எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றிய அப்பத்தா.. கடுங்கோபத்தில் குணசேகரன்.. கொதித்து எழுந்த கதிர்

Ethirneechal serial today promo: எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா யாருக்கு தனது 40% சொத்தை தருவதாக அறிவிக்க இருக்கும் நிலையில் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். வேண்டுமென்றே  இந்த ஃபங்ஷனுக்கு வரவழைத்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள வேண்டும் என குணசேகரன் முடிவு செய்துள்ளார்.

எனவே ஜீவானந்தத்தின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கௌதம் யாருக்கும் தெரியாமல் துப்பாக்கியுடன் பாதுகாப்பாக இருந்து வருகிறார். அப்படி கோவிலில் நடைபெற்ற திருவிழாவிற்கு வந்து ஈஸ்வரிடம்  தனது மகள் வெண்பாவை அழைத்துச் செல்வதற்காக ஜீவானந்தம் வர இதனை குணசேகரன் பார்த்து விடுகிறார்.

மாடலிங் துறையில் கால் எடுத்து வைத்த ஐஸ்வர்யா.. வீட்டில் வெடிக்க போகும் அணுகுண்டு – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

பிறகு நாளைக்கு நடைபெறும் பங்ஷனுக்கு வருமாறு கூற மருமகள்கள் அனைவரும் பயப்படுகின்றனர். தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பது தெரிந்தும் ஜீவானந்தம் அப்பத்தாவுடன் அங்கு நடைபெறும் பங்ஷனுக்கு வருகின்றனர். ஆனால் அப்பத்தா யாருக்கு தனது சொத்து என்பதை கூறியிருக்கும் நிலையில் இதனால் கதிர் செம கடுப்பில் உள்ளார்.

அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சக்தி கௌதமை கூப்பிட்டுக் கொண்டே வண்டியின் பின்பு செல்கிறார். மறுபுறம் அப்பத்தா எல்லாருமே எனக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்தாங்க எனக்கு நம்பிக்கையை கொடுத்தது என் பேரன் குணசேகரன் தான். ஒவ்வொரு மருமகளா வீட்டுக்கு வந்தாங்க ஆனா எந்த மாற்றமும் நடக்கல அப்புறம் தான் ஜனனி வந்தா அதன் பிறகு தான் சின்ன மாற்றங்கள் நடந்தது என்று பேசிக் கொண்டிருக்கும்போது கௌதம் வருகிறார்.

முதல் முறையா கரெக்டா கேள்வி கேட்ட ராதிகா.! செழியன் கதை முடிஞ்சது.. அடுத்து எழில் தான்.. கவலைப்படும் பாக்கியா..

மேனேஜிங் ட்ரஷ்டியா நான் ஜீவானந்தத்தை நியமிச்சி இருக்கேன் என சொல்ல கதிர், குணசேகரன் கோபப்படுகின்றனர். இந்த நேரத்தில் கௌதம் துப்பாக்கியை வைத்து சுடுவதற்காக முயற்சி செய்ய அப்பத்தா பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.