உங்க மாமியார கொன்னது உங்க புள்ள குணசேகரன் தான்.. ஜனனியை அடிக்க கை ஓங்கிய விசாலாட்சி… பரபரப்பில் எதிர்நீச்சல்

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்பொழுது குணசேகரன் ஆதிரையால் போலீசிடம் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது குணசேகரன் ஆதிரை, அருண்  காதலிப்பது தெரிந்தவுடன் ஆதிரைக்கு கரிகாலனை திருமணம் செய்து வைக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வந்தார்.

அப்படி ஒரு கட்டத்தில் அருணை ஆக்சிடென்ட் செய்து விட்டு கரிகாலன் ஆதிரையின் திருமணத்தை நடத்தி வைத்தார். எனவே குணசேகரன் தான் தனது தம்பியை ஆக்சிடென்ட் செய்தது எனத் தெரிந்த எஸ்.கே.ஆர் எப்படியாவது குடும்பத்தினை பழிவாங்க வேண்டும் என நினைத்தார்.

குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ரகளை பண்ணும் முத்து.. வேதனையில் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

அந்த வகையில் சமீபத்தில் கதிரை சில ரவுடிகள் சேர்ந்து தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தனது தம்பியை பழிவாங்க வேண்டும் என நினைத்தது எஸ்.கே.ஆர் அல்லது ஜீவானந்தம் இவர்களில் ஒருவராக தான் இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டு எஸ்.கே.ஆர் வீட்டிற்கு செல்கிறார் அங்கு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆதிரையும் எஸ்.கே.ஆர் வீட்டிற்கு வருகிறார்.

அப்பொழுது அதிரை அருண் ஆக்சிடென்டுக்கு அண்ணா தான் காரணம் என கூற சாருபாலா தனது வீட்டிலேயே இருக்க ஒப்புக் கொள்கிறார். இந்நிலையில் இதனை அடுத்து இன்றைய ப்ரோமோவில் ஞானம் ஆதிரையை கையைப் பிடித்து இழுக்க எங்க வீட்டு பொண்ணு எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு இருக்கோம் உங்க வேலைய பாருங்க போங்க என சாருபாலாவிடம் கூறுகிறார். இந்த நேரத்தில் ஆதிரை போலீசிடம் இவங்க கூட போக விருப்பம் இல்ல சார் என சொல்கின்றார். 

காச வாங்கிட்டு போக ஹனிமூன் வந்திருக்காங்க ரவீனா மணியை ட்விட்டரில் காரித் துப்பும் ரசிகர்கள்… உண்மையை உடைத்த வனிதா..

பிறகு கரிகாலனை ஜான்சிராணி பிடித்து வெளியில் அழைத்துச் செல்ல ஜனனி அருணை ஆக்சிடென்ட் பண்ணி காலை ஒடச்சது உங்க புள்ள தான், உங்க மாமியாரை கொன்னவருக்கு என்ன தண்டனை கொடுத்தீங்க? என கேட்க விசாலாட்சி ஏய் என கத்துகிறார். இதனை அடுத்து கரிகாலன், ஜான்சி ராணி இருவரும் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு வந்து நிற்காத குணசேகரன் இப்ப சொல்றேன் உனக்கு நடந்த தப்புக்கு எனக்கூறி ஏதோ வாக்குறுதி தருகிறார்.