பணத்தை அள்ளிக் கொடுத்த KPY பாலாவுக்கு என்னாச்சு.. புகைப்படத்தை பார்த்து வேதனை அடையும் ரசிகர்கள்

KPY  Bala : உதவுவதற்கு காசு முக்கியமில்லை தன்னிடம் இருக்கிறதை கொடுத்தாலே போதும் அதற்கு உதாரணம் KPY பாலா.. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார் அதிலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்ததால் அடுத்தடுத்த வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.

ஒன்னு, ரெண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்னும் வாய்ப்புகள் வந்த வண்ணமே இருக்கிறது தான் சம்பாதிக்கும் காசை தான் வைத்துக் கொள்ளாமல் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார். முதலில் மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸை வழங்கினார். மேலும் தன்னை நாடி வந்து கேட்பவர்களுக்கு உதவி செய்தார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி VS நவரச நாயகன் கார்த்திக் : 18 முறை நேருக்கு நேர் மோதியதில் ஜெயிச்சது யார் தெரியுமா.?

அப்படி ஒரு பெண்ணிற்கு ரொம்ப முடியாமல் இருந்த பொழுது அவருக்கு தன்னால் முடிந்த காசுகளை கொடுத்த நிலையில் சென்னையை ஆட்டிப் படைத்த மிக்ஜாம் புயலால்  ரொம்ப கஷ்டப்பட்டவர்களுக்கு தேடி தேடி சென்று உதவி செய்தார் முதலில் 200 பேருக்கு ₹1000 பணம் கொடுத்து உதவினார். அதேபோல் ஒரு ஊருக்கே அரிசி மூட்டை கொடுத்து உதவிய புகைப்படம் எல்லாம் வெளியானது.

இப்படி அள்ளி அள்ளி கொடுத்த பாலாவை ரசிகர்கள் மற்றும் மக்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார். ஏன் இப்படி உதவி செய்கிறார்கள் என பாலாவை பலரும் கேட்டு உள்ளனர்.  அதற்கு பாலா சொன்னது.. 2015 ஆம் ஆண்டு இதேபோல் மக்கள் பாதித்த போது நான் உதவ நினைத்தேன் ஆனால் என் கையில் அப்பொழுது காசு இல்லை இப்பொழுது காசு இருக்கிறது அதனால் உதவுகிறேன் என கூறினார்.

ரவீனாவை வெளுத்து வாங்கிய கமல்.. மணிக்கு கிடைத்த அடையாளம்.. அதிரடியான பிக் பாஸ் ப்ரோமோ

இப்படி தன்னால் முடிந்த பணத்தை கொடுத்து உதவி வரும் பாலா  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரல் உடைந்து கட்டுப்போட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இதை பார்த்த பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் உங்களுக்கு கண் திருஷ்டி ப்ரோ  வீட்டுல சுத்தி போட சொல்லுங்க என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Kpy Bala
Kpy Bala