அந்த நடிகரின் மகன் தான் என்னை துரத்தி துரத்தி லவ் டார்ச்சர் செய்கிறான்.! மனம் திறந்த கீர்த்தி செட்டி

keerthi-shetty
keerthi-shetty

இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி ஷெட்டி தற்பொழுது உள்ள இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் வாரியர் படத்தில் இடம்பெற்றிருந்த புல்லட் பாடலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்m

ஒரே பாடலின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் இதனை அடுத்து நாக சைதன்யா உடன் இணைந்து கஸ்டடி என்ற படத்தில் நடித்தார் இந்த படத்திலும் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. மேலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் தற்பொழுது நடிகை கீர்த்தி செட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கீர்த்தி ஷெட்டிக்கு சூப்பர் ஸ்டாரின் மகனால் தொல்லை எனவும் எங்கே போனாலும் அவருடன் வரச் சொல்லி வற்புறுத்துகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு இதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சமீப காலங்களாக இது தொடர்ந்து பரப்பி வருவதனால் இதற்கு முதன் முறையாக கீர்த்தி செட்டி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட ஸ்டோரியின் எனக்கு ஒரு நட்சத்திர ஹீரோயின் மகனால் தொல்லைகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் நான் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அந்த நபர் துன்புறுத்துவதாகவும் அடிக்கடி தான் செல்லும் இடங்களுக்கு வருமாறு வற்புறுத்துவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த ஆதாரம் மாற்ற வதந்திகளை தான் முதலில் எடுத்துக் கொள்ள விருப்பம் இல்லை ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறேன்.

இந்த மாதிரி ஒரு விஷயம் நடக்கவில்லை ஏதாவது ஸ்டோரி எழுத வேண்டும் என்றால் மற்றவர்களை காயப்படுத்தாமல் எழுதுங்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கூறியுள்ளார். தற்பொழுது கீர்த்தி ஷெட்டி ஜெயம் ரவியுடன் புதிய படம் ஒன்றில் இணைந்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஜீனி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது இதில் கீர்த்தி ஷெட்டியும் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது.