அண்ணனா? மகனா? புடவையை வாரி சொருவி கிட்டு சண்டைக்கு போகும் கோமதி… பாண்டியன் ஸ்டோர்

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் கதிர் மட்டும் ராஜி இருவரும் காலேஜ் போவதற்காக வெளியே வந்து நிற்கின்றனர். அப்போது ராஜி அவரது வீட்டையே பார்த்துக் கொண்டிருக்கிறார். ராஜியை பார்த்ததும் பாட்டி மற்றும் ராஜியின் அப்பா என இருவரும் வீட்டுக்குள் போகின்றனர்.

ராஜி காலேஜுக்கு அவருடைய சித்தப்பா உடன் சென்று விடுகிறார். கதிரோ  காலேஜுக்கு பஸ்ஸில் போவதற்காக பஸ் ஸ்டாண்டுக்கு  நடந்து போகிறார். அடுத்த காட்சியில் பாண்டியன் ஸ்டோர் கடையில் சரவணனுக்கு பெண் பார்ப்பது பற்றி செந்தில் மற்றும் கோமதியின் தம்பி என இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

திருடு போன பணத்தை மீட்டு கொடுத்த முத்து.. திருடியவனை செருப்பால் அடிக்க வேண்டும் என கூறும் விஜயா.. விழி பிதுங்கி நிற்கும் மீனா..

அப்போது அப்பா பொண்ணு பாக்குறன்னு நம்ப அமைதியா இருக்க கூடாது நம்மளும் நியூஸ் பேப்பர்ல  மணமகள் தேவைன்னு விளம்பரம் கொடுக்கணும் என பேசிக்கொண்டு இருக்கின்றனர். உடனே முடிவு செய்து விளம்பரம் கொடுப்பதற்கு எப்படி கொடுக்க வேண்டும் என எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த சீனில்  கதிரை ரோட்டிலேயே ஆட்களை வைத்து குமரவேல் அடிக்கிறார். கதிர் அடி வாங்கிவிட்டு எழுந்திருக்க முடியாமல் அங்கேயே கிடக்கிறார். அதனை தொடர்ந்து  சரவணன் தனது மரக்கடையில்  மரங்களைப் பற்றி கஸ்டமர்ரிடம் பேசிக் கொண்டு இருக்க அப்போது கதிர் அவருக்கு போன் செய்து அண்ணன் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் வாங்க என்ன அடிச்சுட்டடாங்க என சொல்கிறார்.

உடனே சரவணன்  செந்திலை அழைத்துக் கொண்டு கதிர் இருக்கும் இடத்திற்கு செல்கிறார் கதிரை பார்த்து ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று விட்டு வீட்டுக்கு கூப்பிட்டு வருகிறார்கள். அப்போது கோமதி கதிரை பார்த்து என்ன ஆச்சு என கேட்கிறார்  அதற்கு சரவணன் கீழே விழுந்து அடிபட்டுவிட்டது என பொய் சொல்கிறார்.

TRP உச்சத்தில் இருக்கும் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை குடும்ப குத்துவிளக்கு மனீஷாவின் புகைப்படங்கள்

உடனே கதிர் ஏன் பொய் சொல்றீங்க உண்மைய சொல்லிடுங்க என சொல்லி உங்க அண்ணன் பையன் குமரவேல் தான் என்ன ஆள் வச்சு அடிச்சிட்டான்  என சொல்கிறார். அதில் பயங்கரமாக கோபமான கோமதி என் மகனை அடிச்சா கேக்குறதுக்கு ஆள் இல்லை என்று நினைச்சுட்டு இருக்கானா அவனை விட மாட்டேன் என சொல்லிவிட்டு முடியை வாரி கட்டிக்கிட்டு புடவையை வாரி சொருவி கிட்டு அவங்க அண்ணன் வீட்டு முன்னாடி போய் நின்னு வெளிய வாங்கடா எவன்டா என் பையன் மேல கைய வச்சது என கத்தி கொண்டு இருக்கிறார்.

அப்போது கோமதியின் அம்மா என்ன ஓவரா சவுண்ட் கேட்கிறது என சொல்லிக்கிட்டே  வீட்டில் இருக்கும் அனைவரும் வெளியே வருகின்றனர். கோமதி கோபமாக  நிற்பதை பார்க்கின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.