சவாலில் ஜெயித்த முத்து வேல்.. நியாயம் கேட்க வீட்டுக்கு வந்த பாண்டியனை அசிங்கப்படுத்திய சக்திவேல்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்..

Pandian stores 2 today episode november 08 : இன்றைய எபிசோடில் பாண்டியன் என்ன நம்ம வீட்டு பங்க்ஷனுக்கு நம்ம சைட்ல இருந்து யாருமே வரவில்லை என்று பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ஒருவர் வருகிறார் அவரை பாண்டியன் சாப்பிட சொல்ல இப்பதான் உங்க மச்சான் வீட்டு பங்க்ஷன்ல சாப்பிட்டுட்டு வந்தோம்.. அங்க சாப்பாடு சரக்கு எல்லாம் பிரமாதமா இருந்தது எல்லாருமே அங்க தான் இருக்காங்க, சரக்கு ஆறா ஓடிட்டு இருக்கு.. உங்க முகத்துக்காக தான் வந்துட்டு போலாம்னு வந்தோம் என சொல்கின்றனர்..

அடுத்து செந்தில் மீனாவிற்கு சாப்பாடு பரிமாறு சாப்பிட வைத்து அனுப்புகிறார்.. பிறகு பழனி யாரும் இனிமே வர மாதிரி தெரியல மாமா நம்ப சாப்பிடலாம் என்று சொல்ல பாண்டியன் ஓங்கி அறிந்து நான் இங்க அவமானப்பட்டு நிக்கிற உனக்கு இப்ப சாப்பாடு தான் முக்கியமா என்று சொல்லிவிட்டு போய் சாப்பாட திறந்து பார்க்கிறார்..

தம்மாதுண்டு டிரஸ் ஆர்டர் போட்ட ஐஸ்வர்யா.. கோடீஸ்வரி வாங்கிய கடனை அடைக்க மகா பார்க்கும் வேலை – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

500 பேருக்கு சமைச்ச சாப்பாடு எல்லாம் அப்படியே இருக்கின்றன 100 பேர் கூட சாப்பிடவில்லை உங்க அண்ணனுங்க திட்டம் போட்டு இங்க யாரும் வராத மாதிரி பண்ணிட்டாங்க என்று கோமதி இடம் சொல்லிவிட்டு கோபமாக பாண்டியன் வீடு குடும்பம் எல்லோரும் முத்துவேல் வீட்டிற்கு வருகின்றனர்.. அங்கு முத்துவேலும் சக்திவேலும் பிறந்தநாளுக்கு வந்த எல்லோரையும் சாப்பிட வைத்து ட்ரிங்க்சை கொடுத்து பாண்டியன் வீட்டு காரியத்துக்கு போக விடாமல் பண்ணுகின்றன இதைப் பார்த்த மாறியும் வடிவும் வீம்புக்குனே இப்படி பண்றாங்க இதனால என்ன பிரச்சனை வரப்போகுதோ என்று பயந்து கொண்டிருக்கின்றன..

அடுத்து பாண்டியன் முத்துவேல் வீட்டிற்கு வந்ததும் முத்துவேல் பாண்டியனை பார்த்து என்ன சமைச்ச சாப்பாடு எல்லாம் வீணா போச்சா, யாருமே உன் பங்ஷனுக்கு வரலையா இப்ப தெரியுதா யாரு பெரிய மனுஷன் என்று என் வீட்டு பங்க்ஷனுக்கு வரக்கூடாதுன்னு நீனா குறுக்கு வழியில் திட்டம் போட்டு வச்சிருக்க, அப்புறம் எப்படி வருவாங்க என்று இரண்டு பேரும் சண்டை போடுகின்றன..

அதிகபட்ச வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கும் போட்டியாளர்.. இந்த வாரம் அசிங்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் இவர்தான்

பிறகு சக்திவேல் உனக்குன்னு சொந்தக்காரங்க அப்பா அம்மான்னு யாருமே இல்ல ஊரு தயவுல காரியத்தை நடத்தி பெரிய மனுஷன் ஆகலான்னு நினைச்ச அனாதை பையன் நீ என்று சொல்ல உடனே கதிருக்கு கோபப்பட்டு சக்திவேலை அடிக்க கைநோக்குகிறார் அப்பொழுது குமாரவேல் இடையில் வந்து கதிருக்கும் குமாருக்கும் சண்டை நடக்கின்றன. ரெண்டு குடும்பமும் முற்றி மோதி கொள்கின்றன பாண்டியன் அப்படியே உறைந்து போய் நிற்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது