prince

பிரின்ஸ் படத்தை பாக்குறதுக்கு அந்தப் படத்தை பார்த்து விடலாம்.! கேள்விக்கும் கிண்டலாக்கும் ஆளான சிவகார்த்திகேயன் படம்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் தற்பொழுது பிரின்ஸ் திரைப்படம் வெளியாகியிருக்கிறது இந்த படத்தினை அனுதீப் அவர்கள் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த டான், டாக்டர் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றினை பெற்றது இதன் காரணமாக இந்த படங்களைப் போலவே பிரின்ஸ் திரைப்படம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள்.

மேலும் இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி, சூரி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உலகநாதன் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் அவர்கள் நடித்திருக்கிறார்களா அவர் தன்னுடைய குடும்பத்துடன் பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.

இவர் ஜாதி, மதம் என அடித்துக் கொள்ளும் மக்கள் மத்தியில் அதை எல்லாம் தேவையில்லாத ஒன்று மனிதம் தான் முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார் ஊருக்கே உதாரணமாக விளங்கும் சத்யராஜின் மகனான மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் அங்குள்ள பள்ளியில் சோசியல் சயின்ஸ் வாத்தியாராக பணியாற்றி வருகிறார்.

அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக கதாநாயகி மரியா பணியாற்றி வருகிறார் இவரைப் பார்த்தவுடன் சிவகார்த்திகேயன் காதலில் அதன் பிறகு ஜெசிகாவுடன் நெருக்கமாக சிவகார்த்திகேயன் பாடக ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை கூறுகிறார். எனவே ஜெசிக்காவை இம்பரஸ் செய்வதற்காக சிவகார்த்திகேயன் பல விஷயங்களை செய்து வருகிறார்.

https://twitter.com/Arunn_Afc/status/1583364771747074055?s=20&t=4qgDkIMySCTbxLjs45BHTg

அதன் பிறகு ஜெசிக்காவுக்கும் சிவகார்த்திகேயனின் மீது காதல் ஏற்படுகிறது. தனது தந்தையிடம் இதுதான் காதலிக்கும் பெண் என ஜெசிக்காவை காட்ட சத்யராஜ் ஜெசிக்காவை மருமகளாக ஏற்க மறுக்கிறார் மேலும் தந்தையும் இவர்களுடைய காதலருக்கு மறுக்கிறார் இவ்வாறு அனைத்து பிரச்சினைகளையும் சம்பா சமாளித்து தன்னுடைய காதலியை எப்படி சிவகார்த்திகேயன் திருமணம் செய்வாரா? இல்லையா? என்பதை இந்த படத்தின் கதை.

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் பெரிதாக இருந்த படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் படும் தோல்வியினை சந்தித்து வருகிறது எனவே தொடர்ந்து பிரின்ஸ் படத்தினை கலாய்த்து வருகிறார்கள்.

dhanalakshmi

ரயில் வண்டியை போல் புகையை தள்ளும் பிக்பாஸ் தனலட்சுமி.! வீடியோவை பார்த்த அதிர்ச்சியாகும் ரசிகர்கள்

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி தொடங்கி பத்து நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் முந்தைய சீசன்களை விட அதிக போட்டியாளர்களை களம் இறக்கி இருக்கிறார்கள். மேலும் 21 போட்டியாளர்கள் பங்குபெற்று வரும் நிலையில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஏராளமான சண்டைகளும் நடைபெற்று வருகிறது. வர வர சந்தை கடையவையே தோற்கும் அளவிற்கு பல பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது.

மேலும் வழக்கம் போலவே இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற வேண்டும் என்பதற்காக பல மாற்றங்களை இந்த சீசனில் செய்திருக்கிறார்கள். முதன்முறையாக மைனா‌‌ நந்தினி வைல்ட்டு கார் என்றியாக அறிமுகமானார். இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் தனலட்சுமி.

இவர் ஈரோட்டை சேர்ந்தவர் இவருடைய வீடியோக்கள் மூலம் 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை பெற்றிருக்கிறார் மேலும் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சிறு வயதிலிருந்து இவருக்கு நடிப்பதில் ஆர்வம் இருந்துள்ளது எனவே குறும்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்கள் போன்றவற்றிலும் நடித்திருக்கிறார்.

https://youtu.be/V7zQGk-q4Tw

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களில் பல ஹியேட்டர்ஸ்களை சம்பாதித்தார் இதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்துவை பகைத்துக் கொண்டதுதான். அதன் பிறகு தன்னுடைய வாழ்வில் அடைந்த இவருடைய கதைகளை கூற அனைவரும் கண்கலங்கி உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் தற்பொழுது ஜிபி முத்து ரசிகர்கள் தனலட்சுமியையும் நாமினேஷனிலிருந்து நிச்சயம் காப்பாற்றுவோம் என கூறி வருகிறார்கள்.

https://youtu.be/OmQosciNH04

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் இவர் டிக் டாக்கில் போட்ட பல வீடியோக்களை விமர்சித்து வருகிறார்கள் ரசிகர்கள் அந்த வகையில் இவர் முட்டைகளை போட்டு உடைத்து நாசம் செய்த வீடியோவை பார்த்து இவர்தான் ஏழை குடும்பத்திலிருந்து வந்தார் என கேலி செய்தனர் மேலும் இதனை தொடர்ந்து சிகரெட்டை ஊதி தள்ளி போட்ட வீடியோவையும் பகிர்ந்து அவரை விமர்சித்து வருகிறார்கள்.

vijay-sethupathy

நடிகர் விஜய் சேதுபதி குரலில் வெளியாகி உள்ள ‘கேடி தி டெவில்’ படத்தின் டிரைலர் இதோ.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரேம் இயக்கத்தில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது அவர்களுடைய நடிப்பில் கேடி தி வில் என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. தற்பொழுது இந்த படத்தின் டைட்டில் மற்றும் ட்ரெய்லர் போன்றவற்றை பட குழுவினர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதாவது இயக்குனர் ஷோமேன் பிரேம் அவர்களின் இயக்கத்தில் துருவா சஜா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் கேடி தி டெவில் இந்த படத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடித்திருக்கிறார் மேலும் இதனை தொடர்ந்து கேவிஎன் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்து இருக்கிறது மேலும் அர்ஜுன்யா இசையமைத்து இருக்கிறார் தற்பொழுது இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு கேடி‌ தி டெவில் என படக் குழுவினர்கள் பெயர் வைத்துள்ளார்கள். இவ்வாறு ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த இந்த படம் தமிழினைத் தொடர்ந்து கன்னடம், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் உருவாகி இருக்கிறது மேலும் இந்த பட டீசருக்கு மேற்கண்ட அனைத்து மொழி ஹீரோக்களும் குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருக்கிறார் ஹிந்தி மற்றும் மலையாள பதிவுக்கு சஞ்சய் தத், மோகன்லால் மற்றும் கன்னட பதிவிற்கு இயக்குனர் குரல் கொடுத்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில், டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பிரேம் கூறியதாவது எங்கே நல்லது இருக்கிறதோ அங்கே கேட்டது இருக்கும் உதாரணத்திற்கு ராமன் இருந்தபோது இராவணனும் இருந்தான் படத்தில் இதே போன்ற வரிகள் உள்ளனர்.

இந்த படம் ரத்தம் தோய்ந்த கதை மட்டுமல்ல காதல் மற்றும் அறம் கலந்த கதை இந்த படம் கே ஜி எஃப் மற்றும் புஷ்பாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என கூறியுள்ளார் தமிழில் இந்த படத்தினை உதயநிதி என்ற ஜெயன் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

bigg boss

மாறி மாறி நாமினேட் செய்து கொள்ளும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.! வெளிவந்த ப்ரோமோ..

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் தற்போது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல எதிர்பார்ப்புகளுடன் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் மாசாக இருந்து வருகிறது. அதாவது தற்பொழுது வரையிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் சர்ச்சைக்குரிய பிரபலங்களை தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.

அந்த வகையில் 20 போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ள நிலையில் 40 நாட்களில் நடக்கக்கூடிய அனைத்து சண்டை சச்சரவுகளும் நான்கு நாட்களில் நடந்து வருகிறது மேலும் கடுமையான போட்டிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது புதிதாக மைனா நந்தினி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

மேலும் விவரத் தொடர்ந்து இன்னும் சில பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் இணைய உள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியின் முதல் தலைவராக ஜிபி முத்து வெற்றி பெற்றிருக்கிறார் பெரும்பாலும் ஜிபி முத்து தான் இந்நிகழ்ச்சியின் வெற்றி பெறுவார் எனக் கூறிவரும் நிலையில் ரசிகர்களுக்கு ஜிபி முத்துவை மிகவும் பிடித்திருக்கிறது.

அந்த வகையில் இவர் தலைவராக வெற்றி பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சிய ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இன்று முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில் இந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்று உள்ளது மேலும் அதிகமாக ஆயிஷா, சாந்தி, ரட்சிதா போன்றவர் நாமினேட்டாகி இருக்கிறார்கள்.

இந்த ப்ரோமோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரக்ஷிதாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இமேஜ் இருந்து வருகிறது இதன் காரணமாக இவர் இந்த வீட்டை விட்டு விரைவில் செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

biggboss-6

ஜனனிக்கு மாறி மாறி ப்ரொபோஸ் செய்த இரண்டு போட்டியாளர்கள்.! இங்க என்ன நடக்குது.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிடி ஷோவான பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்த அனைத்து போட்டியாளர்களையும் ஜனனி கவர்ந்து வரும் நிலையில் தற்பொழுது ஜனனிக்கு இரண்டு சக போட்டியாளர்கள் மாறி மாறி ப்ரபோஸ் செய்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நேற்றைய நிகழ்ச்சியில் ஜனனி, மகேஸ்வரி, ஆயிஷா, ராம், மணிகண்டன், அசல் கோளாறு உள்ளிட்டவர்கள் இணைந்து பொழுதுபோக்கிற்காக ஒரு ஆடிஷன் போன்று நடத்தலாம் என முடிவு செய்து இருக்கிறார்கள் அப்பொழுது ஒரு பெண்ணிடம் காதல் ப்ரபோஸ் செய்வது எப்படி என்பது குறித்து நான் அந்த ஆடிஷன் நடக்கும் எனவும் இதனை அனைவரும் முயற்சிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.

எனவே முதல் கட்டமாக மணிகண்டன் ஜனனியிடம் ப்ரொபோஸ் செய்கிறார் அவர் ப்ரொபோஸ் செய்த நடிப்பை பார்த்து ஜனனி அதிர்ச்சி அடைகிறார். மணிகண்டனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஜனணியிடம் அசல் கோளாறு தன்னுடைய ஸ்டைலில் ஒரு ராப் பாட்டை பாடி என்னை உனக்கு பிடிக்குதா பிடிக்கவில்லையா.? என்று சொல்லுங்கள் பிடிக்கவில்லை என்றால் இனிமேல் நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் என்றும் அசத்தலாக நடித்துக் காண்பிக்கிறார்.

மேலும் இவர்கள் இருவரையும் தொடர்ந்து ஆயிஷாவுக்கு ராம் ப்ரொபோஸ் செய்கிறார் இதுபோன்ற மிகவும் ஜாலியாக இவர்கள் விளையாடக் கொண்டிருக்கிறார்கள் மேலும் இவர்கள் பொழுதுபோக்கிற்காக இவ்வாறு காமெடி காட்சிகளை நடத்தியுள்ளார்கள் இது ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மேலும் இது குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ஏராளமான ரசிகர்கள் இது நடிப்பிற்காக ப்ரபோஸ் செய்திருந்தாலும் இந்த போட்டியாளர்கள் உண்மையிலேயே ஜனனிக்கு இந்த சீசன் முடிவதற்குள் ப்ரப்போஸ் செய்வார்கள் என கூறி வருகிறார்கள் இது குறித்து பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

https://youtu.be/GJjS8jNbvwI

sardhar

அதிரடியாக உலக நாயகன் கமலஹாசனை பொல பல கெட்டபில் கார்த்தி நடித்துள்ள சர்தார் பட ட்ரெலர்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன் இந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றது.

இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது இவர் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை பிஎஸ் மித்ரன் இயக்க ராசி கண்ணா, ரஷிஷா விஜயன், முரளி ஷர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு லைலா இந்த திரைப்படத்தினை தயாரிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி தருகிறது.

இவ்வாறு இந்த திரைப்படத்தை மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் சர்தார் படத்திற்கு போட்டியாக நடிகர் சிவகார்த்திகேயனின் பிரண்ட்ஸ் திரைப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது இவ்வாறு இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படங்கலுக்கிடையே கடும் போட்டி நிலவ இருக்கிறது என கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது கார்த்திக் நடித்துள்ள சர்தார் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது கார்த்திக் நடிப்பில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்கு பிறகு சர்தார் திரைப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் .மேலும் உலகநாயகன் கமலஹாசன் போல பல கெட்டப்பில் கார்த்திக் வலம் வருவது மேலும் சர்தார் படம் உளவாளிகளை மையமாக வைத்து ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக அமைந்துள்ளது. மேலும் காதல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக் தன்னுடைய உயிரை பணயம் வைத்து பல காட்சிகளில் நடித்துள்ளார் எனவே கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ கார்த்திக் நடித்துள்ள சர்தார் பட ட்ரெய்லர்.

keerthi-suresh-1

லுங்கி கட்டிக்கொண்டு தன்னுடைய பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.! வாயை பிளக்கும் ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு என தொடர்ந்து இரண்டு மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ் இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் ஆடும் வீடியோக்களை பதிவு செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

மேலும் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்பொழுது லுங்கி கட்டிக்கொண்டு செம டான்ஸ் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ளார் இதற்கு லைக்குகளும் கமாண்டுகளும் குவிந்து வருகிறது. சோசியல் மீடியாவில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் சுமார் 17 மில்லியனுக்கும் அதிகமான பாலோசர்களை வைத்துள்ளார்.

இதன் காரணமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகளவில் ரீச்சாகி வருகிறது இவ்வாறு திரைப்படங்களில் நடிப்பதை விட இதில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் தற்பொழுது பிரபல முன்னணி நடிகர் நானியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் தசரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது தாம் தூம் என்று தொடங்கும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் சோசியல் மீடியாவில் ரீச்சாகி உள்ள நிலையில் தன்னுடைய தோழியுடன் இணைந்து லுங்கி கட்டிக்கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த படத்தினை ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வருகின்ற மார்ச் மாதம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ரிலீசாக இருப்பதாக கூறியுள்ளார்கள். மேலும் இதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் தற்பொழுது உதயநிதியுடன் இணைந்து மாமன்னன், சிரஞ்சீவி உடன் போலோ சங்கர் உள்ளிட்ட நான்கு திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

வீடியோவை பார்க்க எங்களுக்கு கிளிக் செய்யவும்.

kandhara

பக்கா பிளான் போட்டு தமிழில் ‘காந்தாரா’ படத்தினை வெளியிட்ட படக் குழுவினர்கள்.! ட்ரெய்லர் இதோ..

பொதுவாக ஒரு சில திரைப்படங்கள் வெற்றி பெற்ற பிறகு அதனை மற்ற மொழிகளில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் எந்த ஒரு கதை மிகவும் நன்றாக இருப்பதாக தோன்றுகிறதோ  கண்டிப்பாக இந்த கதை படமாக்கப்பட்டால் அனைத்து மொழிகளிலும் ஹிட் ஆகும் என நினைத்து ஒரே படத்தினை மற்ற மொழிகளிலும் அதே கதை அம்சத்துடன் ஒளிபரப்புவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

அந்த வகையில் கன்னட சினிமாவில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் காந்தாரா. இந்த திரைப்படம் வருகின்ற 15-ம் தேதி தமிழகத்திலும் வெளியாக இருக்கிறது கே ஜி எப் படத்தினை போலவே இந்த படம் வெற்றி நடை போடும் என ட்ரீம் வாரியர்ஸ் செம பிளான் ஒன்றை போட்டுள்ளது.

அதாவது கே ஜி எஃப் கே ஜி எஃப் 2 மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் காந்தாரா என்ற திரைப்படத்தையும் தயாரித்து இருக்கிறது‌. இதனைத் தொடர்ந்து ரிஷப் செட்டி என்பவர் இந்த படத்தினை இயக்கியிருக்கிறார்.

இந்த படம் கடந்த 30ஆம் தேதி அன்று வெளியானது கன்னத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் இந்த படத்தினை கர்நாடகாவை தொடர்ந்து தமிழகம் மற்றும் ஆந்திரம் போன்ற இடங்களிலும் இந்த படத்தினை பற்றி பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காந்தாரா படத்தினை தமிழ், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதற்காக முடிவு செய்துள்ளார்கள்‌.

மேலும் கே ஜி எஃப் படத்தின் தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதால் தமிழகத்தில் ட்ரீம் வாரியார் நிறுவனம் சார்பில் எஸ் ஆர் பிரபு வெளியிடுகிறார் இந்த சுமார் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

vetri-maran

வாடிவாசல் படத்திற்கு முன்பே வெளிவந்த வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ படத்தின்‌ ட்ரெய்லர் இதோ.!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் வெற்றிமாறன் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களை இயக்கி மிகவும் பிசியாக இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவருடைய இயக்கத்தில் விடுதலை திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தினை இயக்க இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தின்  அப்டேட்களுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள் மேலும் வாடிவாசல் திரைப்படத்தின் நடிப்பதற்காக சூர்யா தன்னுடைய வீட்டில் இரண்டு காளை மாடுகளை வாங்கி பயிற்சி செய்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் பேட்டைக்காளி என்ற திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தில் கலையரசன், கிஷோர், ஷீலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி வழியாக வெளியாக இருக்கிறது. இந்த படம் நம்மளுடைய பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டு மையமாக வைத்து உருவாகியுள்ளது அந்த வகையில் இந்த ட்ரெய்லரின் ஆரம்பத்தில் உலகின் மூத்த குடிமக்களின் பாரம்பரிய விளையாட்டு சார்ந்த பதிவு என்னும் எழுத்துடன் காலை சீறி வருகிறது.

அடங்காத திமில், கூரான கொம்பு என பார்க்கவே சிலிர்க்க வைக்கும் அளவிற்கு காளையின் பார்வை இருக்கிறது. மேலும் இந்த ட்ரெய்லரில் பார்க்கும் ஒவ்வொரு காட்சியும் காளைகளின் முக்கியத்துவத்தை பற்றி கூறும் வகையில் அமைந்திருக்கிறது மேலும் அந்த ஜல்லிக்கட்டு போட்டியை வைத்து ஊருக்குள் கலவரங்களும் நடைபெறுகிறது மேலும் ஒவ்வொரு வசனமும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது இதோ அந்த ட்ரெய்லர்.

ட்ரைலரை பார்க்க இந்த கிளிக் செய்யவும்.

gp-muthu

இந்த சீசனின் நாரதர் ஜிபி முத்து தான்.! என அடுத்தடுத்த பிரச்சனையை உண்டாக்கும் பிரபலம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் துவங்கப்பட்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் எப்பொழுதும் போல மிகவும் அருமையாக தொகுத்து வழங்கினார்.

இப்படிப்பட்ட நிலையில் இரண்டு நாட்களாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்றிலிருந்து ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது அதாவது நேற்று டீ போடுவது தொடர்பாக பிரச்சனைகள் வெடித்தது இன்று சாம்பார் செய்வது தொடர்பாக சண்டை ஆரம்பித்துள்ளது. அதாவது மகாலட்சுமி மற்றும் தனலட்சுமி ஆகியோர்கள் எப்படி சண்டை போட்டுக் கொண்டார்கள் என்பதை இரண்டாவது ப்ரோமோவாக விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது.

மேலும் இதனை தொடர்ந்து மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாக இருக்கும் நிலை எல்லா அதில் ஜிபி முத்து தான் இந்த வீட்டில் நாரதர் வேலை பார்க்கிறார் என தனலட்சுமி தூரத்தில் நின்று கேமரா ‌முன் கூறி இருக்கிறார். இதன் காரணமாக இனி வரும் நாட்களில் ஜிபி முத்து மற்றும் மகாலட்சுமிக்கு இடையே பிரச்சனை வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்த ப்ரோமோவின் மூலம் தெரிய வருகிறது.

மேலும் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் மிகவும் ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக தற்பொழுது வரையிலும் இல்லாத அளவிற்கு 20 போட்டியாளர்களை களமிறக்கி இருக்கிறார்கள் மேலும் அந்த 20 போட்டியாளர்களுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் தான்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி விடும் கிரண் பங்கு பெற இருப்பதாகவும் இவருக்கு ஒரு நாளைக்கு 1.5 லட்சம் சம்பளம் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.