சரவணனின் காதலை கண்டுபிடித்த ராஜி!! பெண் பார்க்க கிளம்பும் பாண்டியன் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர்.

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் கதிர் வீட்டின் வெளியே திண்ணையில் உட்கார்ந்து இருக்கிறார். அப்போது ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பா இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். கதிரை பார்த்ததும் ராஜி யின் சித்தப்பா இப்பல்லாம் வீட்டுக்கு வரத்துக்கே புடிக்கல என பேசிக் கொண்டிருக்கிறார் அப்போது பைக் சத்தம் கேட்டு ராஜி அவரது அப்பாவை பார்ப்பதற்காக ஓடி வருகிறாள். அவளைப் பார்த்ததும் ராஜியின் அப்பா உள்ளே சென்று விடுகிறார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த கதிர் ஏன் நடிக்கிற இப்படி எல்லாம் ஆகும்னு தெரிஞ்சு தானே நீ ஓடிப்போன இப்ப என்ன வண்டி சத்தம் கேட்டதுக்கே ஓடி வர எனக் கேட்கிறார். உன்னால உங்க அப்பா, எங்க அப்பா, நான் எல்லாரும் கஷ்டப்படுறோம் என திட்டுகிறார்.

ஜெனிக்கு கல்யாணம் பண்ண பிளான் போடும் அப்பா!! மினிஸ்டரை ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்கு போக விடாமல் தடுக்கும் கோபி.. பாக்கியலட்சுமி எபிசொட்

அதைத் தொடர்ந்து வீட்டின் மொட்டை மாடியில் செந்தில், பழனி, கதிர் போனை வைத்து மேட்ரிமோனி ஆப்பிள் பெண் போட்டோவை பார்த்து எந்த பெண் சரவணனுக்கு பொருந்தும் என  பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது சரவணன் அங்கு வருகிறார் உடனே போனை மறைக்கின்றனர். சரவணன் என்ன மறைக்கறீங்க என்ன பார்த்ததும் எனக் கேட்கிறார். அதற்கு பழனி உனக்கு தான் பொண்ணு பாத்துட்டு இருக்கோம் என கூறுகிறார். அதற்கு உடனே சரவணன் வேற வேலையே இல்லையா, எல்லாரும் இதே வேலையா தான் திரியுறீங்களா என சொல்லிவிட்டு படுத்து விடுகிறார்.

அடுத்த நாள் காலையில் ராஜிக்கு போன் இல்லை என சரவணனின் ஒரு ஃபோனை கொடுக்கின்றனர். அந்த போனை ஓபன் பண்ணி ராஜி பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த போனில் சரவணன் முன்னாடி காதலிச்ச பொண்ணோட சாட்  பண்ணிட்டு இருந்த அந்த மெசேஜை பார்க்கிறார். உடனே அதை மீனாவிடம் கூறுகிறார். அங்கிருந்த செந்தில் அந்த போனை வாங்கி அனைத்து மெசேஜ்ஜையும் படித்து காட்டுகிறார் உடனே அனைவரும் சிரிக்கின்றனர்.

5 வயதிலேயே அப்பாவால் ஏற்பட்ட கசப்பான அனுபவம்.. 51 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் அஜித் பட நடிகை.. காரணம் இதுதான்..

அதை தொடர்ந்து மீனா ஆபீசில் வேலை பார்க்கும் ஒரு அக்காவின் பொண்ணை சரவணனுக்கு பெண் பார்ப்பதற்காக 10.30 க்கு வர சொல்லி இருக்காங்க என கோமதியிடம் கூறுகிறார். கோமதி உடனே வா ஆமாம் இன்னைக்கு ஒரு நாள் தான் நல்ல நாளாம் அப்புறம் இத விட்டா இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் நல்ல நாள் அதனால இப்பவே வர சொல்றாங்க எனக் கூற வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

பாண்டியன் சரவணனுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லுகிறார். சரவணன் ஏன் வர சொன்னீங்க என கேட்க உனக்கு பொண்ணு பார்க்க போறேன் என கூறுகிறார். அந்த சமயத்தில் ஏற்கனவே படித்த மெசேஜை வைத்து மீனா, சரவணணை ஓட்ட கதிர், செந்தில், பழனி, ராஜி என அனைவரும் சிரிக்கின்றனர். சரவணனுக்கு அது புரியாமல் முழித்தபடி நிற்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.