ராஜியை ரூமுக்கு அனுப்பி வைக்கும் மீனா!! சரவணனை நினைத்து வருத்தப்படும் பாண்டியன்!! பாண்டியன் ஸ்டோர்..

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் அனைவரும் டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாண்டியன் அரசியிடம் இப்படித்தான் எல்லாத்துக்கும் ஊட்டி ஊட்டி வளர்த்தேன் அவங்க  என்னை ஏமாத்திட்டாங்க நீ என்ன செய்ய போறியோ என சொல்கிறார்..

அவர் சாப்பிட்டுவிட்டு போனதும் அங்கிருந்து கோமதியின் தம்பி சாப்பாடு நல்லாவே இல்ல நான் எங்க அண்ணன் வீட்டுக்கு போய் சாப்பிடுகிறேன் என சொல்லி விட்டு போகிறார் அங்கு போனதும் வீட்டில் இருந்த அவரது அண்ணன்கள் நீதான் இவங்க காதலுக்கு தூது போனியா? கல்யாணம் பண்ணி வச்சியா என கேள்வி கேட்டு மிரட்டுகின்றனர். எனக்கும் ஷாக்கா தான் இருக்கு எப்படி இதெல்லாம் நடந்ததுன்னு நானே யோசிச்சுக்கிட்டு தான் இருக்கேன்  எனக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கு உங்க சாப்பாடு வேணாம் ஒன்னும் வேணாம் ஆளை விடுங்கடா சாமி என சொல்லிவிட்டு அங்கிருந்து வந்து விடுகிறார்.

ஆர்டரை புடுங்கியதால் பல்ல குடுங்கடா பாம்பு மாதிரி நிக்கும் அர்ஜுன்.. தமிழுக்கும் கார்த்திக்கும் வெடித்த பெரிய பிரச்சனை.. பிரியப் போகிறதா குடும்பம்..

பின்னர் பசி தாங்க முடியாமல் கோமதியிடம் அக்கா சாப்பிடுவதற்கு ஏதாவது குடு அதற்கு கோமதி எல்லாத்தையும் கொட்டிட்டேன்டா நாய்க்கு மட்டும் தான் கொஞ்சமா பொங்கல் எடுத்து வச்சிருக்கேன் அதான் இருக்கு சாப்பிடுறியா என கேட்கிறார் உடனே பரவாயில்லை அதையாவது எடுத்துட்டுவா வயிறு ரொம்ப பசிக்குது என சொல்லிவிட்டு வாங்கி சாப்பிடுகிறார்.

சாப்பிட்ட உடனே தூங்குவதற்கு மாடிக்கு செல்கின்றார் அங்கு சரவணன் மட்டும் தான் இருக்கிறார் உடனே நம்மளோட இந்த இடத்திலிருந்து ஆள் கொறஞ்சிக் கிட்டே இருக்காங்க நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம் என  சொல்கிறார். அதற்கு சரவணன் அடுத்தது உங்களுக்கு தான் மாமா கல்யாணம் என சொல்கிறார். உடனே அதற்கு அவர் ஒரே நேரத்துல மாமாவும் அண்ணன்களும் போட்டி போட்டுகிட்டு பொண்ணு பாக்குறேன்னு சொன்னாங்க அதோட சரி அடுத்த நாளே அதை மறந்துட்டாங்க எனக்கு எப்போ கல்யாணம் நடக்க போது உனக்கு தாண்டா மாப்ள கல்யாணம் நடக்கும் என சொல்கிறார்.

வேலை போனதால் மனோஜை வெளுத்து வாங்கும் ரோகினி.. மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் மீனாவின் அம்மா.. உண்மையை சொல்வாரா முத்து..

இப்படி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே மாடிக்கு கதிர் வருகிறார் உடனே  சரவணன் இவனுக்கும் செந்திலுக்கும் இதே வேலையா போச்சு கல்யாணம் ஆனா அடுத்த நாளே இங்க வந்துடுறாங்க என சொல்லி சண்டை போட்டு அவரைக் கொண்டு போய் ரூமில் விடுகிறார்.

இதை பார்த்த பாண்டியன்  இவ்வளவு நல்லவனா இருக்கானே இவனுக்கு இன்னும் கல்யாணம் நடக்கல என நினைத்து யோசித்து கொண்டு இருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.