சிரிப்பால் ரசிகர்களை கொள்ளையடித்த நடிகர் போண்டாமணி மறைவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

bonda mani passed away  : நடிகர் போண்டாமணி இலங்கையை பூர்விகமாக கொண்டவர் இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படம் பாக்யராஜ் திரைப்படம் இப்படி பாக்கியராஜ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான போண்டாமணி தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் துணை நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்து புகழ்பெற்றார். இவர் நடிப்பில் வெளியாகிய சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதுமட்டுமில்லாமல் 2019 ஆம் ஆண்டு வெளியாகிய தனிமை என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

ஆளவந்தான் படத்தில் கமலுக்கு டூப் போட்டது இவர்தான்.. 22 வருடங்கள் கழித்து வெளியான ரகசியம்

அதிலும் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் இந்த நிலையில் கடந்தாண்டு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் மாதம் ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.

டிசம்பர் 23ஆம் தேதி இரவு 11:30 மணி அளவில் பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில்  இருக்கும் தன்னுடைய வீட்டில் நடிகர் போண்டாமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார் அப்பொழுது அருகில் உள்ள உறவினர்கள் அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

சிரிப்பால் ரசிகர்களை கொள்ளையடித்த நடிகர் போண்டாமணி மறைவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

எதிரில் போண்டா மணியின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.