அப்பத்தாவை கொன்றது ஜீவானந்தம் இல்லை.. குணசேகரனுக்கு ட்விஸ்ட் வைத்த எஸ்.கே.ஆர்.! எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது அப்பத்தா உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத புதிராக உள்ளது.

ஆனால் குணசேகரன் இறந்து விட்டதாக கூறி அதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். அப்பத்தாவை கொன்ற குணசேகரனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக சக்தி, ஜனனி முயற்சி செய்து வருகின்றனர். மறுபுறம் ஜீவானந்தம் ஜெயிலில் இருப்பதனால் இவரையும் காப்பாற்ற வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்கள்.

ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கேப்டன்.! என்ன ஆனது? விஜயகாந்தின் தற்போதைய நிலை..

தற்பொழுது குணசேகரன் அப்பத்தாவின் 40% சொத்தை கைப்பற்றுவதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார் இதற்கு துணையாக கதிர், ஞானம் இருந்து வருகின்றனர். இவ்வாறு இவர்கள் ஒருபுறம் அப்பத்தாவின் சொத்தை கைப்பற்றுவதற்காக வேலை பார்த்துக் கொண்டிருக்க மறுபுறம் ஜனனி, சக்தி ஜீவானந்தத்தை ஜெயிலில் இருந்து வெளியில் எடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன், கதிர், ஞானம் மற்றும் எஸ்.கே.ஆர் ஆகியோர்களுக்கு இடையே மீட்டிங் நடைபெறுகிறது. அதில் கதிர் கண்டவன் எல்லாம் வாயைத் திறந்தால் பேசாமல் போக சொல்றியா என்று கேட்க அதற்கு எஸ்.கே.ஆர் அப்பத்தாவை கொன்றது ஜீவானந்தம் இல்லை என குணசேகரனுக்கு ட்விஸ்ட் வைக்கிறார்.

தம்மாதுண்டு டிரெஸ்ஸை போட்ட ஐஸ்வர்யா.. பிளான் ஒர்க் அவுட் ஆகுது என நினைக்கும் கௌதம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

மறுபுறம் ஈஸ்வரி வேலைக்கு வர அங்கு இருக்கும் டீச்சர் ஒருவர் உங்களுக்கு இந்த வேலை கிடைக்கணும்னு ஜீவானந்தம் சார் ரொம்ப மும்பரமா ட்ரை பண்ணதாக சொல்கிறார். இதனையடுத்து ஜீவானந்தம் சார வக்கீல் வச்சி பார்த்தா நிச்சயமாக அவர வெளியில கொண்டுட்டு வந்துடுவோம் சார் என சக்தி சொல்ல அதற்கான அவசியம் இல்லாமல் போயிடுச்சுப்பா என்று வக்கீல் ஜனனி, சக்திக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.