ஒரிஜினல் ஃபீல் வரவே இல்லை.. நேரம் பார்த்து பொன்னியின் செல்வன் படத்தை விமர்சித்த இளையராஜா!

ponniyin selvan :  உண்மை மற்றும் நாவல்களை படமாக எடுப்பதில் கை தேர்ந்தவர் மணிரத்தினம். இவர் கடைசியாக கல்கி நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியிருந்தார் அதன் முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியாகியது. இரண்டாவது பாகம் கடந்த 2023 இல் ஏப்ரல் மாதம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி கண்டது.

இந்த படத்தைப் பார்த்து பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் வியந்தனர்.. இருந்தும் முதல் பாகம் அளவிற்கு இரண்டாவது பாகம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிக்கவில்லை என்பதும் உண்மை.. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு போன்ற பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்..

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி 5 பிரபலங்கள்.! பாண்டிச்சேரிக்கும் சென்னைக்கும் 5000 km மேடம்.? நடிகையை போலந்து கட்டிய ரசிகர்கள்..

பொன்னியின் செல்வன் படத்தில் வெற்றியை தொடர்ந்து  தற்பொழுது மணிரத்தினம் கமலஹாசனை வைத்து தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்நிலையில் பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா பொன்னியன் செல்வன் படம் குறித்து விமர்சித்துள்ளார்.. சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா பொன்னியன் செல்வன் படம் குறித்து சில வார்த்தைகளை பேசி உள்ளார்.

அவர் பேசியது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் 5 பாகங்களாக வெளியாகின இந்த ஐந்து பாகங்களையும் நாங்கள் பலமுறை படித்திருக்கிறோம், நான் பாரதிராஜா பாஸ்கர் போன்ற நாங்கள் எல்லோரும் செட்டில் போட்டி போட்டுக் கொண்டு பொன்னியன் செல்வன் நாவலை படித்துள்ளோம், அதில் வந்தியதேவன் காமெடி வந்திய தேவன் குந்தவி காதல் காட்சி போன்றவை ரசிக்கும் படி இருக்கும்..

16 லட்சம் பணம், 97 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கும் சேர்த்து பூர்ணிமா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா .? இரண்டாவது இடம் உனக்கு தான்

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும் பொழுது அந்த ஒரிஜினல் பீல் எனக்கு இல்லவே இல்லை, இதை நான் குறையாக சொல்லவில்லை அந்த நாவலை படித்தவர்களுக்கு அது நன்றாக புரியும் என்று இளையராஜா விமர்சித்துள்ளார்.. இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகின்றன.