ஜான்சி ராணிக்கு ஓங்கி ஒரு அரை வைத்த ஆதிரை.. போட்டியாளர் வீட்டிற்கு சென்று மிரட்டும் குணசேகரன்.

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது கதிரை சில ரவுடிகள் சேர்ந்து அடித்து காயமடைய வைத்துள்ளனர். எனவே இந்த வேலையை செய்தது எஸ்கேஆர் அல்லது ஜீவானந்தம் இவர்களில் ஒருவராக தான் என குணசேகரன் கூறுகிறார்.

அதற்கு ஈஸ்வரி ஜீவானந்தம் ஏன் இதனை செய்யணும் நீங்க தான் உங்க தம்பியோட ஆள வச்ச ஜீவானந்தத்தின் மனைவிய கொலை செஞ்சீங்களா என கேட்க இதனால் அனைவரும் அதிர்ச்சடைகின்றனர் பிறகு ஜான்சி ராணி வீட்டில் இருக்கும் மருமகள்களை அடக்கி வைக்க வேண்டும் என குணசேகரனை ஏற்றி விடுகிறார்.

லியோவை பார்த்து அஜித் கத்துக்கிட்ட பாடம்.. விடாமுயற்சிக்கு போட்ட கண்டிஷன் – முக்கிய பிரபலம் கொடுத்த அப்டேட்

இவ்வாறு யார் கதிரை அடித்தது என்பது தெரியாமல் இருந்து வரும் நிலையில் மறுபுறம் ஜான்சி ராணி ஆதிரைக்கு இடையேவும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. அதாவது இன்றைய ப்ரோமோவில் வீட்டில் அனைவரும் பேசிக் கொண்டிருக்க அப்பொழுது கதிர் வாசு அவர்களை இறக்கி விடுவிங்க அப்படிதான என ஜனனிடம் கேட்கிறார்.

அதற்கு ஜனனி இதுவரைக்கும் அந்த ஐடியா இல்லை ஆனா இப்ப கொடுத்துடல என ஜனனி கூறுகிறார். இந்த நேரத்தில் குணசேகரன் கிளம்பி விட பிறகு ஜனனியிடம் நாம் போற அண்ணி என ஆதிரை கூறுகிறார். இதற்கு எங்க போற என ஜனனி கேட்காதே ஜான்சி ராணியும் எங்கடி போற ஏ எங்கடி என ஆதிரையை மிரட்ட உடனே ஆதிரை ஜான்சி ராணியை அறைந்து விடுகிறார்.

சினிமாவை ஒதுக்கி வேறு துறையில் சாதித்த வாரிசுகள்.! பல்லாயிரம் பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்த பிரபலம்

இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இதனை அடுத்து குணசேகரன், ஞானம், கரிகாலன் மூன்று பேரும் எஸ்.கே.ஆர் வீட்டிற்கு செல்கின்றனர். அப்பொழுது  குணசேகரன் அரசு எனக் கூறிக்கொண்டே வீட்டிற்குள் செல்ல அனைவரும் பார்க்கின்றனர்.