பொண்டாட்டி பிறந்தநாளை கூட ஞாபகம் வச்சுக்க முடியல பாண்டியன் மீது கோபத்தில் இருக்கும் கோமதி – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

Pandian stores 2 today episode november 15 : இன்றைய எபிசோடில் கோமதியுடைய பிறந்தநாளை விடியற்காலை 12 மணிக்கு கதிர் எழுப்பி கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளார்.. இது எதுவும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த பாண்டியன் பட்டாசு சத்தம் கேட்டு எழுந்து வந்து..

என்ன வெளியே சத்தம் கேட்டது என்று கோமதி மற்றும் பழனியிடம் கேட்க ஏதாவது ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்திருக்கும் என அவர்கள் சொல்கின்றனர் அதற்கு பாண்டியன் டிரான்ஸ்பார்மர் வெடிச்சிருந்தா கரண்ட் போயிருக்குமே என்று வெளியே வந்து பார்க்கிறார் வீட்டு வாசலில் பட்டாசு வெடித்து கிடைக்கிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு வெற்றி குறி போட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்

அப்பொழுது முத்துவேலும் சக்திவேலும் வெளியே வந்து ஏதோ சத்தம் கேட்டது என பார்க்கின்றனர்.. பழனி வேற யாராவது இங்க வந்து வெடிச்சிருப்பாங்க நீங்க போய் தூங்குங்க என்று எல்லோரையும்  கிளப்பி விடுகிறார் . அடுத்த நாள் காலையில் கோமதி உடைய பசங்கள் எல்லோரும் கோமதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு அப்பா உனக்கு வாழ்த்து சொன்னாராம்மா என்று கேட்க..

அவர் என் பிறந்தநாளை மறந்துட்டாரு எனக்கு வாழ்த்து சொல்லவில்லை என கோமதி சொல்லி வருத்தப்படுகிறார்.. அப்பொழுது வெளியில் இருந்து வீட்டிற்கு வரும் பாண்டியன் என்ன எல்லாரும் ஒன்னா சேர்ந்து மீட்டிங் போட்டு இருக்கீங்க போய் வேலையை பாருங்க என்று சொல்கிறார்.. பிறகு கடைக்கு போவதற்குள் பாண்டியன் வாழ்த்து சொல்வார் என கோமதி எதிர்பார்க்கிறார் ஆனால் பாண்டியன் கோமதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாமலே கடைக்கு சென்று விட்டார்.

இந்த வாரம் ஏஜென்ட் டீமில் இருந்து வெளியேறும் போட்டியாளர்.! புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சா இப்படித்தான்..

அடுத்து கோமதி அரசியிடம் என்னோட அண்ணன்களை எல்லாம் எதிர்த்து உங்க அப்பாவ கல்யாணம் பண்ணிட்டு வந்தேன். உங்க மாமா வச்சு சூடு கூட இன்னும் எனக்கு மறையவில்லை ஆனா உங்க அப்பா என் பிறந்த நாளை எப்படி மறக்கலாம் என்று சொல்லி வருத்தப்படுகிறார்.. பிறகு கோமதி பாண்டியனுக்கு போன் பண்ணி என்ன வேலையா இருக்கீங்களா என்று கேட்டு கடையில சும்மா உக்காந்து இருப்பாங்களா..

வேலையா தான் இருக்க, ஏன் போன் பண்ணி டார்ச்சர் பண்ற என்று கத்திவிட்டு ஃபோனை வைக்கிறார்.. அடுத்து ஒருவர் பாண்டியனிடம் வந்து புடவை கொடுக்கிறார் அந்த புடவையை பார்த்து பாண்டியன் பழனிகிட்ட எப்படி இருக்கு உங்க அக்காவுக்காக தான் வாங்கினேன். அவ காலையிலிருந்து நான்  பிறந்தநாள் வாழ்த்து சொல்லலன்னு வீட்டையே இரண்டு ஆக்கி கிட்டு இருக்கா..

நான் எப்படி அவ பிறந்த நாள மறப்பேன் என்று சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு போய் உங்க அக்காவை பார்த்து இந்த புடவையை கொடுத்துட்டு வரேன் என பாண்டியன் வீட்டுக்கு கிளம்புகிறார் பிறகு குழலியும் வீட்டிற்கு வந்திருக்கிறார்.. கோமதி இன்னும் அவர் நமக்கு வாழ்த்து சொல்லவில்லையே என்று வருத்தத்தில் தான் இருக்கிறார் இதோடு இன்றைய எபிசோட் முடிந்துள்ளது