பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியல.. வலியையும் வேதனையும் பகிர்ந்த கஞ்சா கருப்பு

Ganja Karuppu: பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு தனது வாழ்க்கையில் நடந்த அவமானம் குறித்து மனம் திறந்து உள்ளார். பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் கஞ்சா கருப்பு. இந்த படத்தின் மூலம் அறிமுகமான படத்தில் வாழ வந்தான் என்று கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர் இதில் இவருடைய அட்டகாசமான காமெடி ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.

எனவே சிவகாசி, பம்பரக் கண்ணாலே, சண்டக்கோழி, திருப்பதி, கோடம்பாக்கம், உனக்கும் எனக்கும் என ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். இவ்வாறு முக்கிய காமெடி நடிகராக ரசிகர்களின் மனதை கவர்ந்த கஞ்சா கருப்பு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல நிஜத்திலும் ஹீரோ என நிரூபித்த விஜயகாந்த்.. தியாகு சொன்ன பரபரப்பான தகவல்

அப்படி கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் இவருடைய கேரக்டர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பெற்றார்.
இவ்வாறு சினிமாவில் பிரபலம் அடைந்த பிறகு படத்தை தயாரிக்க விரும்பிய கஞ்சா கருப்பு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார்.

இவர் தயாரிக்க தொடங்கியது ஏராளமான பிரபலங்களுக்கு பிடிக்கவில்லை எனவே இதனால் நஷ்டத்தை சந்தித்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தால் தனது வாழ்வில் நிறைந்த சோகமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

தனது காதல் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. காதலுக்கு முகம் என்று ஒன்று இருந்தால் அது இப்படித்தான் இருக்கும்..

சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த கஞ்சா கருப்பு என்னுடைய பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டாததால் அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் அதனை நினைத்து எனக்கு கண்ணீர் தான் வருகிறது. நான் படம் தயாரித்ததால் எனது அக்கா மகனுடைய பாட்டி, ஐயா, மாமா ஆகியோரை நான் இழந்து விட்டேன் என எமோஷனல் ஆக பேசிவுள்ளார்.