முத்துவேல், சக்திவேல் மேல் உள்ள கோபத்தில் கதிரை போட்டு அடித்த பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

Pandian stores 2 today episode november 09 : இன்றைய எபிசோடில் சக்திவேல் பாண்டியனை பார்த்து உனக்குன்னு சொந்தக்காரங்க யாருமே இல்ல ஊரு தயவுல காரியத்தை நடத்தலாம்னு பார்த்த அனாதை பையடா நீ என்று சொல்ல கதிருக்கு கோபம் வந்து சக்திவேலை அடிக்கப் போக பிரச்சனை பெருசாகி இரண்டு குடும்பமும் சண்டை போட்டுக் கொள்கின்றன.

பிறகு கோமதியும் என் அண்ணனுங்கன்னு கூட பார்க்க மாட்டான் வயிறு எரிஞ்சு சொல்றேன் நீங்களா நல்லாவே இருக்க மாட்டீங்க என்று சாபம் விடுகிறார்.. பிறகு காந்திமதி இப்ப ரெண்டு பேரும் சண்டை நிறுத்துறீங்களா இல்லனா நாளைக்கு என்னோட டெத்  செய்தியை தான் அலோன்ஸ் பண்ணுவீங்க என்று சொல்ல ரெண்டு குடும்பமும் சண்டையை நிறுத்துகின்றன.

எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றிய அப்பத்தான்.. கடுங்கோபத்தில் குணசேகரன்.. கொதித்து எழுந்த கதிர்

அடுத்து வீட்டுக்கு வந்ததும் பாண்டியன் கதிரை உனக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது வெட்டுவேன் குத்துவேன்னு சொல்ற, ஒன்னோட ரெண்டு அண்ணன்களும் சும்மா தான இருக்காங்க படிக்கிற பையன் மாதிரியா நடந்துக்குற ரவுடி பையன் மாதிரி பண்ற நான் இப்படியா உன்னை வளர்த்தேன் நான்தான் பேசிட்டு இருக்கேன்..

இல்ல நீ பேசாம இருக்க வேண்டியதுதானே என கதிர் மேல் கோபப்பட்டு கதிரை போட்டு பாண்டியன் அடிக்கிறார். பிறகு கோமதி அவங்க மேல உள்ள கோபத்துல ஏன் என் பையன அடிக்கிறீங்க என சொல்கிறார்.. மற்ற அக்கா அண்ணன்களும் எங்களுக்கும் கோபம் தான் வந்தது, கதிர் அடிச்சதுல தப்பே இல்லை என எல்லோரும் சொல்கின்றனர்.. பிறகு பழனி கதிரிடம் அப்பாவை சொன்னதால..

மாடலிங் துறையில் கால் எடுத்து வைத்த ஐஸ்வர்யா.. வீட்டில் வெடிக்க போகும் அணுகுண்டு – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

தானே நீ அப்படி கோவப்பட்ட உன்ன பத்தி மாமா புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாரு.. இனிமே நீ அமைதியா இரு அப்பதான் அவருக்கு உன்ன பிடிக்கும் என்று சொல்ல அப்பா ஏதாவது சொல்லிட்டு போறாரு, எப்படி அவனுங்க அப்பாவ அனாதைன்னு சொல்லலாம் எனக்கு கோபம் வர தான் செய்யும் உங்க அண்ணன்களை இனிமேல் ஜாக்கிரதையா இருந்துக்க சொல்லு என பழனியிடம் சொல்கிறார்.

பிறகு பாண்டியன் கோமதி இடம் எனக்கு அப்பா அம்மா இல்லனாலும் நீ இருக்க என் பசங்க இருக்காங்க அப்புறம் ஏன் உங்க அண்ணன் அனாதைன்னு சொன்னாங்க என்று வருத்தமாக பேசுகிறார் பிறகு என்ன அனாதைன்னு சொன்னதும் கதிருக்கு எவ்வளவு கோபம் வந்தது என்று கோமதி இடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிந்துள்ளது.