வசூல் வேட்டையாடும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்.. 2 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Jigarthanda DoubleX : சினிமா உலகில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அதன் இரண்டாவது பாகம் வெளிவருவது வழக்கம் அந்த வகையில் ஜிகர்தண்டா படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உருவானது இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி உலகம் எங்கும் கோலாகலமாக வெளியானது.

படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா,  நிமிஷா சஜயன்,சைன் டாம் சாக்கோ, பாவா செல்லதுரை, இளவரசு, அரவிந்த் ஆகாஷ், சக்திவேல் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். இந்த படத்தின் கதை.. மிகப்பெரிய தாதாவாக இருக்கும் ராகவா லாரன்ஸ் போட்டுத்தள்ள பல திட்டங்கள் வகுக்கின்றனர்.

வசூலில் மரண அடி வாங்கிய கார்த்தியின் ஜப்பான்.. 2 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

ஆனால் அனைத்துமே முறியடிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் ராகவா லாரன்ஸ் திரைப்படத்தில் நடிக்க ஆசை இருப்பதை தெரிந்து கொண்டு அதன் மூலம் அவரை பழிவாங்க பிளான் போடுகிறார்கள் அதன் பிறகு நடக்கும் ஆக்சன், எமோஷனல் தான் படத்தின் கதை..

படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான  விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் 4 கோடிக்கு மேல் வசூல் ஆகிய நிலையில் இரண்டாவது நாளில் வசூல் அதிகரித்துள்ளது.

சூனியக்காரி மாயாவை வெளுத்துவிட்ட கமல்.! அப்புறம் என்னா ஜோவிகாவுக்கு லெஃப்ட் அண்ட் ரைட் தான்.! சரியான சாட்டையடிதான்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் உலகமெங்கும் இரண்டாவது நாளில் சுமார் 5 கோடி அள்ளி உள்ளது. மொத்தமாக  9 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளதால் ஜிகர்தண்டா படம் தான் ரியல் வின்னர் என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.