ஓட்டுக்காக கொலை செய்ய முடிவு எடுத்த குணசேகரன்.! முழி பிதுங்கும் கரிகாலன்.. குருட்டு நம்பிக்கையுடன் ஜனனி

Ethirneechal serial: எதிர்நீச்சல் சீரியல் தேர்தலை மையமாக வைத்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் குணசேகரன் எப்படியாவது ஜெயித்தாக வேண்டும் என ஏராளமான முயற்சிகளை செய்து வருகிறார். அதேபோல் ஈஸ்வரியும் பல முயற்சிகளை செய்து வந்தாலும் குணசேகரனுக்கு தான் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது.

ஓட்டிக்கு குணசேகரன் பணம் கொடுத்து வரும் நிலையில் ஈஸ்வரி ஜனனி, சக்தி உதவியுடன் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இவ்வாறு எலக்ஷனில் யார் வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் கதைக்களம் இருந்து கொண்டிருக்கிறது. மேலும் குணசேகரன் தான் ஜெயிக்க வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முடிவில் உள்ளார்.

அமிர்தாவை தொடாத அவ என் பொண்டாட்டி.. எழிலுக்கு அதிர்ச்சி கொடுத்த கணேஷ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

அப்படி தற்பொழுது கொலை செய்யக்கூட துணிந்திருக்கும் நிலையில் இதற்கான இன்றைய ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது. நேற்று ஜனனி, ஈஸ்வரி, சக்தி மற்றும் ஜனனியின் தோழிகள் என அனைவரும் பிரச்சாரம் மேற்கொண்டார்கள் அங்கு பெண்களிடமிருந்து ஓரளவிற்கு நல்ல ஆதரவு கிடைத்தது.

இதனை அடுத்து இன்று பிரச்சாரத்தை முடித்துவிட்டு வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஜனனி ஈஸ்வரியிடம் நிச்சயமா நம்ம ஜெயிச்சுடலாம் நம்பிக்கையோடு இருங்க எனக் கூறுகிறார். ஜனனியின் அப்பா அவ என்னை துளி கூட மதிக்க மாட்டேங்குற என கூற அதற்கு ஜனனியின் அம்மா அஞ்சனா சரி ஜனனியும் உங்களை மதிக்கலணு நினைக்கிறீங்களா?

2023 : தியேட்டரில் அதிக கலெக்ஷன் அள்ளிய 5 படங்கள்.. திரையரங்க உரிமையாளர்கள் சொன்ன உண்மை

என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்க மறுபுறம் ஜான்சிராணி கரிகாலனிடம் குணசேகரன் அவங்க மட்டும் குத்தலனா ஆத்தாலயும் மகனையும் ஒரே குத்தா குத்தி போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன் என கூற கரிகாலன் அதிர்ச்சி அடைகிறார் இதோடு இன்றைய ப்ரோமோ நிறைவடைகிறது. நேற்று பிரச்சாரத்தில் அரிவாள் சின்னம் என அறிவாளை கையில் எடுத்துக்கொண்டு ஓட்டு கேட்டது மிரட்டி கேட்பது போன்று இருந்தது இப்பொழுது ஓட்டுக்காக கொலை செய்யவும் குணசேகரன் துணிந்துள்ளார்.