில் கலக்கி இருந்தார்.

இதனை அடுத்து கடைசியாக சசிகுமார் அயோத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தில் மனிதர்களின் உணர்வினை எழுப்பும் வகையிலும் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தி வைத்தது. அயோத்தி படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் அந்த படமும் வெளியாகவில்லை அப்படி தற்பொழுது 40 ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தை ரீமேக்ஸ் செய்யவுள்ளார்.

ராஜியை தேடி அலையும் பாண்டியன் குடும்பம்… கண்ணன் விஷயம் தெரிந்து அதிர்ச்சி ஆகும் ராஜி..

சசிகுமார் கே.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸிடம் கதை கூறி ஓகே வாங்கிவிட்டதாகவும் திரைக்கதை வசனம் முதலானவற்றை பாக்யராஜ் இடமே ஒப்படைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் மற்றும் கிடா படத்தை இயக்கிய ஆர்.ஏ வெங்கட் இவர்களின்  ஒருவரை இயக்க வைக்க முடிவு செய்த சசிகுமார் கடைசியில் வெங்கடை தான் இப்படத்தில் லாக் செய்துள்ளார். மேலும்  பாக்கியராஜ் இப்படத்தில் முக்கியமான கேரக்டர் இருப்பதாகவும் முழுக்க முழுக்க ஆக்சன் குடும்ப கதையை வைத்து உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.