ஜீவானந்தம் பொண்டாட்டியை கொன்னது யாரு… குணசேகரனுக்கு எதிராக அண்ணன்களை திருப்பி விடும் சக்தி… சட்டையை பிடித்து கேள்வி கேட்பாரா ஞானம்..

Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அப்பத்தா இறந்திருப்பதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. எனவே ரசிகர்கள் அப்பத்தா உயிருடன் தான் இருப்பார் விரைவில் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.

அப்பத்தா தனது 40% சொத்தையும் தனக்கு தராத காரணத்தினால் கோபமடைந்த குணசேகரன் ஜீவானந்தத்தையும் அப்பத்தாவையும் தீர்த்து கட்ட முடிவு செய்கிறார். இதற்கான ஆட்களையும் ரெடி செய்த நிலையினால் இதனை தெரிந்து கொண்ட கௌதம் கொலை செய்ய வந்தவரை சுட்டுக் கொன்று விடுகிறார்.

ஒரே வருடத்தில் ரூ.2000 கோடி மிரட்டி விட்ட 5 தமிழ் திரைப்படங்கள்..

இதனை அடுத்து மயக்க மருந்தை கொடுத்து அப்பத்தாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் குணசேகரன். ஆனால் போகும் வழியில் சுடப்பட்டதாக கூறி அனைவரும் இறங்க அப்பத்தா கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குணசேகரன் எங்கு சென்றுள்ளார் என்பது தெரியாமல் இருந்து வரும் நிலையில் மறுபுறம் அப்பத்தா இறந்து விட்டதாக குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் நம்பி வருகின்றனர்.

மேலும் ஜீவானந்தத்தை போலீஸார்களும் கைது செய்துள்ளார்கள் இந்த சூழலில் ஜீவானந்தத்தின் மனைவியை குணசேகரன் தான் கொன்றார் என்ற உண்மையை விசாலாட்சி ஞானத்திடம் சக்தி மற்றும் மருமகள்கள் கூறுகின்றனர்.

பைனான்சியர் வீட்டில் ரோகினி இருந்ததை பார்த்து அதிர்ச்சியான மீனா.. இறங்கி வருவாரா முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், சக்தி அந்த ஜீவானந்தத்தை பொண்டாட்டியை கொன்னது உங்க அண்ணன் தான் அன்னைக்கு மட்டும் ஜெயிலுக்கு போயிருந்தோம்னாவை உன் பிள்ளைகள் எல்லாம் இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பார்கள் என்று கூற கோபமான ஞானம் எல்லாரும் சேர்ந்து நாடகம் போடுறீங்களா என்று கேட்கிறார்.

இதற்கு ரேணுகா உங்க அண்ணன் வேட்டியவே புடிச்சுகிட்டு சுத்துறல ஜீவானந்தம் பொண்டாட்டியை யாரு கொன்னதுன்னு போய் கேளு என்று சொல்கிறார். இதனால் விசாலாட்சி ஞானம் இருவரும் அதிர்ச்சடைகின்றனர்.