விஜய், அனன்யா சொன்னதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழும் பூர்ணிமா.! எப்படி தினேஷை மட்டும் பாராட்டலாம்? திருந்தாத சூனியக்காரிகள்

Bigg Boss 7 Tamil today promo 3: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆரம்பத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அனன்யா மற்றும் விஜய் வர்மா என்ட்ரி கொடுப்பதால் அனைத்து போட்டியாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். முக்கியமாக மாயா, பூர்ணிமா இருவரும் இவர்கள் சொன்னதை புரிந்து கொள்ளாமல் குறை சொல்லி வரும் இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதாவது 56 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா, பூர்ணிமா சேர்ந்து செய்து வந்த ஏராளமான விஷயங்கள் ரசிகர்களை மிகவும் கடுப்பேற்றியது. எனவே அந்த ஏஜென்ட் டீமை பழிவாங்க வேண்டும் என ஒவ்வொருவராக வெளியேற்றி வருகிறார்கள். அப்படி இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று அக்ஷயா வெளியேறினார்.

‘ஆட்டோகிராப்’ பட நடிகை கோபிகாவா இது? குடும்பம் குட்டி என ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய புகைப்படம்..

இவரிடத்தில் இந்த வாரம் சரவண விக்ரம் அல்லது பூர்ணிமா இவர்களில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்று இருக்கும் நிலையில் வந்ததிலிருந்து விஜய் வர்மா, அனன்யா இருவரும் கூறியதை கேட்டுக் கொண்டு பூர்ணிமா மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்காமல் அவர்களை குறை சொல்லி மாயாவிடம் அழுது புலம்பிவுள்ளார்.

மேலும் இந்த வார ஓபன் நாமினேஷனில் மாயா ஒன்னு நான் இருக்கணும் இல்லைனா பூர்ணிமா இருக்க வேண்டும் என கூறி பூர்ணிமாவை நாமினேட் செய்துள்ளார். தற்பொழுது வெளியாகியிருக்கும் இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் மாயாவிடம் பூர்ணிமா என்ன பத்தி விஜய், அனன்யா சொன்னதும் செம காண்டு ஆயிடுச்சு என கூறுகிறார்.

விவகாரத்திற்கு பின் 2 குழந்தைகளுக்கு தாயாகும் நடிகை சமந்தா.! இறுதி வாழ்க்கை இவர்களுடன் தான்..

நாமினேட் செய்யும் பொழுது எல்லாருக்கும் அமைதியாக இருப்பதாகவும் தனக்கு மட்டும் பேசுவதாகவும் தினேஷுக்கு சப்போர்ட் பண்ணி பேசுவது என அனைத்தும் தனது கடுப்பாக இருப்பதாக கூறி அழ மாயா பாத்துக்கலாம் என ஆறுதலாக இருக்கிறார்.