படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.. ரத்த காயங்களுடன் தப்பிய ரித்திகா சிங் – வெளியான புகைப்படம்

Ritika Singh : தென்னிந்திய சினிமாயுலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை ரித்திகா சிங் இவர் இறுதிச்சுற்று படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார் முதல் படமே பிளக்பஸ்டர் ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல் பல விருதுகளை வாங்கினார் அதனை தொடர்ந்து  ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா..

ஓ மை கடவுளே போன்ற படங்களும் ஹிட் அடித்த நிலையில் கடைசியாக கொலை மற்றும் கிங் ஆப் கோதா ஆகிய படங்களில் நடித்திருந்தார் சரியாக ஓடாததால் தற்பொழுது சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு நடித்து வருகிறார் சமூக வலைதள பக்கத்தில் மிக அக்டிவாக இருக்கும் ரித்திகா சிங் ஜிம் உடையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கான ரசிகர்களை உருவாக்கி வருகிறார்.

பருத்திவீரன் படம் : கார்த்தி ஒருவரால் ஹிட் அடிக்கவில்லை – உண்மையை உடைத்த கஞ்சா கருப்பு

இந்த நிலையில் ரித்திகா சிங் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு காயமாகியுள்ளது அதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை ரித்திகா சிங் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கையில் காயங்கள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதை பார்க்கும் பொழுது நான் ஒரு ஓநாயுடன் சண்டையிட்டது போல் தெரிகிறது எனக் கூறி பகிர்ந்து உள்ளார்.

மேலும் வீடியோவில் இது குறித்து விளக்கமாக கூறியுள்ளார் அவர் சொன்னது.. நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன் அங்கே கண்ணாடி இருக்கிறது கவனமாக இருங்கள் என்று கூறினார்கள் ஆனால் நான் தான் கேட்கவில்லை சில நேரங்களில் நம்மால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது இல்லையா.?

யாருக்கு என்ன எழுதி இருக்கோ அதான் நடக்கும்.. விஜய்யை வைத்து படம் பண்ண மறுத்த பிரபல இயக்குனர்.! தொடரும் சோகம்

நான் கட்டுப்பாட்டை இழந்து விட்டேன் அதனால் இது நடந்து விட்டது என கூறினார் நான் இப்பொழுது எந்த வலியையும் உலரவில்லை ஆனால் சில காயங்கள் மிகவும் அழகாக இருப்பதால் நிச்சயமாக வலிக்கும் என்று நம்புகிறேன் ஊசி போடுவதற்காக படப்பிடிப்பில் இருந்து மருத்துவமனைக்கு செல்கிறேன் இது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன் எனக் கூறியிருக்கிறார்.