மாமாவிடம் இருந்து பணத்தை ஆட்டையை போட்ட கதிர்! ஆபீஸில் சரவணனுக்காக பொண்ணு தேடும் மீனா!! பாண்டியன் ஸ்டோர் 2..

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் கோமதி சரவணனுக்கு பொண்ணு கிடைக்கவில்லை என்பதை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார் . அதோடு மீனாவுக்கு போன் செய்து  பொண்ணு பாக்க போயிட்டு வந்த விஷயத்தையும் கொஞ்ச நேரத்துக்கு பிறகு அவங்க போன் பண்ணி பொண்ணு கொடுக்க முடியாது என சொன்ன விஷயத்தையும் மீனா விடம் கூறுகிறாள்.

மீனா கோமதியிடம் பேசிவிட்டு  அவள் கூட வேலை பார்க்கும் ஒரு அம்மாவிடம் எங்க வீட்ல நடந்த எல்லா விஷயத்தையும் உங்க கிட்ட நான் சொல்லி இருக்கேன் இல்ல  உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்குன்னு சொன்னீங்கல்ல அவங்களுக்கு வரன் இன்னும் சரியா அமையலன்னு சொன்னீங்க. எங்க வீட்டுக்காரரோட அண்ணன்  சரவணன் இருக்காங்கன்னு சொல்லி சொல்லி இருக்கேன்ல அவருக்கு கூட பொண்ணு பாத்துட்டு இருக்காங்க  அவர் ரொம்ப நல்லவரு அவங்களுக்கு உங்க பொண்ண பாக்கலாமா என கேட்கிறார்.

ஹாஸ்பிடலில் டாக்டர் இல்லாததால் பேஷண்டுக்கு ட்ரீட்மென்ட் செய்யும் ராகினி!! அதனால் ஏற்பட்ட விளைவு.. ராகினியை எதிர்க்கும் அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும்..

சரவணன் மாமா ரொம்ப நல்லவங்க அவங்களுக்கு நான் கேரண்டி கொடுக்கிறேன் அது மாதிரி தான் என் அத்தையும் மாமாவும் சரி எல்லாருமே உங்க பொண்ண நல்லா பாத்துப்பாங்க என மீனா அவங்களிடம் சொல்கிறாள். அதற்கு அவங்களும்  பார்க்கலாம் என சம்மதம் சொல்கின்றனர்.

அதற்கு அடுத்த சீனில் செந்தில், கதிர், கோமதி மற்றும்  கோமதியின் தம்பி என அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோமதி செந்தில பார்த்து உன்னால தாண்டா சரவணன்க்கு கல்யாணம் தள்ளி போயிட்டு இருக்கு என திட்டுகிறார். அதற்கு உடனே செந்தில் கதிரை பார்த்து நீயும் தான கல்யாணம் பண்ணியிருக்க ஆனா என்ன மட்டும் அம்மா திட்டுறாங்க என கேட்கிறார்.

ரோகிணி பார்லரை வித்தத முத்து சொன்னா என்ன நடக்கும் தெரியுமா.. கொஞ்சம் அடக்கி வாசிங்க எல்லோரும்..

உடனே கோமதியின் தம்பி ஆமாம் நீ தாண்டா எல்லாத்துக்கும் புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு வச்ச என செந்திலை திட்டுகிறார் . உடனே செந்திலும் கதிரும் சேர்ந்து  மாமாவின் போனை புடுங்கி சரவணனுக்கு பொண்ணு தேடுவதற்காக மேட்ரிமோனிக்கு அப்ளை பண்ணி 8000 ரூபாய் பணத்தை மாமா போனிலிருந்து ஆட்டையை போட்டு விடுகின்றனர்.

அதோடு ராஜீ அவளுடைய பிரண்டோடு திருச்சிக்கு செல்கிறார். அங்கு போய் கண்ணனின் நண்பனுக்கு போன் செய்து நாங்க திருச்சியில் பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்துல தான் இருக்கோம் நீங்க இங்க வாங்க என கூறுகிறார். அத்தோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.