இமான் அண்ணே.. அப்ப மட்டும் நைட் பார்ட்டிக்கு அனுப்பி வச்சீங்க இப்ப ஏன் புலம்புரிங்க.! சர்ச்சையை கிளப்பிய பிரபலம்.

sivakarthikeyan : கோடம்பாக்கத்தில் மிகப்பெரிய பேச்சுப் பொருளாக இருப்பது இமான் மற்றும் சிவகார்த்திகேயன் தான் இவர்கள் பஞ்சாயத்து இன்னும் ஓய்ந்த பாடு இல்லை ஒவ்வொரு நாளும் புது புது சர்ச்சைகள் கிளம்பி கொண்டு தான் இருக்கிறது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார், அதனால் இனிமேல் எப்பொழுதும் அவர் திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற மாட்டேன் என கூறினார் இதனால் பல இணையதள வாசிகள் அப்படி என்ன துரோகம் செய்தார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில்.

Leo : அந்த சீனில் நடிக்கும் போது ரொம்ப பயமாக இருந்தது – மனம் திறந்து பேசிய மடோனா செபஸ்டியன்

சினிமா விமர்சகர் பிஸ்மி சிவகார்த்திகேயனின் நடவடிக்கை சரியில்லை எனவும் அவர் ஏற்கனவே இது போல் ஒரு விஷயத்தில் ஈடுபட்டு கமுக்கமாக மூடிக்கிட்டார் ஆனால் தம்பி போல் நினைத்து இமான் வீட்டிற்குள்ளே விட்டார் அவருக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்துவிட்டார் என பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார்.

அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் இமான் பேட்டி கொடுத்த வீடியோவை எடுக்கும்படி கெஞ்சியதாகவும் பிறகு மிரட்டும் தொணியில் பேசியதாகவும் அந்த வீடியோவை தான் பார்த்து விட்டதாகவும் பிஸ்மி கூறி இருந்தார் அது மட்டும் இல்லாமல் சில ஆடியோ ஆதாரங்களையும் நான் பார்த்தேன் எனவும் கூறி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

மிச்சர் சாப்பிட்டுக்கொண்டு இருந்ததற்கு இத்தனை லட்சமா.? வெளியேறிய யுகேந்திரன், வினுஷா வாங்கிய சம்பளம்…

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சினிமா பத்திரிக்கையாளர் பாண்டியன் மோனிகா இரவு பார்ட்டிக்கு போகும்பொழுது இமான் தடுத்து இருக்க வேண்டும் அப்பொழுது எங்கே போச்சு அவருக்கு அறிவு சிவகார்த்திகேயன் மோனிகாவை நைட் பார்ட்டிக்கு ஒருவேளை கூப்பிட்டு இருக்கலாம் இமானுக்கு எங்கே போச்சு அப்பொழுது அந்த அறிவு.

24 மணி நேரமும் இசையமைப்பதில் இசை உருவாக்குவதில் இருந்து விட்டு குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்காமல் இருந்தால் இப்படித்தான் நடக்கும் இப்பொழுது மனைவி குழந்தைகள் யாருமே இல்லை என பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.