ஆளவந்தான் படத்தில் கமலுக்கு டூப் போட்டது இவர்தான்.. 22 வருடங்கள் கழித்து வெளியான ரகசியம்

Aalavandhan Re-Release: 2001ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆளவந்தான். தாயம் என்கின்ற கமலஹாசன் அவர்கள் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆளவந்தான் படம் உருவாக்கப்பட்டது இது பலருக்கும் தெரியாத உண்மை. உலகநாயகன் கமலஹாசன் இரு வெவ்வேறு கதாபாத்திரங்களில் முற்றிலும் மாறுபாட்டுடன் நடித்து மிரட்டினார்.

பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க அனைவரையும் பிரம்மிக்க வைத்தது. இதனை அடுத்து அண்மையில் மீண்டும் ரீ ரிலீஸ் ஆனது. இதற்கும் ரசிகர்கள் நல்ல ஆதரவு தந்த நிலையில் இதனை அடுத்து இந்த படத்தில் ஒரு முன்னணி நடிகரின் நடிப்பு மறைக்கப்பட்டு இருப்பதாக அவரே வருத்தப்பட்டு பேசியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கதை கேட்பதில் கோட்டை விட்ட தொடையழகி ரம்பா.. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அஜித் படம்

அதாவது ஆளவந்தான் திரைப்படத்தில் உலக நாயகன் கமலஹாசன் அவர்களுக்கு “Body Doubleளாக நடித்தது ரியாஸ் கான் என்பது தெரியவந்துள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு ரியாஸ் கான் ஆளவந்தான் படத்தில் நடித்தது குறித்து உண்மையை கூறியுள்ளார். பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்கள் தொடர்ந்து பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகின்றனர் அப்படி சில காட்சிகளில் நடிக்க முடியாமல் போவதனால் அந்த நடிகருக்கு பதிலாக டூப் வைத்து நடித்து அந்த நடிகர் போலவே தொழில்நுட்பத்தின் மூலம் காண்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ரியாஸ் கான் தனது மனைவியுடன் இணைந்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு நடிகர்களுக்கு பதிலாக சில பல காட்சிகளில் அவருடைய உடல் அமைப்பை ஒத்த உடலமைப்பு கொண்ட மற்றொரு நடிகரை அந்த இடத்தில் நடிப்பார் ஆனால் அவர்களுடைய முகம் வெளியில் தெரியாது போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளுக்கும் அவர்கள் வர மாட்டார்கள் இதை தான் Body Double என கூறுகிறார்கள்.

நேருக்கு நேராக அமிர்தாவை அழைத்த கணேசன்..! அதிர்ச்சியாகும் எழில்.. பாக்கியலட்சுமி இந்த வாரப் ப்ரோமோ

அப்படி தான் ஆளவந்தான் திரைப்படத்தில் நந்து கதாபாத்திரத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவரை போலவே உடல் அமைப்பு கொண்டதால் ரியாஸ் கான் அவருக்கு பதிலாக நடித்துள்ளார். ஆனால் இந்த தகவலை படக் குழுவினர்கள் யாருக்குமே சொல்லவில்லை. இன்று சிலர் பேசுவது கூட நான் அவர்களிடம் இதைப் பற்றி பேசியதினால் தான் என்று ரியாஸ் கான் வருத்தப்பட்டுள்ளார்.