baakiya-lakshmi-213

கோபி யாருக்கு என பஞ்சாயத்து கூட்டிய ராதிகா மற்றும் பாக்யா.! இது என்ன புதிய டுவிஸ்டா இருக்கு.. வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சுவாரசியமான பல சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி.

விஜய் டிவியில் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் சூப்பர் ஹிட்  பெற்று  வருகிறது.அந்த வகையில் சன் டிவியின் சீரியல்கள் தொடர்ந்த டிஆர்பி-யில் முன்னணி  வகித்து வரும் நிலையில் தற்போது அதனை ஓவர் டேப் செய்து விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் பாக்கியா கோபியை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ள நிலையில் ஈஸ்வரி ராதிகாவின் வீட்டிற்கு சென்று நீ நல்லா இருக்க மாட்ட நாசமா போயிடுவே என மண்ணை வாரி விட்டுவிட்டு வருகிறார்.பிறகு ராதிகா என்ன செய்வது என்று தெரியாமல் கோபியின் மீது மிகவும் கோபத்தில் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கோபியை ராதிகாவை ஏற்றுக் கொள்வாரா இருவரும் மகிழ்ச்சியாக பாடுவார்களா என்ற கேள்விக்குறி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலின் குழுவினர்கள் ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்றுவுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் உண்மை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் போல் வேடம் அணிந்து ராமர் வருகிறார்.

ராமரிடம் பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் பஞ்சாயத்தை சொல்கிறார்கள் அதில் முகமூடி போட்டு கொண்டு கோபியை போல் ஒருவர் வர அவரை போலீசார்கள் கைது செய்கிறார்கள்.இந்த ப்ரோமோ தான் சமீபத்தில் வெளியாகி உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் நிஜத்தில் இப்படி நடந்தால் கூட நல்லா இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஜீவாவின் அம்மாவா இது.? என்னா குத்து குத்துறாங்க.! வைரலாகும் வீடியோ..

தற்பொழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகர், நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகர்,நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சீரியல்களில் நடிப்பதன் மூலம் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். இதில் சில நடிகர்கள் தங்களது உயிரை கொடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர்களும் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் அவர்களின் உண்மையான பெயர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை அந்த கேரக்டரின் பெயர்தான் ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறது. இதன் காரணமாக அந்த நடிகர், நடிகைகளை எங்கு பார்த்தாலும் அந்த சீரியலில் அவர் நடிக்கும் கேரக்டரின் பெயரை சொல்லி அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள தொலைக்காட்சி தான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசனையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தி மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2.

இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் முக்கியமாக ஜீவா மற்றும் பிரியா இவர்களுடைய கேரக்டர் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் சமீப காலங்களாக இவர்களுக்கிடையே ரொமான்ஸ் நடப்பதை பார்த்த ரசிகர்கள் வெட்கமாக இருப்பதாகவும்,கியூட் பேர் எனவும் கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையின் தற்பொழுது ஜீவா மற்றும் பார்த்திபன் ஆகியோர்களின் அம்மாவாகவும் காவியா மற்றும் பிரியாவிற்கு அத்தையாகவும் நடித்து வரும் நடிகை தான் மீனா வேமுரி. இவரின் கேரக்டருக்கும் சமீப காலங்களாக முக்கியத்துவம் இருந்து வருகிறது. மீனா வெமுரி தனது இன்ஸ்டாகிராமில் நடந்த மாடி வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது. இது ஜீவாவின் அம்மா தானா.? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

vijay-tv-2

குக் வித் கோமாளியை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ள விஜய் டிவி.! வெளியான ப்ரோமோ..

ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சி அந்த அளவிற்கு பிரபலமான தொலைக்காட்சி அல்ல காலப்போக்கில் வளர்ந்து விஜய் தொலைக்காட்சி ஸ்டார் விஜய் என மாறியது அதன் பிறகு இந்த தொலைக்காட்சி மக்களிடையே தனக்கென தனி ஒரு இடத்தை அங்கீகரித்தது.

என்னதான் மற்ற தொலைக்காட்சிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தாலும், இந்த விஜய் தொலைக்காட்சியை மட்டும் அவ்வளவு எளிதாக கீழே தள்ள இயலவில்லை ஏனென்றால் இந்த தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் இதில் ஒளிபரப்பபடும் நாடகங்கள் அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்து தன் பக்கம் ஈர்த்துக்கொண்டது.

இந்த தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட்ட கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்று வெற்றியும் பெற்றது மேலும் இந்த நிகழ்ச்சி பல நபர்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி அவர்களை பிரபலமானவர்களாக ஆக்கியது, இதில் முக்கிய புள்ளியாக சிவகார்த்திகேயனை சொல்லலாம், இவரின் தற்போதைய நிலைமைக்கு விஜய் டிவிதான் முதன்மை காரணம் என்றால் அது மிகையாகாது.

மேலும் பல ரியாலிட்டி ஷோக்கலான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி, பிக் பாஸ், சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் போன்ற அனைத்தும் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றவையாகும்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரும் அனைத்து போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானவர்களாக இருப்பார்கள் ஆகையால் அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் சற்று வித்தியாசமாக இருப்பதனால் இந்த நிகழ்ச்சி மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகிறது.

இதற்கு அடுத்தாக பிக் பாஸ், பிக் பாஸில் பல சீசன்களை வெளியிட்டு விஜய் டிவி தனது டிஆர்பி ரேட்டிங்கையும் உயர்த்திக் கொண்டது, ஏனென்றால் பிக் பாஸ் பார்ப்பதற்கு தமிழ்நாட்டில் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் உள்ளனர், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நபர்கள் பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி புதிதாக ஒரு ரியாலிட்டி ஷோவை கொண்டுவர உள்ளது அந்த ரியாலிட்டி ஷோ கேம் ஷோ போன்ற ஒன்று, இந்த நிகழ்ச்சிக்கு அட்டகாசம் என பெயர் வைத்துள்ளனர், ஆகஸ்ட் 14 மதியம் 1:30 மணி அளவில் இந்த ஷோ வெளியாக உள்ளது. மேலும் இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் அதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து விஜய் தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட வீடியோ இதோ.

 

Karthik-Subbaraj

ஜிகர்தண்டா 2 பாகம் உருவாவதை உறுதி செய்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.! அவரே வெளியிட்ட வீடியோ..

பொதுவாக சினிமாவில் ஒரு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய ஒரு வெற்றியினை பெற்று விட்டால் அதனை அடுத்தடுத்த பாகங்கள் தயாரிப்பதனை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் ரசிகர்களும் அந்த திரைப்படங்களின் இரண்டாம் பாகத்திற்கு மிகவும் எதிர்பார்ப்புடனும் இருந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகைகள் தற்பொழுது முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்பொழுது இரண்டாவது பாகத்தை உருவாக்குவதற்காக முடிவு செய்துள்ளார்கள் பட குழுவினர்கள் அவ்வாறு பிளாக்பஸ்டர் வெற்றிப்பெற்ற திரைப்படம் தான் ஜிகர்தண்டா. இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தகவல் கூறியுள்ளார்.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பெண்களின் சாக்லேட் பாயாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சித்தார்த் ஜிகர்தண்டா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.

மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் இத்திரைப்படத்தில் நடித்து மிரட்டிய பாபி சி்ம்ஹா தேசிய விருதை வென்றார். இவ்வாறு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பற்றிய கொண்டாடப்பட்ட இத்திரைப்படத்திம் வெளியாகி இதோடு 8 வருடங்கள் ஆகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் அதனை கொண்டாடும் வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவுது அந்த வீடியோவில் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை எழுதும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 8 வருடங்கள் கழித்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க உள்ள நிலையில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஹீர, ஹீரோயின்கள் யார் என்பது குறித்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பட குழுவினர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

bb jodigal

அமீர்_பாவனிக்கு தகுதி இல்லை என போட்டுடைத்த தாமரைச்செல்வி.! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் தொடர்ந்து விஜய் டிவி சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். முக்கியமாக ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவிட்டார் அதனை அடுத்தடுத்த சீசன்களாக ஒளிபரப்ப தொடங்கி விடுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பிபி ஜோடிகள் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் பிபி ஜோடி நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு பிபி ஜோடிகள் சீசன் நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது சீசனில் ஷாரிக்,அனிதா ஜோடி முதலிடத்தை பிடித்துள்ளனர். நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நாகூர் இருவரும் நடுவர்களாக தலைமை தாங்கி வருகின்றனர். தொடர்ச்சியாக தற்பொழுது பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியன் நடுவராக என்ட்ரிக் கொடுத்து வருகிறார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து உள்ள ஜோடி என்றால் அது அமீர் மற்றும் பாவனி தான். இவர்கள் பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்கள் மேலும் இவர்களுடைய காதல் ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்தது. ஒரு இணைந்து இந்நிகழ்ச்சியில் தனது சிறந்த நடனத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் இவர்கள் இடையே ஒரு கெமிஸ்ட்ரி இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவர்கள் போன வாரம் நடந்த காதல் சுற்றில் அமீர் மோதிரம் கொடுத்து பாவனிக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார். மேலும் காதலை ஏற்றுக் கொள்வதற்கு எனக்கு கொஞ்ச நாட்கள் டைம் வேண்டும் என பாவனி கேட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் வழக்கம் போல் வித்தியாசமான கேம் ஒன்றை வைத்தார்கள் அதில் பிபி ஜோடிகள் ஃபைனலுக்கு செல்ல தகுதியானவர்கள் யார்? தகுதி யாருக்கு இல்லை எனக் கூறி அவர்கள் முகத்தில் கலர் பூச வேண்டும்.

இந்த டாஸ்க் தாமரைச்செல்வி அமீர் பாவனையை இந்த தகுதி இல்லை எனக் கூறியுள்ளார் அதற்கு அவர் சொன்ன காரணம் அமீர் டான்ஸ் மாஸ்டர் அதனால் இவ்வாறு கூறுகிறேன் என கூறியுள்ளார். உடனே நடுவர் ரம்யா கிருஷ்ணன் அதற்கு ஸ்மார்ட் மூவ் தாமரை என வாழ்த்துகிறார். ஆனால் தாமரை இவ்வாறு கூறுவதால் அமீர் மற்றும் பாவணியின் முகம் மாறுகிறது. எனவே ரசிகர்களும் பிக்பாஸ் வீட்டில் வைத்து நடந்ததை வைத்துக் கொண்டு தற்பொழுதும் தாமரை இதே போல் செய்கிறார் என கமெண்டில் கூறி வருகின்றனர்.

farina

குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே பாறையின் மீது நடனமாடிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா.! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் புதுமுக நடிகர் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் சின்னத்திரை நடிகைகள் தொடர்ந்து பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஃபாரினா. இவர் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் மேலும் இவர் குழந்தை பிறக்கும் சில நாட்கள் வரையிலும் நடித்து வந்தவர்.

குழந்தை பிறந்த ஒரு சில வாரங்களிலேயே மீண்டும் அடிப்பதை தொடங்கினார். இவ்வாறு தீவிரமாக நடித்து வரும் இவர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தனது குழந்தை உடன் இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

farina 1
farina 1

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் இவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்தவகையில் தற்பொழுது குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே பாறையின் மீது நின்று இவர் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் அதற்கான இப்படி ஆடுவது என அதிர்ச்சியடைந்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

actor-ajith

வேதாளம் பாடத்தின் வசனத்துடன் பெண் குழந்தையின் தலை மேல் கை வைத்து ஆசீர்வாதம் செய்த நடிகர் அஜித்.! வைரலாகும் வீடியோ..

தனது நடிப்பு திறமையினால் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்திருந்தாலும் மற்ற நடிகர் போல மாறி மாறி பல மொழிகளில் நடிக்காமல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் தொடர்ந்து தமிழில் மட்டும் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு சிறந்த இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் அஜித்.

ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக சென்னையில் நடத்துவதற்கான பணிகளை பட குழுவினர்கள் செய்து வருகிறார்கள். இந்தத் திரைப்படத்தினை எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இதற்கு முன்பு அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களிலும் இவர்களின் கூட்டணியை இருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இவர்களின் கூட்டணியில் ‘ஏகே 61’ திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் அஜித் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அஜித் வரும் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. அஜித் நடிப்பையும் தாண்டி துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட ஏராளமானவற்றில் மிகவும் ஆர்வம் உடையவர் என்பதை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் சமீபத்தில் அஜித் குமாரின் மனிதநேயம் குறித்த பல தகவல்கள் வைரலாகி வருகிறது.

அதாவது நடிகராஜ் பெண்கள் மீது அவர் எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் என்பது பலரும் அறிந்ததே இந்நிலையில் மாநில அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டி திருச்சியில் நடைபெற்று வரும் நிலையில் அந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக அஜித்த தற்பொழுது திருச்சியில் உள்ளார் என்பது நாம் அனைவரும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் தற்பொழுது நிகழ்ச்சியின் பொழுது தன்னிடம் பேசியிருந்த ஒரு பெண்ணின் தலையில் கை வைத்து அவர் நன்றாக இருக்க வேண்டும் என ஆசிர்வாதம் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் பின்னணியில் அஜித் வேதாளம் படத்தில் பேசிய வசனமான பெண்கள் எல்லோரும் ஸ்கூலுக்கு போகட்டும், காலேஜுக்கு போகட்டும், வேலைக்கு போகட்டும் நிம்மதியாக இருக்கட்டும் என்ற வசனமும் ஒலிக்கின்றது .பெண்கள் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கும் அஜித்தின் இந்த வீடியோவை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வைரலாக்கி வருகிறார்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பல கமெண்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

dhanush vaathi

படிப்பை பிரசாதம் மாதிரி குடுங்க என தனுஷ் பேசும் வாத்தி பட டீசர் இதோ.!

தமிழ் சினிமா மூலம் அறிமுகமாகி தற்பொழுது பல மொழி திரைப்படங்களிலும் நடித்து சினிமாவில் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். பொதுவாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்ததால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்தார்.

இவ்வாறு நடித்து வந்த இவர் தற்பொழுது ஹோலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இவ்வாறு வளர்ந்து வரும் இவர் தொடர்ந்து சிறப்பான இயக்குனர்களுடன் கதைகளை கேட்டு தேர்ந்தெடுத்து நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இதுவே இவர் திரையுலகில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்.

இந்நிலையில் தற்பொழுது இவர் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். யார் இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடந்து வருவதால் மேலும் இவருக்கு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது அதனை வேண்டாம் என தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் இவர் இன்று தன்னுடைய பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். தொடர்ந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் இவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக சோசியல் மீடியாவில் ஏராளமான தகவல் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வாத்தி டீசர் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. படிப்பு பிரசாதம் மாதிரி அதை 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு போல விக்காதீங்க என தனுஷ் பேசிய முக்கிய கருத்து ட்ரைலரில் வெளியாகிவுள்ளது. இவ்வாறு தனுஷ் இப்படத்தில் சமூகத்திற்கு நல்ல கருத்தை கூறும் வகையில் நடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த டீசர்.