அதிக ரிஸ்க் எடுப்பார்.. அஜித்துக்கு கோபம் வந்தா.? பிரபல நடிகர் சொன்ன தகவல்

Ajith : ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் நடிகர் அஜித்குமார் இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் ஆக்சன் மற்றும் த்ரில்லர் வந்த படமாக உருவாகி வருகிறது.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் பற்றி குணச்சத்திர நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான சக்திவேல் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் சொன்னது என்னவென்றால்..

சும்மா கிடந்த சங்கை ஊதி பார்த்தது ஒரு குத்தமா.. சூர்யாவின் பேச்சால் கடுப்பான வெற்றிமாறன்.. கேள்விக்குறியாகும் வாடிவாசல்

நடிகர் அஜித்துடன் பழைய திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன்.  அவர் ரிஸ்க் எடுத்து நடிக்க கூடியவர் நானும் அதிக ரிஸ்க் எடுத்து நடிப்பேன்.. அப்பொழுது எனக்கு கை கால்களில் எல்லாம் ரத்தம் வந்துவிட்டது அஜித் எப்பொழுதுமே உதவியாக இருப்பார். நல்ல மனிதர்  எப்பொழுதும் அமைதியாக தான் இருப்பார் சத்தமாக கூட பேச மாட்டார்.

திரைப்படங்களில் அத்தனை பேரையும் போட்டு அடிப்பதை சண்டையிடுவதை பார்த்திருப்போம் நேரில் பார்த்தால் மிகவும் சாந்தமான மனிதர் கோபம் வராது எப்போதாவது கோபம் வந்தாலும் எதுவும் சொல்லாமல் சென்று விடுவார் அதிகபட்ச கோபம் வரும் பொழுதும் கூட முறைத்து பார்ப்பார் அவ்வளவுதான் அப்படி இருப்பது மிகவும் நல்லது என கூறினார்.

தமிழை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த மேகனா.! திருமணமான உண்மையை கூறும் சரஸ்வதி..

திரை உலகில் பொருத்தவரை நடிகர், நடிகைகள் ஏதாவது ஒரு விஷயத்தில் சிக்கிக் கொள்வார்கள் ஆனால் அஜித் திருமணத்திற்கு பிறகு கிசுகிசுவில் சிக்கியது கிடையாது மேலும் நடிகர் மீது பொறாமைப்பட்டோ அவர்கள் உடன் சண்டை போட்டுக் கொள்வதோ அஜித்திற்கு கிடையாது என்பது இதன் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது.