பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த 2 குக் வித் கோமாளி பிரபலங்கள்.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

Bigg Boss season 7: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பல திருப்பங்களுடன் சுவாரசியமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பில் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.

முக்கியமாக ஐந்து பேர் வைல்ட் கார்டு என்ட்ரிக்கு பிறகு ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் ரசிகர்கள் சூனியக்காரி மாயா ஏஜென்ட் டீமுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். தினேஷ், அர்ச்சனா, விசித்ரா மூன்று பேருக்கும் எதிராக சூனியக்காரி மாயாவின் ஏஜென்ட் டீம்  செயல்பட்டு வந்த நிலையில் இவர்களை ஒவ்வொருவராக வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் காத்து வருகின்றனர்.

தீபாவளி அன்றும் ஏமாற்றம் தான்.. முதல் நாளை விட 3வது நாளில் குறைந்த ஜப்பான் வசூல்..

அப்படி முதல் கட்டமாக நேற்று ஐஷூ மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவரை அடுத்து பூர்ணிமா இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வார கேப்டன் ஆக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் மாயா ஏஜென்ட் டீமை ஒரு வழி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் இரண்டு புதிய நபர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த புகழ் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே இருவரும் தான் விருந்தினராக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். கொளுத்தி போடு பட்டாசு என்ற புதிய டாஸ்க் நடைபெறுகிறது.

எதிர்வீட்டு பெண்ணுடன் சவகாசம் வைத்துக் கொண்டதால் பாண்டியனிடம் தர்ம அடி வாங்கிய கதிர் -பாண்டியன் ஸ்டோர் 2 இன்றைய எபிசோட்..

அதில் ஒவ்வொருவராக ஒவ்வொரு பட்டாசையும் எடுத்து அந்த பட்டாசுடன் போட்டியாளரை ஒப்பிட்டு ஒரு நபருக்கு கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க் நடைபெறுகிறது. போட்டியாளர்களுக்கு மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக விருந்தினர்களாக இருவரும் வந்துள்ளனர்.