பிரபல விஜய் டிவியில் தற்பொழுது பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை கவரும் அளவிற்கு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தமிழர்கள் மனதை வெகுவாக கவர்ந்த ஷோ குக் வித்து கோமாளி தான்.
இந்நிகழ்ச்சி தற்பொழுது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.முதல் சீசனில் இருந்த கோமாளிகள் அனைவரும் இரண்டாவது சீசனிலும் இருந்து வருகிறார்கள்.
ஆனால் குக்குகள் அனைவரும் மாறியுள்ளார்கள் அந்த வகையில் இரண்டாவது சீசனில் குக்குகளாக அஸ்வின், கனி, பாபா மாஸ்டர், பவித்ரா, ஷகிலா,தர்ஷா குப்தா உட்பட இன்னும் சிலர் அறிமுகமானார்கள்.
இவர்களின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் பவித்ரா தான் இவர் இதற்கு முன்பே வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை.
பிறகு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்நிலையில் தற்பொழுது இவர் மலையாள திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை இந்திரா நகர் ரயில்வே நிலையத்தில் வரையப்பட்ட சுவர் ஓவியம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக சென்னையில் சுவர் ஓவியங்கள் வரையபடுப்பது வழக்கம் தான்.ஆனால் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஓவியத்தை வரைந்து உள்ளார்கள்.
அந்த முகம் வேறு யாருமில்லை ஒருபுறம் பவித்ராவின் முகமும் மற்றொரு புறம் ஒரு பையனின் புகைப்படமும் உள்ளது. இந்த புகைப்படத்தை பவித்ராவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.