ஃபுல் மாப்பில் பெண்களிடம் அத்துமீறிய இயக்குனர் சீனு ராமசாமி.! வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றும் பிரபலம்..

seenu ramasamy : சினிமாவில் முதலில் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது அதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மற்றும் திரிஷா விவகாரம் பற்றி எரிந்தது. இந்த விஷயம் இன்னும் ஆறுவதற்குள் அடுத்த விஷயம் பூதகரமாக வெடித்துள்ளது. அதாவது பருத்திவீரன் பஞ்சாயத்து ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் சீனு ராமசாமி பற்றிய தகவல் தான் மிகவும் வைரலாகி சென்று கொண்டிருக்கிறது.

இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு தொல்லை கொடுத்ததாக பிஸ்மி கூறி இருந்தார் ஆனால் இதனை மறைக்கும் விதமாக சீனு ராமசாமி அவர்கள் மனிஷா யாதவுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது அவர்களிடம் நான் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் இப்பொழுது கூட என்னுடைய பட வாய்ப்பு அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறது எனவும் கூறியிருந்தார்.

நயன்தாரா படத்தில் பிக்பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி.. எத்தனை பேர் நோட் பண்ணிங்க.. வைரலாகும் புகைப்படம்

ஆனால் மனிஷா யாதவ் இதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார் மனிஷா யாதவ் சினிமாவை வேண்டாம் என சிறிது காலம் தள்ளி இருந்ததற்கு காரணம் சீனு ராமசாமி எனவும் இவரால்தான் எல்லாப் பிரச்சனையும் என பிஸ்மி கூறி இருந்தார். மேலும் மனிஷா யாதவ் கூறியதாவது மனிதர்களை மதிக்க தெரியாத ஆள் தான் சீனு ராமசாமி என ஒரு குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

ஸ்ருதி மேல் ஆசிட் வீச வந்த விச்சு.. கல்லால் அடித்து ஓடவிட்ட மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிஸ்மி அவர்கள் ஒரு பேட்டியில் சீனு ராமசாமி குறித்து பேசி உள்ளார் அதாவது சிறந்த இயக்குனருக்கான விருது ஒரு முறை நார்வேரியில் வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு சீனு ராமசாமி அவர்களும் தேர்வு செய்யப்பட்டார் அப்பொழுது வெளிநாட்டில் சீனு ராமசாமி அவர்கள் மது போதையில் பெண்களிடம் அத்துமீறி உள்ளார் இது அங்கு உள்ள தமிழர்களுக்கு தெரியும் என பிஸ்மி கூறியுள்ளது பெரும் பூதகரமாக வெடித்துள்ளது.

இப்படி சீனு ராமசாமி பற்றி ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் முடிச்சுகள் எங்கு போய் முடியப் போகிறதோ தெரியவில்லை என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.